திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவெம்பாவை 511 நெஞ்சப்பேதையர்போல் பயனின்றிக் கிடக்கின்றாய். உன் துயிலின் தன்மைதான் யாதோ? எம்பாவாய்! பயனின்றிக் கிடக்கும் இவள் பயன்பெற அருள் செய்வாயாக (என வேண்டுதல் செய்தலும் எழுந்து வந்த அவளையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டனர்) என்பதாம். அன்னே என்பது இளைய மகளிரை அழைக்கும் அன்புமொழி செறிபரற்கானிற் சிலம்படி பாய் ஆமே நடக்க அருவினையேன் பெற்றவம்மனைக்கே" எனத் திருக்கோவையாரில் (-228) வருதலுங் காண்க. எழுப்பப்பட்டவளுடைய நற்பண்புகளை அறிந்த தோழியர் 'என்னானை என்னரையன் இன்னமுதன்' என்றதனைக் கேளாமை யையும் விடிந்தபின் துயிலெழாமையையும் வன்னெஞ்சப் பேதையர் போல் வாளாகிடந்தமையையும் இவள்பால் கண்டனராதலின் 'அன்னே இவையுஞ் சிலவோ? என்று வினாவுவாராயினர். சிலவோ என்பதற்கு சிலவுளவோ என உரைக்க. அமரரும் என்னும் முற் றும்மை தொக்கது. உன்னற்கும் என்னும் உம்மைதொக்கது. உன் ல்ன - நினைத்தல் "மனமு நினைவு முன்னலாகும்" எனப் பிங்கலந்தை யில் (10-186) வருதலுங்காண்க. வாக்குக்கேயன்றி மனத்துக்கும் அப் பாற்பட்டவன் இறைவனாதலின் "உன்னற் கரியான்" என்றார், 'உன்னற்கரிய.... மாமறையோன்" (பொன்னூசல்-7) எனஅடிகள் பிறிதோரிடத்துக் கூறுதல் காண்க. ஒப்பற்றவனாதலின் 'ஒருவன்'' 'என்றார். "கேழே வரையுமில்லோன்" திருக்கோவையார் (-269) 'ஒப்பிலா ஒருவன் "தன் ஒப்பொருவர் இல்லாதான்" எனத் தேவாரத்தும் (நாவு. 239 - 4; 265-7) வருவன காண்க. கேடில்லாத பெரும் புகழுடையோன் இறைவனா தலின் இருஞ் சீரான் என்றார். 'அந்தமில் புகழெந்தை" "எல்லையில் புகழாளன்" என்றும், "உலவு பல்புகழார்" 'குற்றமில் பெரும் புகழ்க்கொள்ளிக் காடர்" (94-4; 295-3; 380-8; 274 - 11) எனவும் ஆளுடைய பிள்ளையார் அருளியமையுங் காண்க. சீர் - புகழ் "சீர் மிகு சிறப்பி னோன்'' (கலி.133-3) என்புழிப்போல் இருஞ்சீரான் சின்னங்கள் - பெரிய புகழினையுடைய இறைவனது புகழை ஊதுகின்ற நாகசின்னங்கள். சின்னங்களில் இறைவன் புகழ் களை அமைத்து ஊதுதலை கந்தபுராணத்தும் காண்க. இவற்றின் ஒலியைக்கேட்ட அளவில் துயிலுணர்த்தப்பட்டவள் சிவனே சிவனே என்று கூறுதலின் "சின்னங்கள் கேட்பச் சிவன் என்றே வாய் திறப்பாய்" என்றார். வாய்திறத்தல் - வாய்திறந்து கூறுதல். இப் பொருட்டாதலை. "திங்கள் வாணிகர் வெள்வளை கொண்டகன் றார் திறம் வாய் திறவாய்" என்னும் திருக்கோவையார் (-183) உரையில் 'வாய்திறவாய்' என்பதற்கு ‘கூறுகின்றிலை' எனப் பேராசி ரியர் உரைத்தமையானுமறிக.
திருவெம்பாவை 511 நெஞ்சப்பேதையர்போல் பயனின்றிக் கிடக்கின்றாய் . உன் துயிலின் தன்மைதான் யாதோ ? எம்பாவாய் ! பயனின்றிக் கிடக்கும் இவள் பயன்பெற அருள் செய்வாயாக ( என வேண்டுதல் செய்தலும் எழுந்து வந்த அவளையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டனர் ) என்பதாம் . அன்னே என்பது இளைய மகளிரை அழைக்கும் அன்புமொழி செறிபரற்கானிற் சிலம்படி பாய் ஆமே நடக்க அருவினையேன் பெற்றவம்மனைக்கே எனத் திருக்கோவையாரில் ( -228 ) வருதலுங் காண்க . எழுப்பப்பட்டவளுடைய நற்பண்புகளை அறிந்த தோழியர் ' என்னானை என்னரையன் இன்னமுதன் ' என்றதனைக் கேளாமை யையும் விடிந்தபின் துயிலெழாமையையும் வன்னெஞ்சப் பேதையர் போல் வாளாகிடந்தமையையும் இவள்பால் கண்டனராதலின் ' அன்னே இவையுஞ் சிலவோ ? என்று வினாவுவாராயினர் . சிலவோ என்பதற்கு சிலவுளவோ என உரைக்க . அமரரும் என்னும் முற் றும்மை தொக்கது . உன்னற்கும் என்னும் உம்மைதொக்கது . உன் ல்ன - நினைத்தல் மனமு நினைவு முன்னலாகும் எனப் பிங்கலந்தை யில் ( 10-186 ) வருதலுங்காண்க . வாக்குக்கேயன்றி மனத்துக்கும் அப் பாற்பட்டவன் இறைவனாதலின் உன்னற் கரியான் என்றார் ' உன்னற்கரிய .... மாமறையோன் ( பொன்னூசல் -7 ) எனஅடிகள் பிறிதோரிடத்துக் கூறுதல் காண்க . ஒப்பற்றவனாதலின் ' ஒருவன் ' ' ' என்றார் . கேழே வரையுமில்லோன் திருக்கோவையார் ( -269 ) ' ஒப்பிலா ஒருவன் தன் ஒப்பொருவர் இல்லாதான் எனத் தேவாரத்தும் ( நாவு . 239 - 4 ; 265-7 ) வருவன காண்க . கேடில்லாத பெரும் புகழுடையோன் இறைவனா தலின் இருஞ் சீரான் என்றார் . ' அந்தமில் புகழெந்தை எல்லையில் புகழாளன் என்றும் உலவு பல்புகழார் ' குற்றமில் பெரும் புகழ்க்கொள்ளிக் காடர் ( 94-4 ; 295-3 ; 380-8 ; 274 - 11 ) எனவும் ஆளுடைய பிள்ளையார் அருளியமையுங் காண்க . சீர் - புகழ் சீர் மிகு சிறப்பி னோன் ' ' ( கலி.133-3 ) என்புழிப்போல் இருஞ்சீரான் சின்னங்கள் - பெரிய புகழினையுடைய இறைவனது புகழை ஊதுகின்ற நாகசின்னங்கள் . சின்னங்களில் இறைவன் புகழ் களை அமைத்து ஊதுதலை கந்தபுராணத்தும் காண்க . இவற்றின் ஒலியைக்கேட்ட அளவில் துயிலுணர்த்தப்பட்டவள் சிவனே சிவனே என்று கூறுதலின் சின்னங்கள் கேட்பச் சிவன் என்றே வாய் திறப்பாய் என்றார் . வாய்திறத்தல் - வாய்திறந்து கூறுதல் . இப் பொருட்டாதலை . திங்கள் வாணிகர் வெள்வளை கொண்டகன் றார் திறம் வாய் திறவாய் என்னும் திருக்கோவையார் ( -183 ) உரையில் ' வாய்திறவாய் ' என்பதற்கு கூறுகின்றிலை ' எனப் பேராசி ரியர் உரைத்தமையானுமறிக .