திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

453 வாழாப்பத்து பந்தனை விரலாள் பங்கநீ யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் செந்தழல் போல்வாய் சிவபுரத் தரசே திருப்பெருந் துறையுறை சிவனே அந்தமில் லமுதே அரும்பெரும் பொருளே ஆரமு தேயடி யேனை வந்துய வாண்டாய் வாழ்கிலேன் கண்டாய் வருகவென் றருள்புரி மாயே. 1025 ப-ரை. பந்து அணை விரலாள் பங்க - விளையாடும் பத்து வந்து அணைகின்ற விரல்களோடு கூடிய அகங்கையையுடைய உமையம்மை பாகனே, நீ அல்லால் நான் மற்று பற்று இலேன் - நின் பற்றன்றிப் பிறிதொரு பற்றும் உடையேனல்லேன்; செந்தழல் போல்வாய்- சிவந்த தீப் போன்ற வண்ணனே, சிவபுரத்து அரசே - சிவபுரத்துக்கு வேந்தனே, திருப்பெருந்துறை உறை சிவனே - திருப்பெருந்துறையில் எழுந்தருளிய சிவபெருமானே, அந்தம் இல் அமுதே - ஒரு காலத்தும் அழிதலில்லாத நித்தியமானவனே, அரும் பெரும் பொருளே - பெறு தற்கரிய பெரிய பொருளே. ஆர் அமுதே - கிடைத்தற்சரிய சாவா மருந்தே, வந்து அடியேனை உய ஆண்டாய் - குருவடிவாய் நீயே வலிய எழுந்தருளி எந்து அடியேனைப் பிறவித் துன்பத்தினின்றும் பிழைக்கும்படி ஆட்கொண்டவனே, வாழ்கிலேன் - நான் இவ்வுலகில் வாழும் ஆற்றலுடையேனல்லேன்; வருக என்று அருள் புரியாயே- இங்கே வருக என்று அழைத்தருள்வாயாக. உமையம்மை பாகனே, நின் பற்றன்றிப் பிறிதொரு பற்றும் உடையேனல்லேன்; செந்தழல் போல்வாய், சிவபுரத்தரசே, திருப் பெருந்துறையுறை சிவனே, அந்தமில் அமுதே, ஆரமுதே, வலிய வந்து அடியேனை உய்ய ஆட்கொண்டவனே, நான் இவ்வுலகில் வாழ்கிலேன். வருக என்று அருள் புரிவாயாக என்பதாம். பாணe பந்தணை விரலாள் என்றது உமையம்மையை "பந்தணை மெல் விரலா ளொடும் பயில் விடம்" (ஞான 236 3) பந்தண மெல் விரலாள் பாசனாமே- (நாவு 217-1) "பந்தணை விரற் பாவை தன்னை யோர் பாகம் வைத்தவனை' (சுந். 49-10) எனத் தேவாரத்தும் வரு வன காண்க பந்தணை விரலாள் என்றாராயினும் உபலக்கணத்தால் பவளத் துவர்வாயாள் மதிபோல் முகத்தினாள் அந்தமில் புகழாள் என்பனவுங் கொள்க. 1000 "பந்து சேர் விரலான் பவனத்துவர் வாயினாள் பனிலாமதி போன்முகத் தந்தமில் புகழாள் மலைமாதொடு மாதிப்பிரான் வந்து சேர் விடம்" தே.ஞான.260-1 95
453 வாழாப்பத்து பந்தனை விரலாள் பங்கநீ யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் செந்தழல் போல்வாய் சிவபுரத் தரசே திருப்பெருந் துறையுறை சிவனே அந்தமில் லமுதே அரும்பெரும் பொருளே ஆரமு தேயடி யேனை வந்துய வாண்டாய் வாழ்கிலேன் கண்டாய் வருகவென் றருள்புரி மாயே . 1025 - ரை . பந்து அணை விரலாள் பங்க - விளையாடும் பத்து வந்து அணைகின்ற விரல்களோடு கூடிய அகங்கையையுடைய உமையம்மை பாகனே நீ அல்லால் நான் மற்று பற்று இலேன் - நின் பற்றன்றிப் பிறிதொரு பற்றும் உடையேனல்லேன் ; செந்தழல் போல்வாய் சிவந்த தீப் போன்ற வண்ணனே சிவபுரத்து அரசே - சிவபுரத்துக்கு வேந்தனே திருப்பெருந்துறை உறை சிவனே - திருப்பெருந்துறையில் எழுந்தருளிய சிவபெருமானே அந்தம் இல் அமுதே - ஒரு காலத்தும் அழிதலில்லாத நித்தியமானவனே அரும் பெரும் பொருளே - பெறு தற்கரிய பெரிய பொருளே . ஆர் அமுதே - கிடைத்தற்சரிய சாவா மருந்தே வந்து அடியேனை உய ஆண்டாய் - குருவடிவாய் நீயே வலிய எழுந்தருளி எந்து அடியேனைப் பிறவித் துன்பத்தினின்றும் பிழைக்கும்படி ஆட்கொண்டவனே வாழ்கிலேன் - நான் இவ்வுலகில் வாழும் ஆற்றலுடையேனல்லேன் ; வருக என்று அருள் புரியாயே இங்கே வருக என்று அழைத்தருள்வாயாக . உமையம்மை பாகனே நின் பற்றன்றிப் பிறிதொரு பற்றும் உடையேனல்லேன் ; செந்தழல் போல்வாய் சிவபுரத்தரசே திருப் பெருந்துறையுறை சிவனே அந்தமில் அமுதே ஆரமுதே வலிய வந்து அடியேனை உய்ய ஆட்கொண்டவனே நான் இவ்வுலகில் வாழ்கிலேன் . வருக என்று அருள் புரிவாயாக என்பதாம் . பாண e பந்தணை விரலாள் என்றது உமையம்மையை பந்தணை மெல் விரலா ளொடும் பயில் விடம் ( ஞான 236 3 ) பந்தண மெல் விரலாள் பாசனாமே- ( நாவு 217-1 ) பந்தணை விரற் பாவை தன்னை யோர் பாகம் வைத்தவனை ' ( சுந் . 49-10 ) எனத் தேவாரத்தும் வரு வன காண்க பந்தணை விரலாள் என்றாராயினும் உபலக்கணத்தால் பவளத் துவர்வாயாள் மதிபோல் முகத்தினாள் அந்தமில் புகழாள் என்பனவுங் கொள்க . 1000 பந்து சேர் விரலான் பவனத்துவர் வாயினாள் பனிலாமதி போன்முகத் தந்தமில் புகழாள் மலைமாதொடு மாதிப்பிரான் வந்து சேர் விடம் தே.ஞான.260-1 95