திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

1052 திருவாசக ஆராய்ச்சியுரை தோர் நாணம் எய்தி - வெட்கப்பட வேண்டாததோர் வெட்கம் எனக்குளதாகி, நடுக்கடலுள் அழுந்தி - அவ்வெட்கத்தினால் பிறவித் துன்பமாகிய பெருங்கடல் நடுவில் மூழ்கி வருந்தி யான் அதனினின் றும் நீங்கும் பொருட்டு, பேணொணாத பெருந்துறை பெருந்தோணி பற்றி உகைத்தலும் - பற்றுதற்கரிய திருப்பெருந்துறையில் எழுந்தரு ளிய நினது திருவடியாகிய தோணியைப் பற்றிக் கொண்டு செலுத்து தலும், காணொணாத் திருக்கோலம் நீ கழுக்குன்றிலே வந்து காட்டி. னாய் - காண்டற்கரிதாகிய நினது பரமாசிரியத் திருவடிவை நீ இத் திருக்கழுக்குன்றில் வந்து காட்டியருளினை; இதற்கு யான் செய்யும் கைம்மாறு அறியேன். பூணொணாததொர் அன்பினை மேற்கொண்டு நாடொறும் போற்ற வும், நாணொணாததொர் நாணம் எனக்குளதாகிப், பிறவித் துன்ப மாகிய கடலுள் விழுந்து வருந்தி அதனினின்றும் நீங்கும் பொருட்டு, பெருந்துறையில் எழுந்தருளிய நினது திருவடியாகிய தோணியைப் பற்றிக்கொண்டு செலுத்துதலும், காண்டற்சரிதாகிய நினது பரமா சாரியத் திருவடிவை நீ திருக்கழுக்குன்றிலே வந்து காட்டியருளினை; இதற்கு யான் யாது கைம்மாறு செய்வேன் என்பதாம். திருப்பெருந்துறையில் தம்மை அடிமை கொண்ட இறைவன் கட் டளைப்படியே அடிகள் குருந்தமர நிழலில் அமைந்த ஆலயத்தில் தாபிக்கப்பட்ட பீடத்தின் மீது அமைந்த திருவடியின் வடிவத்தினை மற்றைய மெய்யடியார்களுடன் நாடோறும் வழிபாடாற்றிக் கொண்டு வரும் நாளில் அத்தலத்திலுள்ள தடாகமொன்றில் இறைவ னருளால் ஞானாக்கினி தோன்றுதலும், அக்கினியில் அடிகளுடன் யாவரும் மூழ்கி இறைவனை இருந்த மற்றைய மெய்யடியார்கள் அடைந்தனராக, தாமும் அவ்வாறு அடைய முடியாவண்ணம் இறை வனது கட்டளை இருந்தமையால், நாணொணாததொர் நாண மெய்தி அதனால் பிறவித் துன்பமாகிய சடல் நடுவுள் அமிழ்ந்தி வருந்த வேண் டிய நிலையுளதாக அதனை நீக்குப் பொருட்டு, பேணொணாத பெருந் துறைப் பெருமான்தன் பெரிய திருவடியாகிய தோணியைப் பற்றிக் கொண்டு அதனைச் செலுத்திச் செல்லுதலும், காண்டற்கரிதாகிய ஞானாசாரியத் திருவுருவத்தைத் திருக்கழுக்குன்றத்தில் தரிசித்தனர் என்பது இத்திருப்பாடலில் அமைந்துள்ள பொருளாகும். " பூனெணாததொர் அன்பு என்றது அடிகள் இயல்பாகக் கூறிவரும் முறையில் தாழ்ந்த நிலைக்கு மேற்கொள்ளுதற்கரிதாகிய ஒப்பற்ற அன்பு என்றவாறு. பொருந்தி என்பதற்கு "நின் திருவடித் திருவுரு" என்னும் செயப்படுபொருள் வருவித்துரைக்க. நாடோறும் போற்றி என்பது மெய்யடியார்களும் அடிகளும் அத்திருவடிகளுக்கு வழிபா டாற்றியமையைக் குறிப்பதாகும். நாணொணாததோர் நாணம் அடிக
1052 திருவாசக ஆராய்ச்சியுரை தோர் நாணம் எய்தி - வெட்கப்பட வேண்டாததோர் வெட்கம் எனக்குளதாகி நடுக்கடலுள் அழுந்தி - அவ்வெட்கத்தினால் பிறவித் துன்பமாகிய பெருங்கடல் நடுவில் மூழ்கி வருந்தி யான் அதனினின் றும் நீங்கும் பொருட்டு பேணொணாத பெருந்துறை பெருந்தோணி பற்றி உகைத்தலும் - பற்றுதற்கரிய திருப்பெருந்துறையில் எழுந்தரு ளிய நினது திருவடியாகிய தோணியைப் பற்றிக் கொண்டு செலுத்து தலும் காணொணாத் திருக்கோலம் நீ கழுக்குன்றிலே வந்து காட்டி . னாய் - காண்டற்கரிதாகிய நினது பரமாசிரியத் திருவடிவை நீ இத் திருக்கழுக்குன்றில் வந்து காட்டியருளினை ; இதற்கு யான் செய்யும் கைம்மாறு அறியேன் . பூணொணாததொர் அன்பினை மேற்கொண்டு நாடொறும் போற்ற வும் நாணொணாததொர் நாணம் எனக்குளதாகிப் பிறவித் துன்ப மாகிய கடலுள் விழுந்து வருந்தி அதனினின்றும் நீங்கும் பொருட்டு பெருந்துறையில் எழுந்தருளிய நினது திருவடியாகிய தோணியைப் பற்றிக்கொண்டு செலுத்துதலும் காண்டற்சரிதாகிய நினது பரமா சாரியத் திருவடிவை நீ திருக்கழுக்குன்றிலே வந்து காட்டியருளினை ; இதற்கு யான் யாது கைம்மாறு செய்வேன் என்பதாம் . திருப்பெருந்துறையில் தம்மை அடிமை கொண்ட இறைவன் கட் டளைப்படியே அடிகள் குருந்தமர நிழலில் அமைந்த ஆலயத்தில் தாபிக்கப்பட்ட பீடத்தின் மீது அமைந்த திருவடியின் வடிவத்தினை மற்றைய மெய்யடியார்களுடன் நாடோறும் வழிபாடாற்றிக் கொண்டு வரும் நாளில் அத்தலத்திலுள்ள தடாகமொன்றில் இறைவ னருளால் ஞானாக்கினி தோன்றுதலும் அக்கினியில் அடிகளுடன் யாவரும் மூழ்கி இறைவனை இருந்த மற்றைய மெய்யடியார்கள் அடைந்தனராக தாமும் அவ்வாறு அடைய முடியாவண்ணம் இறை வனது கட்டளை இருந்தமையால் நாணொணாததொர் நாண மெய்தி அதனால் பிறவித் துன்பமாகிய சடல் நடுவுள் அமிழ்ந்தி வருந்த வேண் டிய நிலையுளதாக அதனை நீக்குப் பொருட்டு பேணொணாத பெருந் துறைப் பெருமான்தன் பெரிய திருவடியாகிய தோணியைப் பற்றிக் கொண்டு அதனைச் செலுத்திச் செல்லுதலும் காண்டற்கரிதாகிய ஞானாசாரியத் திருவுருவத்தைத் திருக்கழுக்குன்றத்தில் தரிசித்தனர் என்பது இத்திருப்பாடலில் அமைந்துள்ள பொருளாகும் . பூனெணாததொர் அன்பு என்றது அடிகள் இயல்பாகக் கூறிவரும் முறையில் தாழ்ந்த நிலைக்கு மேற்கொள்ளுதற்கரிதாகிய ஒப்பற்ற அன்பு என்றவாறு . பொருந்தி என்பதற்கு நின் திருவடித் திருவுரு என்னும் செயப்படுபொருள் வருவித்துரைக்க . நாடோறும் போற்றி என்பது மெய்யடியார்களும் அடிகளும் அத்திருவடிகளுக்கு வழிபா டாற்றியமையைக் குறிப்பதாகும் . நாணொணாததோர் நாணம் அடிக