திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

கண்டபத்து 1069 இதன் கண் "ஆண்டானை வானவரும் தொழுந்தில்லை கண் டேன்'' என்பதனால் நிருத்ததரிசனம் என்னும் பதிகப் பொருள் புலப்படுதல் காண்க. 8 181 - பாங்கினொடு பரிசொன்றும் அறியாத நாயேனை ஓங்கியுளத் தொளிவளர வுலப்பிலா அன்பருளி வாங்கிளினை மலமறுத்து வான் கருணை தந்தானை நான்குமறை பயில்தில்லை யம்பலத்தே கண்டேனே. ப-ரை. பாங்கினொடு பரிசு ஒன்றும் அறியாத நாயேனை- இறைவனை அடையும் முறைமையையும் அதற்குரிய நல்லியல்பினை யும் சிறிதும் அறியமாட்டாத இழிவுடைய என்னை, உளத்து ஒளி ஓங்கி வளர - உள்ளத்தின் கண் ஞான ஒளியானது உயர்ந்து வள ரும் வண்ணம், உலப்புஇ அன்பு அருளி - குறைதலில்லாத அன் பினைத் தந்தருளி, விளை வாங்கி மலம் அறுத்து - என்வினைகளைத் தன்பால் ஏற்று ஆணவமலத்தினைக் கெடுத்து, வான் கருணை தானை- தனது மேலான கருணையைத் தந்து ஆட்கொண்ட பரமா சாரியனது ஐந்தொழிற் கூத்தினை, நான்கு மறை பயில் தில்லை அம் பலத்து கண்டேன் - நான்கு வேதங்களும் ஓதப்படுகின்ற தில்லையம் பலத்தின் கண்ணே தரிசித்தேன். பாங்கினொடு பரிசொன்று ளத்தின் கண் ஞான ஒளி வளரும் வண்ணம் அன்பினைத் தந்தருளி அறியாத இழிவுடைய என்னை உள் என் வினையை வாங்கி ஆணவமலத்தினைக் கெடுத்துத் தன் மேலான கருணையைத் தந்து ஆட்கொண்ட பரமாசாரியனது ஐந்தொழிற் கூத்தினைத் தில்லையம்பலத்தின் கண்ணே கண்டேன் என்பதாம். பாங்கு முறைமை. பரிசு என்பது இறைவனை அடையும் முறை மைக்கேற்ற நல்லியல்பினை உணர்த்தியது. ஒன்றும் - ஒரு சிறிதும். உளத்தொளி ஓங்கி வளர என்றது உயிரின் உள்ளத்து இறையறிவா கிய ஞானம் மிக்கு வளர என்றவாறு. உலத்தல் - குறைதல். வினை வாங்கி என்பதற்கு என் வினையைத் தன்பால் ஏற்றுக் கொண்டு என் பது சொற் பொருளாயினும், 'விரிந்த சஞ்சித வினைகள் அன்பு டன் நாம் விழிக்க வெந்தன ... புந்தி சேரருள் வருவினை போக்கும்" (திருவாதவூரடிகள் புராணம்) என அடிகள் வரலாற்றில் கூறுத லால் வினைகளை அழித்தென்பதே கருத்தாகக் கொள்க. உளத் தொளி வளர அன்பருளி வினைவடங்கி மலமறுத்து என்பதனால், வான் கருணை தந்தானை என்பதற்கு வான் கருணையைத் தந்து ஆட் கொண்ட பரமாசாரியனை என உரைக்கப்பட்டது. நான்கு மறை என்பதற்கு நால்வகை வாக்குக்கள் என்பாருமுளர். ரூக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரி எனப்படும் நால்வகை வாக்குக்களுள்
கண்டபத்து 1069 இதன் கண் ஆண்டானை வானவரும் தொழுந்தில்லை கண் டேன் ' ' என்பதனால் நிருத்ததரிசனம் என்னும் பதிகப் பொருள் புலப்படுதல் காண்க . 8 181 - பாங்கினொடு பரிசொன்றும் அறியாத நாயேனை ஓங்கியுளத் தொளிவளர வுலப்பிலா அன்பருளி வாங்கிளினை மலமறுத்து வான் கருணை தந்தானை நான்குமறை பயில்தில்லை யம்பலத்தே கண்டேனே . - ரை . பாங்கினொடு பரிசு ஒன்றும் அறியாத நாயேனை இறைவனை அடையும் முறைமையையும் அதற்குரிய நல்லியல்பினை யும் சிறிதும் அறியமாட்டாத இழிவுடைய என்னை உளத்து ஒளி ஓங்கி வளர - உள்ளத்தின் கண் ஞான ஒளியானது உயர்ந்து வள ரும் வண்ணம் உலப்புஇ அன்பு அருளி - குறைதலில்லாத அன் பினைத் தந்தருளி விளை வாங்கி மலம் அறுத்து - என்வினைகளைத் தன்பால் ஏற்று ஆணவமலத்தினைக் கெடுத்து வான் கருணை தானை- தனது மேலான கருணையைத் தந்து ஆட்கொண்ட பரமா சாரியனது ஐந்தொழிற் கூத்தினை நான்கு மறை பயில் தில்லை அம் பலத்து கண்டேன் - நான்கு வேதங்களும் ஓதப்படுகின்ற தில்லையம் பலத்தின் கண்ணே தரிசித்தேன் . பாங்கினொடு பரிசொன்று ளத்தின் கண் ஞான ஒளி வளரும் வண்ணம் அன்பினைத் தந்தருளி அறியாத இழிவுடைய என்னை உள் என் வினையை வாங்கி ஆணவமலத்தினைக் கெடுத்துத் தன் மேலான கருணையைத் தந்து ஆட்கொண்ட பரமாசாரியனது ஐந்தொழிற் கூத்தினைத் தில்லையம்பலத்தின் கண்ணே கண்டேன் என்பதாம் . பாங்கு முறைமை . பரிசு என்பது இறைவனை அடையும் முறை மைக்கேற்ற நல்லியல்பினை உணர்த்தியது . ஒன்றும் - ஒரு சிறிதும் . உளத்தொளி ஓங்கி வளர என்றது உயிரின் உள்ளத்து இறையறிவா கிய ஞானம் மிக்கு வளர என்றவாறு . உலத்தல் - குறைதல் . வினை வாங்கி என்பதற்கு என் வினையைத் தன்பால் ஏற்றுக் கொண்டு என் பது சொற் பொருளாயினும் ' விரிந்த சஞ்சித வினைகள் அன்பு டன் நாம் விழிக்க வெந்தன ... புந்தி சேரருள் வருவினை போக்கும் ( திருவாதவூரடிகள் புராணம் ) என அடிகள் வரலாற்றில் கூறுத லால் வினைகளை அழித்தென்பதே கருத்தாகக் கொள்க . உளத் தொளி வளர அன்பருளி வினைவடங்கி மலமறுத்து என்பதனால் வான் கருணை தந்தானை என்பதற்கு வான் கருணையைத் தந்து ஆட் கொண்ட பரமாசாரியனை என உரைக்கப்பட்டது . நான்கு மறை என்பதற்கு நால்வகை வாக்குக்கள் என்பாருமுளர் . ரூக்குமை பைசந்தி மத்திமை வைகரி எனப்படும் நால்வகை வாக்குக்களுள்