திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

1038 460 ருவாசக ஆராய்ச்சி யுரை துடிகொள்நே ரிடையாள் சுரிகுழன் மடந்தை துணைமுலைக் கண்கடோய் சுவடு பொடிசொள்வான் றழலிற் புள்ளிபோ லிரண்டு பொங்கொளி தங்குமார் பினனே செடிகொள்வான் பொழில்சூழ் திருப்பெருந் துறையிற் செழுமலர்க் குருந்தபே வியசீர் அடிகளே யடியேன் ஆதரித் தழைத்தால் அதெந்துவே யென்றரு ளாயே. ப-ரை. துடி கொள் நேர் இடையாள் - துடியினை ஒப்பாகக் கொண்ட இடையினையுடையவளும், சுரிகுழல் மடந்தை - கடைகுழன்ற கூந்தலினையுடையவளுமாகிய உமையம்மையின், துணை முலை கண்கள் தோய் சுவடு - இரண்டு தனங்களின் காம்புகள் அழுந்திய தழும்பு. பொடி கொள்வான் தழலில் இரண்டு புள்ளிபோல் - நீறு பூத்த பெரிய நெருப்பின் மீதுள்ள இரண்டு புள்ளிகள் போல, பொங்கு ஒளி தங்கும் மார்பினனே - பெருகும் ஒளி தங்கிய திருமார்பையுடையவனே, செடி கொள் வான் பொழில் சூழ் திருப்பெருந்துறையில் - புதரைக்கொண்ட பெரிய சோலைகள் சூழ்ந்த திருப்பெருந்துறையின் கண், செழு மலர் குருந்தம் மேவிய சீர் அடிகளே - செழுமையாகிய மலர்களையுடைய குருந்த மர நீழலில் அமர்ந்த ஞானோபதேசம் செய்யும் சிறப்பினை யுடைய ஞானாசாரியனே, அடியேன் ஆதரித்து அழைத்தால் - அடி யேன் உலக வாதனையை நீக்கி நின் திருவடியை அடைய விரும்பி அழைத்தால், அதெந்துவே என்று அருளாய் - நீ அஞ்சற்கவென்று அருள் செய்வாயாக. ர் உமையம்மையின் முலைக் கண்கள் தோய்ந்த தழும்பு தங்கும் மா" பினனே, திருப்பெருந்துறையில் குருந்த மர நீழலில் அமர்ந்த ஞானா சாரியனே, அடியேன் விரும்பி அழைத்தால் அஞ்சற்க என்று அருள் செய்வாயாக என்பதாம். துடி கொள் நேரிடையாள் - உமை. "துடியிடை தன் மடவா ளொடு மார்பில் பொடியணிவார்" (சுந். 11 5) துடி கொள் நேர் இடை என்பதனை துடி நேர் கொள் இடை என இயைத்துப் பொருள் கொள்க. துடி - உடுக்கை. சுரி குழல் - கடை குழன்ற கூந்தல். துணை முலை - இரண்டு முலை. முலைக் கண் - முலைக்காம்பு. சுவடு -தழும்பு. பொடி கொள் வான் தழல் - நீறு பூத்த பெரிய தெருப்பு. வான்- பெரிய. "வான் பையுடை வாளரவத்து" (கோவை 48). பொடி திருநீற்றுக்கும், தழல் திருமேனிக்கும் உவமை.
1038 460 ருவாசக ஆராய்ச்சி யுரை துடிகொள்நே ரிடையாள் சுரிகுழன் மடந்தை துணைமுலைக் கண்கடோய் சுவடு பொடிசொள்வான் றழலிற் புள்ளிபோ லிரண்டு பொங்கொளி தங்குமார் பினனே செடிகொள்வான் பொழில்சூழ் திருப்பெருந் துறையிற் செழுமலர்க் குருந்தபே வியசீர் அடிகளே யடியேன் ஆதரித் தழைத்தால் அதெந்துவே யென்றரு ளாயே . - ரை . துடி கொள் நேர் இடையாள் - துடியினை ஒப்பாகக் கொண்ட இடையினையுடையவளும் சுரிகுழல் மடந்தை - கடைகுழன்ற கூந்தலினையுடையவளுமாகிய உமையம்மையின் துணை முலை கண்கள் தோய் சுவடு - இரண்டு தனங்களின் காம்புகள் அழுந்திய தழும்பு . பொடி கொள்வான் தழலில் இரண்டு புள்ளிபோல் - நீறு பூத்த பெரிய நெருப்பின் மீதுள்ள இரண்டு புள்ளிகள் போல பொங்கு ஒளி தங்கும் மார்பினனே - பெருகும் ஒளி தங்கிய திருமார்பையுடையவனே செடி கொள் வான் பொழில் சூழ் திருப்பெருந்துறையில் - புதரைக்கொண்ட பெரிய சோலைகள் சூழ்ந்த திருப்பெருந்துறையின் கண் செழு மலர் குருந்தம் மேவிய சீர் அடிகளே - செழுமையாகிய மலர்களையுடைய குருந்த மர நீழலில் அமர்ந்த ஞானோபதேசம் செய்யும் சிறப்பினை யுடைய ஞானாசாரியனே அடியேன் ஆதரித்து அழைத்தால் - அடி யேன் உலக வாதனையை நீக்கி நின் திருவடியை அடைய விரும்பி அழைத்தால் அதெந்துவே என்று அருளாய் - நீ அஞ்சற்கவென்று அருள் செய்வாயாக . ர் உமையம்மையின் முலைக் கண்கள் தோய்ந்த தழும்பு தங்கும் மா பினனே திருப்பெருந்துறையில் குருந்த மர நீழலில் அமர்ந்த ஞானா சாரியனே அடியேன் விரும்பி அழைத்தால் அஞ்சற்க என்று அருள் செய்வாயாக என்பதாம் . துடி கொள் நேரிடையாள் - உமை . துடியிடை தன் மடவா ளொடு மார்பில் பொடியணிவார் ( சுந் . 11 5 ) துடி கொள் நேர் இடை என்பதனை துடி நேர் கொள் இடை என இயைத்துப் பொருள் கொள்க . துடி - உடுக்கை . சுரி குழல் - கடை குழன்ற கூந்தல் . துணை முலை - இரண்டு முலை . முலைக் கண் - முலைக்காம்பு . சுவடு -தழும்பு . பொடி கொள் வான் தழல் - நீறு பூத்த பெரிய தெருப்பு . வான் பெரிய . வான் பையுடை வாளரவத்து ( கோவை 48 ) . பொடி திருநீற்றுக்கும் தழல் திருமேனிக்கும் உவமை .