திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

வாழாப்பத்து 1029 நினைப்பேனோ கூறியருள்க: மழவிடையானே - இளமையாகிய இடப வர்கனத்தையுடையவனே, வாழ்கிலேன் - இவ்வுலகில் வாழும் ஆற்ற லுடையேனல்லேன்; வருக என்று அருள் புரியாய் - இங்கே வருக வென்று அழைத்தருள்வாயாக. உமையம்மை பங்கனே, நீன் பற்றன்றி யான் பிறிதொரு பற் றுடையேனல்லேன்; செழுமதியணிந்தாய், சிவபுரத்தரசே, திருப் பெருந்துறையுறை சிவனே. பிறர் தேவர் எவரையும் தொழுவனோ துதிப்பனோ எனக்கோர் துணையென நினைவனோ சொல்லாய்; மழவிடை யானே யான் இவ்வுலகில் வாழும் ஆற்றலுடையேனல்லேன்; வருக வென்று அருள் புரிவாயாக என்பதாம். aler சிவமும் சத்தியும் நீக்கமின்றி எக்காலத்தும் எவ்விடத்தும் உள தாதலால் அவ்விறைவனுக்குரிய தொல்புகழ் இறைவிக்குமுள்ளமை யின் 'பழுதில் தொல் புகழாள்' என்றார். ''சுற்றமா மிகு தொல்புகழா ளொடும்" (நாவு. 118-2) "எண்ணில் தொல்புகழா ளுமை நங்கை" "பரந்த தொல்புகழா ளுமை நங்கை" (சுந்.61 7;9) எனத் தேவா ரத்தும் வருவன காண்க. பழுது - குற்றம். காசுநவை தவறு கசடு வசைவடு மாசுமாநமரில் - செயிர் புகழ் பழுது குற்றமாகும்'' எனத் திவாகரத்து (பண்புபற்றிய) வருதல் காண்க. செழுமதி - வள ரும் செழுமையையுடைய பிறைச்சந்திரன். தொழுவனோ துதிப்பனோ நினைவனோ என்றமையால் மனம் வாக்குக் காயம் மூன்றினாலும் பிறரை வழிபடேன் என்றார். ஓகாரம் எதிர்மறை, சொல்லாய் என் பது முன்னிலையசை போல் வந்தது. .. மழி மழவிடையான் - இளைய வேற்றையுடையான். 'ஆறூர் சடைமுடி யம்பலத் தண்ட ரண்டம் பெறினு, மாறூர் மழவிடையாய்" என்னும் திருக்கோவையார் (398) உரையில் மழவிடையாய் என்பதற்கு, 'இளைய வேற்றையுடையாய்' எனப் பேராசிரியர் உரைத்தமையுங் காண்க. விடை-- தரும சொரூபமாகிய விடை. அது மூத்தலின்றி எக்காலத் தும் இளமையோடிருத்தலின் மழவிடையானே' என்றார். விடைய துடையீர்'' (ஞான. 357-3) "மழவிடையாய் நின்பாதம் போற்றி போற்றி'' (நாவு.2453) தண்டேர் மழப்படையான் மழவிடையான்" (சுந். 82-2) எனத் தேவாரத்தும் "மழவிடையாற்கு வழி வழியாளாய்" எனத் திருப்பல்லாண்டினும் பாழவிடையான்" (எறிபத்.]) 'பழைய மழவிடை யேறி யோங்கிய விண்மிசை வந்தரர்" (மானக்.31) எனப் பெரிய புராணத்தும் வருவன காண்க. இதன்கண் 'வருகவென்று அருள் புரியாயே' என்பதனால் முத்தி யுபாயம் என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்த
வாழாப்பத்து 1029 நினைப்பேனோ கூறியருள்க : மழவிடையானே - இளமையாகிய இடப வர்கனத்தையுடையவனே வாழ்கிலேன் - இவ்வுலகில் வாழும் ஆற்ற லுடையேனல்லேன் ; வருக என்று அருள் புரியாய் - இங்கே வருக வென்று அழைத்தருள்வாயாக . உமையம்மை பங்கனே நீன் பற்றன்றி யான் பிறிதொரு பற் றுடையேனல்லேன் ; செழுமதியணிந்தாய் சிவபுரத்தரசே திருப் பெருந்துறையுறை சிவனே . பிறர் தேவர் எவரையும் தொழுவனோ துதிப்பனோ எனக்கோர் துணையென நினைவனோ சொல்லாய் ; மழவிடை யானே யான் இவ்வுலகில் வாழும் ஆற்றலுடையேனல்லேன் ; வருக வென்று அருள் புரிவாயாக என்பதாம் . aler சிவமும் சத்தியும் நீக்கமின்றி எக்காலத்தும் எவ்விடத்தும் உள தாதலால் அவ்விறைவனுக்குரிய தொல்புகழ் இறைவிக்குமுள்ளமை யின் ' பழுதில் தொல் புகழாள் ' என்றார் . ' ' சுற்றமா மிகு தொல்புகழா ளொடும் ( நாவு . 118-2 ) எண்ணில் தொல்புகழா ளுமை நங்கை பரந்த தொல்புகழா ளுமை நங்கை ( சுந் .61 7 ; 9 ) எனத் தேவா ரத்தும் வருவன காண்க . பழுது - குற்றம் . காசுநவை தவறு கசடு வசைவடு மாசுமாநமரில் - செயிர் புகழ் பழுது குற்றமாகும் ' ' எனத் திவாகரத்து ( பண்புபற்றிய ) வருதல் காண்க . செழுமதி - வள ரும் செழுமையையுடைய பிறைச்சந்திரன் . தொழுவனோ துதிப்பனோ நினைவனோ என்றமையால் மனம் வாக்குக் காயம் மூன்றினாலும் பிறரை வழிபடேன் என்றார் . ஓகாரம் எதிர்மறை சொல்லாய் என் பது முன்னிலையசை போல் வந்தது . .. மழி மழவிடையான் - இளைய வேற்றையுடையான் . ' ஆறூர் சடைமுடி யம்பலத் தண்ட ரண்டம் பெறினு மாறூர் மழவிடையாய் என்னும் திருக்கோவையார் ( 398 ) உரையில் மழவிடையாய் என்பதற்கு ' இளைய வேற்றையுடையாய் ' எனப் பேராசிரியர் உரைத்தமையுங் காண்க . விடை-- தரும சொரூபமாகிய விடை . அது மூத்தலின்றி எக்காலத் தும் இளமையோடிருத்தலின் மழவிடையானே ' என்றார் . விடைய துடையீர் ' ' ( ஞான . 357-3 ) மழவிடையாய் நின்பாதம் போற்றி போற்றி ' ' ( நாவு .2453 ) தண்டேர் மழப்படையான் மழவிடையான் ( சுந் . 82-2 ) எனத் தேவாரத்தும் மழவிடையாற்கு வழி வழியாளாய் எனத் திருப்பல்லாண்டினும் பாழவிடையான் ( எறிபத் . ] ) ' பழைய மழவிடை யேறி யோங்கிய விண்மிசை வந்தரர் ( மானக் .31 ) எனப் பெரிய புராணத்தும் வருவன காண்க . இதன்கண் ' வருகவென்று அருள் புரியாயே ' என்பதனால் முத்தி யுபாயம் என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்த