திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

வாழாப்பத்து இதன்கண், 'வருக என்றருள் புரியாயே' என்பதனால் முத்தியுபாயம் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க. வசைசிலுண் 450 பண்ணினேர் மொழியாள் பங்கநீ யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் திண்ணமே யாண்டாய் சிவபுரத் தரசே திருப்பெருந் துறையுறை சிவனே எண்ணமே யுடல்வாய் மூக்கொடு செவிகண் என்றிவை நின்கணே வைத்து மண்ணின்மே லடியேன் வாழ்கிலேன் கண்டாய் வருகவென் றருள்புரி யாயே. 1021 ப - ரை. பண்ணின் நேர் மொழியாள் பங்க-பண்ணின் இனிமையை ஒத்த இனிமை பொருந்திய மொழியையுடைய உமையம்மை பாகனே, யான் மற்றுபற்று இலேன் - யான் நின் பற்றன்றிப் பிறிதொரு பற்றும் உடையேனல்லேன்; திண்ணமே ஆண்டாய் - நிச்சயமாகவே ஆட் கொண்டவனே, சிவபுரத்து அரசே - சிவபுரத்துக்கு வேந்தனே, திருப் பெருந்துறை உறை சிவனே - திருப்பெருந்துறையில் எழுந்தருளிய சிவ பெருமானே, எண்ணமே உடல் வாய் மூக்கொடு செவி கண் என்று இவை நின் கண்ணே வைத்து -நினைத்தற்குக் கருவியாகிய மனத்தினை யும் மெய்யும் வாயும் மூக்கும் செவியும் கண்ணும் ஆகிய ஐம்பொறி களினையும் உன்னிடத்தில் வைத்திருத்தலால், மண்ணின்மேல் அடி யேன் வாழ்கிலேன் - மண்ணுலகில் அடியேன் வாழும் ஆற்றலுடையே னல்லேன்; வருக என்று அருள்புரியாய் - அடியேனை இங்கு வருக என்று அழைத்தருள்வாயாக. 4 உமையம்மை பாகனே,நின் பற்றன்றிப் பிறிதொருபற்றும் உடை யேனல்லேன். திண்ணமே ஆட்கொண்டவனே, சிவபுரத்து அரசே, திருப்பெருந்துறையுறை சிவனே, மனத்தினையும் ஐம்பொறிகளையும் உன்னிடத்தில் வைத்திருத்தலால் மண்ணின்மேல் யான் வாழும் ஆற் றலுடையேனல்லேன்; வருக என்று அருள்புரிவாயாக என்பதாம். பண்ணினேர் மொழியாள் என்றது பண்ணின் இனிமையை ஒத்த இனிமை பொருந்திய மொழியையுடைய உமையம்மையை. ''பண்ணினேர் மொழியாளையொர் பாகனார்'' 'பண்ணினேர் மொழியாளுமை பங்கரோ" ''பண்ணினேர் மெ ழியளையொர் பங்குடையாய்'' எனத் தேவாரத்தும் வருவன காண்க ஞான.304 - 0 நாவு.123- 1 சுந். 42 - 4 பண் - பாட்டின்கணுள்ள இனிய இசை, நேர் - உவமையுருபு திண்ணம் - நிச்சயம்.
வாழாப்பத்து இதன்கண் ' வருக என்றருள் புரியாயே ' என்பதனால் முத்தியுபாயம் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க . வசைசிலுண் 450 பண்ணினேர் மொழியாள் பங்கநீ யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் திண்ணமே யாண்டாய் சிவபுரத் தரசே திருப்பெருந் துறையுறை சிவனே எண்ணமே யுடல்வாய் மூக்கொடு செவிகண் என்றிவை நின்கணே வைத்து மண்ணின்மே லடியேன் வாழ்கிலேன் கண்டாய் வருகவென் றருள்புரி யாயே . 1021 - ரை . பண்ணின் நேர் மொழியாள் பங்க - பண்ணின் இனிமையை ஒத்த இனிமை பொருந்திய மொழியையுடைய உமையம்மை பாகனே யான் மற்றுபற்று இலேன் - யான் நின் பற்றன்றிப் பிறிதொரு பற்றும் உடையேனல்லேன் ; திண்ணமே ஆண்டாய் - நிச்சயமாகவே ஆட் கொண்டவனே சிவபுரத்து அரசே - சிவபுரத்துக்கு வேந்தனே திருப் பெருந்துறை உறை சிவனே - திருப்பெருந்துறையில் எழுந்தருளிய சிவ பெருமானே எண்ணமே உடல் வாய் மூக்கொடு செவி கண் என்று இவை நின் கண்ணே வைத்து -நினைத்தற்குக் கருவியாகிய மனத்தினை யும் மெய்யும் வாயும் மூக்கும் செவியும் கண்ணும் ஆகிய ஐம்பொறி களினையும் உன்னிடத்தில் வைத்திருத்தலால் மண்ணின்மேல் அடி யேன் வாழ்கிலேன் - மண்ணுலகில் அடியேன் வாழும் ஆற்றலுடையே னல்லேன் ; வருக என்று அருள்புரியாய் - அடியேனை இங்கு வருக என்று அழைத்தருள்வாயாக . 4 உமையம்மை பாகனே நின் பற்றன்றிப் பிறிதொருபற்றும் உடை யேனல்லேன் . திண்ணமே ஆட்கொண்டவனே சிவபுரத்து அரசே திருப்பெருந்துறையுறை சிவனே மனத்தினையும் ஐம்பொறிகளையும் உன்னிடத்தில் வைத்திருத்தலால் மண்ணின்மேல் யான் வாழும் ஆற் றலுடையேனல்லேன் ; வருக என்று அருள்புரிவாயாக என்பதாம் . பண்ணினேர் மொழியாள் என்றது பண்ணின் இனிமையை ஒத்த இனிமை பொருந்திய மொழியையுடைய உமையம்மையை . ' ' பண்ணினேர் மொழியாளையொர் பாகனார் ' ' ' பண்ணினேர் மொழியாளுமை பங்கரோ ' ' பண்ணினேர் மெ ழியளையொர் பங்குடையாய் ' ' எனத் தேவாரத்தும் வருவன காண்க ஞான .304 - 0 நாவு.123- 1 சுந் . 42 - 4 பண் - பாட்டின்கணுள்ள இனிய இசை நேர் - உவமையுருபு திண்ணம் - நிச்சயம் .