திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

30. திருக்கழுக்குன்றப் பதிகம் சற்குரு தரிசனம் திருக்கழுக்குன்றத்தில் அருளிச் செய்யப்பட்டது அடிகளார் திருக்கழுக்குன்றத்திற் சென்று தரிசிக்கும் போது இறைவன் திருப்பெருந்துறையில் ஞானாசாரியனாய் எழுந்தருளி உப தேசித்த திருக்கோலத்தைக் காட்டியருளுதலும், அதனையே பொரு ளாகக் கொண்டு எழுந்தது இத்திருப்பதிகமாகும். இதன் உட் பொருள் சற்குருதரிசனம் என உள்ளது. இதனை விரித்துத் திருவாசகச் சிறப்புடையார், "நீதிமறை பரவுதிருப் பெருந்துறையிற் குருவடிவாய் நிகழ்ந்த கோலங் காதலொடுங் காட்டினையே யெனுங் களிப்புப் பகர்தல்திருக் கழுச்குன் றாமே" எனக் கூறியுள்ளார். இது எழுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம். எழுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம் 466 பிணக்கி லாதபெ ருந்து ஈறப்பெரு மானுன் னாமங்கள் பேசுவார்க் கிணக்கி லாததோ ரின்ப மேவருந் துன்ப மேதுடைத் தெம்பிரான் உணக்கி லாததோர் வித்து மேல்விளை யாம லென்வினை யொத்தபின் கணக்கி லாத்திருக் கோல நீ வந்து காட்டி னாய்கழுக் குன்றிலே. ப-ரை. பிணக்கு இலாத பெருந்துறைப் பெருமான் - எவ்வுயிர்க ளிடத்தும் மாறுபாடில்லாத திருவருளைச் செய்கின்ற திருப்பெருந் துறையில் வீற்றிருக்கும் பெருமானே, உன் நாமங்கள் பேசுவார்க்கு - உன் திருநாமங்களை எடுத்து உச்சரிப்பவர்களுக்கு, இணக்கு இலாதது ஓர் இன்பமே வரும் - ஒப்பில்லாத சிறந்த இன்பமே உளதாகும்; எம் பிரான் - எமது தலைவனே, துன்பம் துடைத்து - வருந் துன்பத்தை நீக்கி, உணக்கு இலாதது ஓர் வித்து -உலர்ந்து போதலில்லாத ஒரு தன்மையினையுடைய பிறவிக்கேதுவாகிய கன்ம விதையானது, மேல் விளையாமல் - பின்னர் விளைதல் இல்லையாம் வண்ணம். என் வினை ஒத்த பின் - எனது இரு வினைப் பயன்களும் ஒரு தன்மையனவாகக் கொள்ளும் நிலைமை எனக்கு வந்த பின்னர், கணக்கு இலாத திருக்
30. திருக்கழுக்குன்றப் பதிகம் சற்குரு தரிசனம் திருக்கழுக்குன்றத்தில் அருளிச் செய்யப்பட்டது அடிகளார் திருக்கழுக்குன்றத்திற் சென்று தரிசிக்கும் போது இறைவன் திருப்பெருந்துறையில் ஞானாசாரியனாய் எழுந்தருளி உப தேசித்த திருக்கோலத்தைக் காட்டியருளுதலும் அதனையே பொரு ளாகக் கொண்டு எழுந்தது இத்திருப்பதிகமாகும் . இதன் உட் பொருள் சற்குருதரிசனம் என உள்ளது . இதனை விரித்துத் திருவாசகச் சிறப்புடையார் நீதிமறை பரவுதிருப் பெருந்துறையிற் குருவடிவாய் நிகழ்ந்த கோலங் காதலொடுங் காட்டினையே யெனுங் களிப்புப் பகர்தல்திருக் கழுச்குன் றாமே எனக் கூறியுள்ளார் . இது எழுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம் . எழுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம் 466 பிணக்கி லாதபெ ருந்து ஈறப்பெரு மானுன் னாமங்கள் பேசுவார்க் கிணக்கி லாததோ ரின்ப மேவருந் துன்ப மேதுடைத் தெம்பிரான் உணக்கி லாததோர் வித்து மேல்விளை யாம லென்வினை யொத்தபின் கணக்கி லாத்திருக் கோல நீ வந்து காட்டி னாய்கழுக் குன்றிலே . - ரை . பிணக்கு இலாத பெருந்துறைப் பெருமான் - எவ்வுயிர்க ளிடத்தும் மாறுபாடில்லாத திருவருளைச் செய்கின்ற திருப்பெருந் துறையில் வீற்றிருக்கும் பெருமானே உன் நாமங்கள் பேசுவார்க்கு - உன் திருநாமங்களை எடுத்து உச்சரிப்பவர்களுக்கு இணக்கு இலாதது ஓர் இன்பமே வரும் - ஒப்பில்லாத சிறந்த இன்பமே உளதாகும் ; எம் பிரான் - எமது தலைவனே துன்பம் துடைத்து - வருந் துன்பத்தை நீக்கி உணக்கு இலாதது ஓர் வித்து -உலர்ந்து போதலில்லாத ஒரு தன்மையினையுடைய பிறவிக்கேதுவாகிய கன்ம விதையானது மேல் விளையாமல் - பின்னர் விளைதல் இல்லையாம் வண்ணம் . என் வினை ஒத்த பின் - எனது இரு வினைப் பயன்களும் ஒரு தன்மையனவாகக் கொள்ளும் நிலைமை எனக்கு வந்த பின்னர் கணக்கு இலாத திருக்