திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

1024 திருவாசக ஆராய்ச்சியுரை உலகில் வாழ்கிலேன் - இவ்வுலகில் வாழுமாற்றலுடையேனல்லேன்; வருக என்று அருள் புரியாயே - இங்கே வருக என்று அழைத்தருள்வா யாக. பருதி வாழ் ஒளியாய், நின் பாதமே யல்லால் பிறிதொரு பற்றும் உடையேனல்லேன்; சிவபுரத்தரசே, திருப்பெருந்துறை யுறை சிவனே, நின் திருவருளையே கருதி உளம் கசிந்து உருகி நான் கலந்து வாழும் நெறியை அறியாத மயக்கமுடையேனாயினும் உலகில் வாழும் ஆற்றலுடையேனல்லேன்; இங்கே வருக என்று அழைத்தருள்வாயாக என்பதாம். au ama சூரிய மண்டலத்தின் மத்தியில் இறைவன் சதாசிவ மூர்த்தியாய் எழுந்தருளியுள்ளான் என்னும் ஆகம வழக்குப் பற்றிப் பருதி வாழ் ஒளியாய் என்றார். "விரிந்த பல்கதி ருடையதோர் வெய்யவ னடுவட் பொருந்தி வைகிய கண்ணுதற் பரமனே போன்றான்" கந்த. அவை புகு. 59 எனவும், "மாறிலா வருக்க னாப்பண் வைகிய பரமனே போல் ஆறுமா முகத்து வள்ளல் அலங்குளைப் புரவி மான்தேர் ஏறினான்” சூரபன்மன் வதை 47 எனவும் கந்தபுராணம் கூறலானும், t உங் தேவ (சிவ) சூரியனுக்கு மத்தியிலேயுள்ள எந்தப் பர்க்கர் எங்கள் அறிவிச்சை கிரியைகளைச் செலுத்துகின்றனரோ அம்முக்கியப் பொரு ளாயினாரைத் தியானிக்கின்றோம்' என்று யாஞ்ஞவற்கியர் கூறலானும் பருதியின் மத்தியில் சிவபெருமான் எழுந்தருளியிருத்தல் அறியப் படும். திருவுயர் கோலம் - கண்டாரால் விரும்பப்படும் தன்மை நோக் கம் மிக்க அழகு. கோலச் சிவபுரம் என்க. மற்றும் உலகப்பற்றுக்களை நோக்காது கருணையே நோக்கி எனப் பொருள் தருதலால் ஏகாரம் தேற்றம். கலந்து வாழ்தல் - அத்துவித பாவனையில் இடையீடின்றி யிருத்தல். அதனை அறியாத மருள் - வாசனாமல மயக்கம். மருள னேன் என்பதன் பின் ஆயினும் என ஒரு சொல் வருவித்துரைக்கப் பட்டது. ad இதன் கண் 'பற்றுநான் மற்றிலேன்; மருளனேன் ஆயினும் உல கில் வாழ்கிலேன்" என்பவற்றால் முத்தி உபாயம் என்னும் பதிக நுத லிய பொருள் போதருதல் காண்க, 7
1024 திருவாசக ஆராய்ச்சியுரை உலகில் வாழ்கிலேன் - இவ்வுலகில் வாழுமாற்றலுடையேனல்லேன் ; வருக என்று அருள் புரியாயே - இங்கே வருக என்று அழைத்தருள்வா யாக . பருதி வாழ் ஒளியாய் நின் பாதமே யல்லால் பிறிதொரு பற்றும் உடையேனல்லேன் ; சிவபுரத்தரசே திருப்பெருந்துறை யுறை சிவனே நின் திருவருளையே கருதி உளம் கசிந்து உருகி நான் கலந்து வாழும் நெறியை அறியாத மயக்கமுடையேனாயினும் உலகில் வாழும் ஆற்றலுடையேனல்லேன் ; இங்கே வருக என்று அழைத்தருள்வாயாக என்பதாம் . au ama சூரிய மண்டலத்தின் மத்தியில் இறைவன் சதாசிவ மூர்த்தியாய் எழுந்தருளியுள்ளான் என்னும் ஆகம வழக்குப் பற்றிப் பருதி வாழ் ஒளியாய் என்றார் . விரிந்த பல்கதி ருடையதோர் வெய்யவ னடுவட் பொருந்தி வைகிய கண்ணுதற் பரமனே போன்றான் கந்த . அவை புகு . 59 எனவும் மாறிலா வருக்க னாப்பண் வைகிய பரமனே போல் ஆறுமா முகத்து வள்ளல் அலங்குளைப் புரவி மான்தேர் ஏறினான் சூரபன்மன் வதை 47 எனவும் கந்தபுராணம் கூறலானும் t உங் தேவ ( சிவ ) சூரியனுக்கு மத்தியிலேயுள்ள எந்தப் பர்க்கர் எங்கள் அறிவிச்சை கிரியைகளைச் செலுத்துகின்றனரோ அம்முக்கியப் பொரு ளாயினாரைத் தியானிக்கின்றோம் ' என்று யாஞ்ஞவற்கியர் கூறலானும் பருதியின் மத்தியில் சிவபெருமான் எழுந்தருளியிருத்தல் அறியப் படும் . திருவுயர் கோலம் - கண்டாரால் விரும்பப்படும் தன்மை நோக் கம் மிக்க அழகு . கோலச் சிவபுரம் என்க . மற்றும் உலகப்பற்றுக்களை நோக்காது கருணையே நோக்கி எனப் பொருள் தருதலால் ஏகாரம் தேற்றம் . கலந்து வாழ்தல் - அத்துவித பாவனையில் இடையீடின்றி யிருத்தல் . அதனை அறியாத மருள் - வாசனாமல மயக்கம் . மருள னேன் என்பதன் பின் ஆயினும் என ஒரு சொல் வருவித்துரைக்கப் பட்டது . ad இதன் கண் ' பற்றுநான் மற்றிலேன் ; மருளனேன் ஆயினும் உல கில் வாழ்கிலேன் என்பவற்றால் முத்தி உபாயம் என்னும் பதிக நுத லிய பொருள் போதருதல் காண்க 7