திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

1090 திருவாசக ஆராய்ச்சியுரை பிழைத்தாற் பொறுக்க வேண்டாவோ பிறைசேர் சடையாய் முறையோவென் றழைத்தால் அருளா தொழிவதே அம்மா னேயுன் அடியேற்கே. ப - ரை: உடையாய் - என்னை ஆளாகவுடையவனே, குழைத் தால் பண்டை கொடுவினை நோய் காவாய் - என்னை இவ்வாக்கை யோடிருந்து துயருறும் வண்ணம் நீ விடினும் என் பழைய கொடிய வினையாகிய நோயினை நீக்கிக் காத்தருள்வாயாக. உமையாள் கணவா - உமையம்மைக்கு நாயகனே, கொடுவினையேன் உழைத்தால் உறுதி உண்டோ - கொடிய வினையையுடைய நான் அவ்வினையினின் றும் நீங்கும் பொருட்டு முயற்சிசெய்தால் உறுதியாகிய பயன் உளதா குமோ? உளதாகாதே; எனை ஆள்வாய் - ஆதலால் என்னை ஆட் கொண்டருள்வாயாக. பிறை சேர் சடையாய் - பிறைச் சந்திரன் பொருந்திய சடைமுடியையுடையவனே, பிழைத்தால் பொறுக்க வேண்டாவோ - இழிவுடைய யான் பிழை செய்தால் பேரருட் பெரி யோனாகிய நீ பொறுத்துக்கொள்ள வேண்டாவோ, அம்மானே - பெரியோனே, முறையோ என்று அழைத்தால் - பிழைத்தாற் பொறுக்க வேண்டாவோ இது முறையோ என்று ஓலமிட்டழைத்து விண்ணப்பம் செய்தால், உன் அடியேற்கு அருளாது ஒழிவதே- உன் அடியவனாகிய எனக்கு நீ அருள்செய்யாதொழிவது தகுதியா குமோ? நின் பெருமைக்கு அது பொருந்தாமையின் அருள் செய்ய வேண்டும். உடையானே! என்னை இவ் வாக்கையோடிருந்து துயருறும் வண் ணம் விடினும் கொடுவினையாகிய நோயினை நீக்கி என்னைக் காத் தருளவேண்டும். கொடுவினையேன் அவ்வினையினின்றும் நீங்கும் பொருட்டு முயற்சி செய்தால் உறுதியான பயன் உளதாகுமோ? உள தாகாதே. ஆதலால் என்னையாட்கொண்டருள்வாயாக. யான் பிழை செய்தால் நீ பொறுத்துக்கொள்ள வேண்டாவோ? அம்மானே இது முறையோ என்று ஓலமிட்டு அழைத்து விண்ணப்பஞ் செய்தால் உன் அடியேற்கு நீ அருள்செய்யாதொழிவது தகுதியாகுமோ? அது நினக்குத் தகுதியாகாமையின் அருள் செய்யவேண்டும் என்பதாம். என்னை இவ்வுடலுடனிருந்து தளர்வடையச்செய்தால் எனது பழைய கொடுவினையாகிய நோயினைக் காத்தருளவேண்டும் என்பார். 'பண்டைக் கொடுவினை நோய் காவாய்' என்றார். கொடுவினை நோய் என்றது கொடிய பிராரத்த வினையாலுளதாகும் துன்பத் தினை. உழைத்தால் உறுதியுண்டோ என்றது கொடுவினை நோயை நீக்குதற்கு யான் முயற்சி செய்தாலும் நின் திருவருள் இல்லாத
1090 திருவாசக ஆராய்ச்சியுரை பிழைத்தாற் பொறுக்க வேண்டாவோ பிறைசேர் சடையாய் முறையோவென் றழைத்தால் அருளா தொழிவதே அம்மா னேயுன் அடியேற்கே . - ரை : உடையாய் - என்னை ஆளாகவுடையவனே குழைத் தால் பண்டை கொடுவினை நோய் காவாய் - என்னை இவ்வாக்கை யோடிருந்து துயருறும் வண்ணம் நீ விடினும் என் பழைய கொடிய வினையாகிய நோயினை நீக்கிக் காத்தருள்வாயாக . உமையாள் கணவா - உமையம்மைக்கு நாயகனே கொடுவினையேன் உழைத்தால் உறுதி உண்டோ - கொடிய வினையையுடைய நான் அவ்வினையினின் றும் நீங்கும் பொருட்டு முயற்சிசெய்தால் உறுதியாகிய பயன் உளதா குமோ ? உளதாகாதே ; எனை ஆள்வாய் - ஆதலால் என்னை ஆட் கொண்டருள்வாயாக . பிறை சேர் சடையாய் - பிறைச் சந்திரன் பொருந்திய சடைமுடியையுடையவனே பிழைத்தால் பொறுக்க வேண்டாவோ - இழிவுடைய யான் பிழை செய்தால் பேரருட் பெரி யோனாகிய நீ பொறுத்துக்கொள்ள வேண்டாவோ அம்மானே - பெரியோனே முறையோ என்று அழைத்தால் - பிழைத்தாற் பொறுக்க வேண்டாவோ இது முறையோ என்று ஓலமிட்டழைத்து விண்ணப்பம் செய்தால் உன் அடியேற்கு அருளாது ஒழிவதே உன் அடியவனாகிய எனக்கு நீ அருள்செய்யாதொழிவது தகுதியா குமோ ? நின் பெருமைக்கு அது பொருந்தாமையின் அருள் செய்ய வேண்டும் . உடையானே ! என்னை இவ் வாக்கையோடிருந்து துயருறும் வண் ணம் விடினும் கொடுவினையாகிய நோயினை நீக்கி என்னைக் காத் தருளவேண்டும் . கொடுவினையேன் அவ்வினையினின்றும் நீங்கும் பொருட்டு முயற்சி செய்தால் உறுதியான பயன் உளதாகுமோ ? உள தாகாதே . ஆதலால் என்னையாட்கொண்டருள்வாயாக . யான் பிழை செய்தால் நீ பொறுத்துக்கொள்ள வேண்டாவோ ? அம்மானே இது முறையோ என்று ஓலமிட்டு அழைத்து விண்ணப்பஞ் செய்தால் உன் அடியேற்கு நீ அருள்செய்யாதொழிவது தகுதியாகுமோ ? அது நினக்குத் தகுதியாகாமையின் அருள் செய்யவேண்டும் என்பதாம் . என்னை இவ்வுடலுடனிருந்து தளர்வடையச்செய்தால் எனது பழைய கொடுவினையாகிய நோயினைக் காத்தருளவேண்டும் என்பார் . ' பண்டைக் கொடுவினை நோய் காவாய் ' என்றார் . கொடுவினை நோய் என்றது கொடிய பிராரத்த வினையாலுளதாகும் துன்பத் தினை . உழைத்தால் உறுதியுண்டோ என்றது கொடுவினை நோயை நீக்குதற்கு யான் முயற்சி செய்தாலும் நின் திருவருள் இல்லாத