திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

1078 திருவாசக ஆராய்ச்சியுரை கொல் - ஐயம். வேண்டாதது என்பது வேண்டாது என நின்றது. விரும்பத் தகாதது என்பது பொருள். பின்னர் வரும் வேண்டாது எதிர்மறை வினையெச்சம். மேவுதல் - விரும்புதல். மிக்க அன்பு மேவு தல் தொண்டனேற்கும் உண்டாங்கொல் என முடிக்க. எனக்கு நின தருளால் அம்மிக்க அன்பு உளதாதல் வேண்டும் என்பது குறிப்பெச்சம். இதன்கண் ''வேண்டா தொன்றும் வேண்டாது மிக்க அன்பே மேவுதலே தொண்டனேற்கு முண்டாங் கொல்" என்பதனால் சதா முத்தி என்னும் பதிகப்பொருள் புலப்படுதல் காண்க. 4 487 மேவு முன்றன் அடியாருள் விரும்பி யானும் மெய்ம்மையே காவி சேருங் கயற்கண்ணாள் பங்கா வுன்றன் கருணையினால் பாவி யேற்கும் உண்டாமோ பரமா னந்தப் பழங்கடல் சேர்ந் தாவி யாக்கை யானெனதென் றியாது மின்றி பறுதலே. ப- ரை. காவி சேரும் கயல் கண்ணாள் பங்கா- குவளை மலரின் தன்மை அமைந்த சயல் போன்ற தன்மைகளையுடைய உமாதேவி யின் கூற்றையுடையவனே, மேவும் உன்தன் அடியாருள் - நின்னை விரும்பும் மெய்யடியார் நடுவுள் இருத்தலை, மெய்ம்மையே யானும் விரும்பி - உண்மையாகவே யானும் விரும்பியுள்ளேன்; உன்தன் கரு ணையினால் - உனது திருவருளினாலே, பரம ஆனந்த பழம் கடல் சேர்ந்து - மேலாகிய பேரின்பத்தைத் தரும் பழமையாகிய கடலை அடைந்து. ஆவி யாக்கை யான் எனது என்று யாதும் இன்றி அறு தல் - உயிரும் உடம்பும் யான் என்னும் அஃப்பற்றும் எனது னும் புறப்பற்றும் என்று சொல்லப்படுகின்ற யாதொன்றும் இல் லாமல் அற்றுப்போதல் பாவியேற்கும் உண்டாமோ- பாவியாகிய எனக்கும் உளதாகுமோ? உன் கருணையினால் உளதாக வேண்டும். என் உமையம்மை பங்ா, நின் மெய்யடியார் நடுவுள் இருத்தலை உண் மையாகவே அடியேனும் விரும்பியுள்ளேன்; உன்தன் கருணையினால் பரமானந்தப் பழங்கடல் சேர்ந்து உயிரும் உடம்பும் யான் என் னும் அகப்பற்றும் எனது என்னும் புறப்பற்றும் இல்லாமல் அற் றுப் போதல் பாவியாகிய எனக்கும் உளதாகுமோ? உன்கருணையி னால் உளதாக வேண்டும் என்பதாம். மேவும் - விரும்பும். அடியாருள் என்பதற்கு அடியார் நடுவுள் இருத்தலை எனவும், விரும்பி என்பதற்கு விரும்பியுள்ளேன் எனவும் சில சொற்கள் வருவித்துரைக்கப்பட்டன. அடியார் நடுவுள் இருத் தலை அடிகள் விரும்பியமை,
1078 திருவாசக ஆராய்ச்சியுரை கொல் - ஐயம் . வேண்டாதது என்பது வேண்டாது என நின்றது . விரும்பத் தகாதது என்பது பொருள் . பின்னர் வரும் வேண்டாது எதிர்மறை வினையெச்சம் . மேவுதல் - விரும்புதல் . மிக்க அன்பு மேவு தல் தொண்டனேற்கும் உண்டாங்கொல் என முடிக்க . எனக்கு நின தருளால் அம்மிக்க அன்பு உளதாதல் வேண்டும் என்பது குறிப்பெச்சம் . இதன்கண் ' ' வேண்டா தொன்றும் வேண்டாது மிக்க அன்பே மேவுதலே தொண்டனேற்கு முண்டாங் கொல் என்பதனால் சதா முத்தி என்னும் பதிகப்பொருள் புலப்படுதல் காண்க . 4 487 மேவு முன்றன் அடியாருள் விரும்பி யானும் மெய்ம்மையே காவி சேருங் கயற்கண்ணாள் பங்கா வுன்றன் கருணையினால் பாவி யேற்கும் உண்டாமோ பரமா னந்தப் பழங்கடல் சேர்ந் தாவி யாக்கை யானெனதென் றியாது மின்றி பறுதலே . ப- ரை . காவி சேரும் கயல் கண்ணாள் பங்கா- குவளை மலரின் தன்மை அமைந்த சயல் போன்ற தன்மைகளையுடைய உமாதேவி யின் கூற்றையுடையவனே மேவும் உன்தன் அடியாருள் - நின்னை விரும்பும் மெய்யடியார் நடுவுள் இருத்தலை மெய்ம்மையே யானும் விரும்பி - உண்மையாகவே யானும் விரும்பியுள்ளேன் ; உன்தன் கரு ணையினால் - உனது திருவருளினாலே பரம ஆனந்த பழம் கடல் சேர்ந்து - மேலாகிய பேரின்பத்தைத் தரும் பழமையாகிய கடலை அடைந்து . ஆவி யாக்கை யான் எனது என்று யாதும் இன்றி அறு தல் - உயிரும் உடம்பும் யான் என்னும் அஃப்பற்றும் எனது னும் புறப்பற்றும் என்று சொல்லப்படுகின்ற யாதொன்றும் இல் லாமல் அற்றுப்போதல் பாவியேற்கும் உண்டாமோ- பாவியாகிய எனக்கும் உளதாகுமோ ? உன் கருணையினால் உளதாக வேண்டும் . என் உமையம்மை பங்ா நின் மெய்யடியார் நடுவுள் இருத்தலை உண் மையாகவே அடியேனும் விரும்பியுள்ளேன் ; உன்தன் கருணையினால் பரமானந்தப் பழங்கடல் சேர்ந்து உயிரும் உடம்பும் யான் என் னும் அகப்பற்றும் எனது என்னும் புறப்பற்றும் இல்லாமல் அற் றுப் போதல் பாவியாகிய எனக்கும் உளதாகுமோ ? உன்கருணையி னால் உளதாக வேண்டும் என்பதாம் . மேவும் - விரும்பும் . அடியாருள் என்பதற்கு அடியார் நடுவுள் இருத்தலை எனவும் விரும்பி என்பதற்கு விரும்பியுள்ளேன் எனவும் சில சொற்கள் வருவித்துரைக்கப்பட்டன . அடியார் நடுவுள் இருத் தலை அடிகள் விரும்பியமை