திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

கண்டபத்து பற்றியாகும். சுழி - சுழற்சி, சாதி முதலியவற்றின்கட் கொண்ட பற்றினாலே உண்மையறிவில் தடுமாற்றம் உளதாகுமாதலின் 'சுழிப் பட்டுத் தடுமாறும்' என்றார். ஆதம்-அன்பு. அல்லல் என்றது- மூவகைப் பிறவித் துன்பங்களை. அவை தன்னாலும் பிறவுயிராலும் தெய்வத்தாலும் வருவன. பேதை குணம் - அறியாமைக் குணம், 1065 "பூத்தாரும் பொய்கைப் புனலிதுவே யெனக்கருதிப் யான் என மேய்த்தேர் முகக்குறும் பேதை குணம்" திருத்தோணோ.1 என அடிகள் அருளியவாறுங் காண்க பிற உருவம் என்றது ஈண்டுப் பிற தெய்வங்களின் உருவினை நினைத்தலைக் குறித்தது. தென்னுரை - யான் என்றும் எனது என்றும் உரைக்கும் அகப்பற்றுப் புறப்பற்றுக்களாகிய செருக்கு மொழிகள் பேதை குணமும் பிறர் உருவை நினைத்தலும் யானென தென்னும் அகப்பற்று புறப்பற்றுக் களாகிய செருக்கு மொழிகளும் வீடு பேற்றிற்குத் தடையாவன. 'யான் எனது என்னும் செருக்கறுப்பான் வானோர்க்கு, உயர்ந்த உலகம் புகும் என்றார் திருவள்ளுவரும். மாய்த்து - கெடுத்து. அமுது சாவாமருந்தாயினும் குறிப்பிட்ட கால அளவில் அதன் ஆற் றல் கெடும். அக்குற்றம் இல்லாத இறைவனைக் 'கோதில் அமுது' என்றார். கண் "கோதிலமுதானைக் குலாவுதில்லை கண்டேனே" என்பதனால் நிருத்ததரிசனம் என்னும் பதிகப் பொருள் புலப்படு தல் காண்க. 5 478 பிறவிதனை யறமாற்றிப் பிணிமூப்பென் றிவையிரண்டும் உறவினொடு மொழியச்சென் றுலகுடைய வொரு முதலைச் செறிபொழில்சூழ் தில்லைநகர் திருச்சிற்றம் பலமன்னி மறையவரும் வானவரும் வணங்கிட நான் கண்டேனே. ப-ரை. பிறவிதனை அறமாற்றி - பிறவித் துன்பத்தினை முழுவ தும் நீக்கினமையால், பிணி மூப்பு என்று இவை இரண்டின் உறவி னொடு ஒழிய -பிணி மூப்பு என்று சொல்லப்படுகின்ற இவை இரண் டும் சுற்றப்பற்றினோடும் நீங்கிப்போக, உலகு உடைய ஒரு முதலை - உலகு உயிர்களை யெல்லாம் தனதாகவுடைய ஒப்பற்ற முழுமுதல் வனது ஐந்தொழிற் கூத்தினை, செறி பொழில் சூழ் தில்லை திருச் சிற்றம்பலம் சென்று மன்னி - நெருங்கிய சோலைகள் சூழ்ந்த தில்லை நகர்க்கணுள்ள திருச்சிற்றம்பலத்தைப் போய்ச் சார்ந்து, மறையவரும் வானவரும் வணங்கிட நான் கண்டேன் - தில்லைவாழ் அந்தணர்க ளும் தேவர்களும் வணங்க யானும் தரிசித்தேன்.
கண்டபத்து பற்றியாகும் . சுழி - சுழற்சி சாதி முதலியவற்றின்கட் கொண்ட பற்றினாலே உண்மையறிவில் தடுமாற்றம் உளதாகுமாதலின் ' சுழிப் பட்டுத் தடுமாறும் ' என்றார் . ஆதம் - அன்பு . அல்லல் என்றது மூவகைப் பிறவித் துன்பங்களை . அவை தன்னாலும் பிறவுயிராலும் தெய்வத்தாலும் வருவன . பேதை குணம் - அறியாமைக் குணம் 1065 பூத்தாரும் பொய்கைப் புனலிதுவே யெனக்கருதிப் யான் என மேய்த்தேர் முகக்குறும் பேதை குணம் திருத்தோணோ .1 என அடிகள் அருளியவாறுங் காண்க பிற உருவம் என்றது ஈண்டுப் பிற தெய்வங்களின் உருவினை நினைத்தலைக் குறித்தது . தென்னுரை - யான் என்றும் எனது என்றும் உரைக்கும் அகப்பற்றுப் புறப்பற்றுக்களாகிய செருக்கு மொழிகள் பேதை குணமும் பிறர் உருவை நினைத்தலும் யானென தென்னும் அகப்பற்று புறப்பற்றுக் களாகிய செருக்கு மொழிகளும் வீடு பேற்றிற்குத் தடையாவன . ' யான் எனது என்னும் செருக்கறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும் என்றார் திருவள்ளுவரும் . மாய்த்து - கெடுத்து . அமுது சாவாமருந்தாயினும் குறிப்பிட்ட கால அளவில் அதன் ஆற் றல் கெடும் . அக்குற்றம் இல்லாத இறைவனைக் ' கோதில் அமுது ' என்றார் . கண் கோதிலமுதானைக் குலாவுதில்லை கண்டேனே என்பதனால் நிருத்ததரிசனம் என்னும் பதிகப் பொருள் புலப்படு தல் காண்க . 5 478 பிறவிதனை யறமாற்றிப் பிணிமூப்பென் றிவையிரண்டும் உறவினொடு மொழியச்சென் றுலகுடைய வொரு முதலைச் செறிபொழில்சூழ் தில்லைநகர் திருச்சிற்றம் பலமன்னி மறையவரும் வானவரும் வணங்கிட நான் கண்டேனே . - ரை . பிறவிதனை அறமாற்றி - பிறவித் துன்பத்தினை முழுவ தும் நீக்கினமையால் பிணி மூப்பு என்று இவை இரண்டின் உறவி னொடு ஒழிய -பிணி மூப்பு என்று சொல்லப்படுகின்ற இவை இரண் டும் சுற்றப்பற்றினோடும் நீங்கிப்போக உலகு உடைய ஒரு முதலை - உலகு உயிர்களை யெல்லாம் தனதாகவுடைய ஒப்பற்ற முழுமுதல் வனது ஐந்தொழிற் கூத்தினை செறி பொழில் சூழ் தில்லை திருச் சிற்றம்பலம் சென்று மன்னி - நெருங்கிய சோலைகள் சூழ்ந்த தில்லை நகர்க்கணுள்ள திருச்சிற்றம்பலத்தைப் போய்ச் சார்ந்து மறையவரும் வானவரும் வணங்கிட நான் கண்டேன் - தில்லைவாழ் அந்தணர்க ளும் தேவர்களும் வணங்க யானும் தரிசித்தேன் .