திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

கண்டபத்து ப-ரை. வினை பிறவி என்கின்ற வேதனையில் அகப்பட்டு - வினைக் கீடாக வருகின்ற பிறவி என்கின்ற துன்பத்தில் அகப்பட்டு, தனை சிறிதும் நினையாதே தளர்வு எய்தி கிடப்பேனை - இறைவனாகிய தன் னைச் சிறிதளவாவது நினையாமல் சோர்வடைந்து கிடக்கும் இயல் புடைய என்னை, எனை பெரிதும் ஆட்கொண்டு - எவ்வளவோ பெரிய முறைமையினால் அடிமை கொண்டருளி, என் பிறப்பு அறுத்த இணை இலியை - எனது பிறவித் துன்பத்தை நீக்கியருளிய ஒப்பற்ற பரமா சாரியனது ஐந்தொழிற் கூத்தினை. அனைத்து உலகும் தொழும் தில்லை அம்பலத்தே கண்டேன் - எல்லா உலகினரும் வந்து வழிபடு கின்ற தில்லைச் சிற்றம்பலத்தின் கண்ணே தரிசித்தேன். 1061 தளவாவது பிறவித் துன்பத்தில் அகப்பட்டு, இறைவனாகிய தன்னைச் சிறி நினையாமல் தளர்வடைந்து கிடக்கும் இயல்புடைய என்னை,எவ்வளவோ பெரிய முறைமையால் ஆட்கொண்டருளி, என் பிறப்பு அறுத்த பரம சாரியனது ஐந்தொழிற் கூத்தினை எல்லாவுல கினரும் வந்து வணங்குகின்ற தில்லையம்பலத்தின் கண்ணே தரிசித் தேன் என்பதாம். வினைப்பிறவி என்கின்ற வேதனையென்றது வினைக்கீடாக உளதா கும் பிறவி காரணமாக உண்டான துன்பம் என்றவாறு. காரியத்தைக் காரணமாக உபசரித்துக் கூறியதாகும். தன்னை என் றது இறைவனை தனர்வெய்டுக் கிடத்தல்- பிறவித் துன்பத்தினால் வாட்டமுற்றிருத்தல் எனைப் பெரிது - எவ்வளவோ பெரிய முறை மையால் என்றது, இறைவன் அடிகளை நிருவாணதீக்கை செய்து ஆட்கொண்ட முறைமையினை விளக்கியதாகும். இணையிலி -ஒப்பில்லாதவன் "துலையாக வொருவரையுமில்லா தானை'' (நாவு.232- (0) என அப்பரடிகளும், 'ஒப்புனக்கில்லா ஒரு வனே'' (பிடித்த.5) "ஒப்பில் ஒருத்தன்" "ஒப்பில் அப்பனே" (சத.61, 68) ஒப்பிலாதவனே (நீத்.29) என அடிகள் பிறாண்டும் கூறுவன காண்க. "எதிர்பலர் புரமெய்த இணையிலி'' பணையிலங்கும் முடிபத்திறுத்த பழிபோக்கிய, இணையிலி 125-5 268-6 என திருஞானாம்பந்த சுவாமிகள் தேவாரத்திலும், இணையிலி தொல்லைத் தில்லை (2) எனத் திருக்கோவைபாரிலும் வருவன காண்க. இணையிலியாகிய பரமாசாரியனது ஐந்தொழிற் கூத்தினைத் தில்லையம் பலத்தே கண்டேன் என்க. அனைத்துலகும் தொழுந் தில்லை வானுல கத்தவர் முதலாகிய எவ்வுலகத்தினரும் வந்து வணங்கும் தில்லை. "அளவிலா வானவரும் தொழுந்தில்லை" (கண்ட. 8) என அடிகளும் "மூவுலகத்தவர் ஏத்தித் தொழும்தில்லை முக்கட்பிரான் (11.ந்திரு. கோயில் திருப்பண்ணி. 28) எனப் பிறரும் கூறுவனவற்றாலும் காண்க.
கண்டபத்து - ரை . வினை பிறவி என்கின்ற வேதனையில் அகப்பட்டு - வினைக் கீடாக வருகின்ற பிறவி என்கின்ற துன்பத்தில் அகப்பட்டு தனை சிறிதும் நினையாதே தளர்வு எய்தி கிடப்பேனை - இறைவனாகிய தன் னைச் சிறிதளவாவது நினையாமல் சோர்வடைந்து கிடக்கும் இயல் புடைய என்னை எனை பெரிதும் ஆட்கொண்டு - எவ்வளவோ பெரிய முறைமையினால் அடிமை கொண்டருளி என் பிறப்பு அறுத்த இணை இலியை - எனது பிறவித் துன்பத்தை நீக்கியருளிய ஒப்பற்ற பரமா சாரியனது ஐந்தொழிற் கூத்தினை . அனைத்து உலகும் தொழும் தில்லை அம்பலத்தே கண்டேன் - எல்லா உலகினரும் வந்து வழிபடு கின்ற தில்லைச் சிற்றம்பலத்தின் கண்ணே தரிசித்தேன் . 1061 தளவாவது பிறவித் துன்பத்தில் அகப்பட்டு இறைவனாகிய தன்னைச் சிறி நினையாமல் தளர்வடைந்து கிடக்கும் இயல்புடைய என்னை எவ்வளவோ பெரிய முறைமையால் ஆட்கொண்டருளி என் பிறப்பு அறுத்த பரம சாரியனது ஐந்தொழிற் கூத்தினை எல்லாவுல கினரும் வந்து வணங்குகின்ற தில்லையம்பலத்தின் கண்ணே தரிசித் தேன் என்பதாம் . வினைப்பிறவி என்கின்ற வேதனையென்றது வினைக்கீடாக உளதா கும் பிறவி காரணமாக உண்டான துன்பம் என்றவாறு . காரியத்தைக் காரணமாக உபசரித்துக் கூறியதாகும் . தன்னை என் றது இறைவனை தனர்வெய்டுக் கிடத்தல்- பிறவித் துன்பத்தினால் வாட்டமுற்றிருத்தல் எனைப் பெரிது - எவ்வளவோ பெரிய முறை மையால் என்றது இறைவன் அடிகளை நிருவாணதீக்கை செய்து ஆட்கொண்ட முறைமையினை விளக்கியதாகும் . இணையிலி -ஒப்பில்லாதவன் துலையாக வொருவரையுமில்லா தானை ' ' ( நாவு.232- ( 0 ) என அப்பரடிகளும் ' ஒப்புனக்கில்லா ஒரு வனே ' ' ( பிடித்த .5 ) ஒப்பில் ஒருத்தன் ஒப்பில் அப்பனே ( சத .61 68 ) ஒப்பிலாதவனே ( நீத் .29 ) என அடிகள் பிறாண்டும் கூறுவன காண்க . எதிர்பலர் புரமெய்த இணையிலி ' ' பணையிலங்கும் முடிபத்திறுத்த பழிபோக்கிய இணையிலி 125-5 268-6 என திருஞானாம்பந்த சுவாமிகள் தேவாரத்திலும் இணையிலி தொல்லைத் தில்லை ( 2 ) எனத் திருக்கோவைபாரிலும் வருவன காண்க . இணையிலியாகிய பரமாசாரியனது ஐந்தொழிற் கூத்தினைத் தில்லையம் பலத்தே கண்டேன் என்க . அனைத்துலகும் தொழுந் தில்லை வானுல கத்தவர் முதலாகிய எவ்வுலகத்தினரும் வந்து வணங்கும் தில்லை . அளவிலா வானவரும் தொழுந்தில்லை ( கண்ட . 8 ) என அடிகளும் மூவுலகத்தவர் ஏத்தித் தொழும்தில்லை முக்கட்பிரான் ( 11.ந்திரு . கோயில் திருப்பண்ணி . 28 ) எனப் பிறரும் கூறுவனவற்றாலும் காண்க .