திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை ப- ரை. சீர் ஆர் அருளால் சிந்தனையை திருத்தி ஆண்ட சிவ லோகா - சிறப்புப் பொருந்திய நின் திருவருளால் என் மனத்தைத் தூய்மை செய்து ஆட்கொண்ட சிவபுரத்திறைவனே, பெருமானே- சிவபெருமானே, உன் தமர் எல்லாம் தாரா அருள் ஒன்று இன் றியே தந்தாய் என்று ஆரா நின்றார் - நினது உறவினர்களாகிய மெய்யடியார்கள் எல்லாரும் நீ தங்களுக்குக் கொடுக்க வேண்டிய அருளில் ஒரு சிறிதும் எஞ்சுதலின்றி முழுதுந் தந்தனை என்று மகிழ்ந்து பேரின்பத்தை அனுபவியா நின்றார்கள், அடியேனும் அய லார் போல அயர்வேனோ - நின்னால் வலிய வந்து ஆட்கொள்ளப் பட்ட அடியேனும் நின்னருளுக்குப் புறம்பானவர்போல வருந்து வேனோ. பேர் ஆனந்தம் பேராமை வைக்கவேண்டும் - பேரின்ப அனுபவமானது என்பால் நின்றும் நீங்காவண்ணம் எனக்கு அமைத் தருள வேண்டும். 1084 எல் நின் திருவருளால் என் சிந்தனையைத் திருத்தி ஆண்ட சிவ லோகா, சிவபெருமானே, உன் தமராகிய மெய்யடியார்கள் லாரும் தங்களுக்குக் கொடுக்கவேண்டிய அருள் முழுவதும் தந்தனை என்று மகிழ்ந்து பேரின்பத்தை அனுபவியா நின்றார்கள். நின்னால் ஆட்கொள்ளப்பட்ட அடியேனும் அயலார் போலத் தளர்வேனோ? பேரின்ப அனுபவமானது நீங்காவண்ணம் எனக்கு அமைத்தருள வேண்டும் என்பதாம். தாரா அருள் -கொடுக்கவேண்டிய அருளில் கொடுபடாது எஞ்சி நின்ற அருள். உன் தமர் - உன் சுற்றத்தினராகிய மெய்யடி யார். இறைவனுக்கு அவன் மெய்யடியார்கள் தமராதலை, "இந்திரன் மால் பிரமன்னெழிலார் மிகு தேவரெல்லாம் வந்தெதிர் கொள்ளவென்னை மத்தயானை அருள்புரிந்து மந்திரமா முனிவரிவனாரென எம்பெருமான் நந்தமரூரனென்றான் நொடித்தான் மலையுத்தமனே" தே. 100-9 என இறைவன் சுந்தரரை நந்தமர் என்று அருளியவாற்றாலும் இனிது விளங்கும். ஆர்தல் - அனுபவித்தல். அடியேனும் என்பதில் உம்மை நீயே வலியவந்து ஆட்கொண்டமையால் பேரின்ப அனுப வத்திற்குப் பெரிதும் உரிமையுடைய எனப்பொருள் தருதலால் உயர்வு சிறப்பு. அயர்வேனோ என்பதில் ஓகாரம் - எதிர்மறை. அயர்கின்றது - வருந்துகின்றது. (கோவை 13 உரை) சீரார் அருள்- பொதுவருளின்றிச் சிறப்பாகிய திருவருள். "நின் சீரருள் என் கொலென்று வேர்க்கின்ற என்னை" (நீத், 8) என அடிகள் இறை வன் அருளைச் "சீரருள்" என்றல் காண்க. சீர் - மிக்க புகழுமாம். சிந்தனையைத் திருத்தி-மனத்தை நெகிழ்த்து. திருத்தி - நெகிழ்த்து.
திருவாசக ஆராய்ச்சியுரை ப- ரை . சீர் ஆர் அருளால் சிந்தனையை திருத்தி ஆண்ட சிவ லோகா - சிறப்புப் பொருந்திய நின் திருவருளால் என் மனத்தைத் தூய்மை செய்து ஆட்கொண்ட சிவபுரத்திறைவனே பெருமானே சிவபெருமானே உன் தமர் எல்லாம் தாரா அருள் ஒன்று இன் றியே தந்தாய் என்று ஆரா நின்றார் - நினது உறவினர்களாகிய மெய்யடியார்கள் எல்லாரும் நீ தங்களுக்குக் கொடுக்க வேண்டிய அருளில் ஒரு சிறிதும் எஞ்சுதலின்றி முழுதுந் தந்தனை என்று மகிழ்ந்து பேரின்பத்தை அனுபவியா நின்றார்கள் அடியேனும் அய லார் போல அயர்வேனோ - நின்னால் வலிய வந்து ஆட்கொள்ளப் பட்ட அடியேனும் நின்னருளுக்குப் புறம்பானவர்போல வருந்து வேனோ . பேர் ஆனந்தம் பேராமை வைக்கவேண்டும் - பேரின்ப அனுபவமானது என்பால் நின்றும் நீங்காவண்ணம் எனக்கு அமைத் தருள வேண்டும் . 1084 எல் நின் திருவருளால் என் சிந்தனையைத் திருத்தி ஆண்ட சிவ லோகா சிவபெருமானே உன் தமராகிய மெய்யடியார்கள் லாரும் தங்களுக்குக் கொடுக்கவேண்டிய அருள் முழுவதும் தந்தனை என்று மகிழ்ந்து பேரின்பத்தை அனுபவியா நின்றார்கள் . நின்னால் ஆட்கொள்ளப்பட்ட அடியேனும் அயலார் போலத் தளர்வேனோ ? பேரின்ப அனுபவமானது நீங்காவண்ணம் எனக்கு அமைத்தருள வேண்டும் என்பதாம் . தாரா அருள் -கொடுக்கவேண்டிய அருளில் கொடுபடாது எஞ்சி நின்ற அருள் . உன் தமர் - உன் சுற்றத்தினராகிய மெய்யடி யார் . இறைவனுக்கு அவன் மெய்யடியார்கள் தமராதலை இந்திரன் மால் பிரமன்னெழிலார் மிகு தேவரெல்லாம் வந்தெதிர் கொள்ளவென்னை மத்தயானை அருள்புரிந்து மந்திரமா முனிவரிவனாரென எம்பெருமான் நந்தமரூரனென்றான் நொடித்தான் மலையுத்தமனே தே . 100-9 என இறைவன் சுந்தரரை நந்தமர் என்று அருளியவாற்றாலும் இனிது விளங்கும் . ஆர்தல் - அனுபவித்தல் . அடியேனும் என்பதில் உம்மை நீயே வலியவந்து ஆட்கொண்டமையால் பேரின்ப அனுப வத்திற்குப் பெரிதும் உரிமையுடைய எனப்பொருள் தருதலால் உயர்வு சிறப்பு . அயர்வேனோ என்பதில் ஓகாரம் - எதிர்மறை . அயர்கின்றது - வருந்துகின்றது . ( கோவை 13 உரை ) சீரார் அருள் பொதுவருளின்றிச் சிறப்பாகிய திருவருள் . நின் சீரருள் என் கொலென்று வேர்க்கின்ற என்னை ( நீத் 8 ) என அடிகள் இறை வன் அருளைச் சீரருள் என்றல் காண்க . சீர் - மிக்க புகழுமாம் . சிந்தனையைத் திருத்தி - மனத்தை நெகிழ்த்து . திருத்தி - நெகிழ்த்து .