திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

குழைத்தபத்து அருளின் விடத்து உறுதியாகிய பயன் உண்டாகாது என்றபடி. செல்வியாகிய உமையம்மைக்கு நீ தலைவனாதலின் என்னை ஆள்தல் வேண்டும் என்பார் "உமையாள் கணவா எனையாள்வாய்" என்றார்? உமையாள் கணவா என்பதனை "இமையோர் பெருமானுமையாள் கணவன்" "உமையாள் கணவா எனையாள்வாய்" சுந். 10-2 சுந். 41-9 எனச் சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளியவாற்றாலுங் காண்க. எனை யாள்வாய், "எங்கள் பெருமானே ஏழ்பிறப்பு எனையாள்வாய்" சுந். 41:2. என்பதனாலுமறிக. ஈண்டு ஆள்வாய் என்றது வீடுபேற்றினைத் தந்தருள்வாய் என்றபடி. 1091 திங்களின் பிழைபொறுத்துச் சடையில் தரித்துக்கொண்ட பெருந்தன்மையையுடைய நீ அடியேன் செய்த பிழையினையும் பொறுக்கவேண்டுமென்பார், "பிழைபொறுக்க வேண்டாவோ பிறை சேர் சடையாய்" என்றார். திங்கள் செய்த பிழை தம் மனைவியர் இருபத்தெழுவரில் உரோகிணியை ஒழித்து ஒழிந்தோரை அலட்சியம் செய்தமையாகும். முறையோ என்று அழைத்தால் என்றது பிழைத் தாற் பொறுக்க வேண்டாவோ இது தகுதியாகுமோ என்று ஓலமிட்டு அழைத்து விண்ணப்பஞ் செய்தல் என்றவாறு. தன் அடியார்க்கு உதவி செய்தலின் "உன் அடியேற்கே" என்றார். "உன்னடிய மென்றோரைக் குழுமித் தொல்வானவர் சூழ்ந் தேத்தும்படி நிற்பவன்" எனவுங் காண்க. 495 அடியேன் அல்ல லெல்லாமுன் இதன்கண், எவ்வகையினும் தம்மை ஏற்று வீடுபேறு தந்தருள வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுதல் புலப்படுதலின் ஆத்தும நிவேதனம் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க. அகல ஆண்டா யென்றிருந்தேன் கொடியே ரிடையாள் கூறாஎம் கோவே யாவா என்றருளிச் செடிசே ருடலைச் சிதையாத தெத்துக் கெங்கள் சிவலோகா உடையாய் கூவிப் பணிகொள்ளா தொறுத்தால் ஒன்றும் போதுமே. கோவை:173 ப-ரை. கொடி ஏர் இடையாள் கூறா - கொடியை ஒத்த இடை யினையுடையாளாகிய உமையம்மையை ஒரு கூற்றிலுடையவனே, எம் கோவே - எங்கள் தலைவனே, முன் அடியேன் அல்லல் எல்லாம்
குழைத்தபத்து அருளின் விடத்து உறுதியாகிய பயன் உண்டாகாது என்றபடி . செல்வியாகிய உமையம்மைக்கு நீ தலைவனாதலின் என்னை ஆள்தல் வேண்டும் என்பார் உமையாள் கணவா எனையாள்வாய் என்றார் ? உமையாள் கணவா என்பதனை இமையோர் பெருமானுமையாள் கணவன் உமையாள் கணவா எனையாள்வாய் சுந் . 10-2 சுந் . 41-9 எனச் சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளியவாற்றாலுங் காண்க . எனை யாள்வாய் எங்கள் பெருமானே ஏழ்பிறப்பு எனையாள்வாய் சுந் . 41 : 2 . என்பதனாலுமறிக . ஈண்டு ஆள்வாய் என்றது வீடுபேற்றினைத் தந்தருள்வாய் என்றபடி . 1091 திங்களின் பிழைபொறுத்துச் சடையில் தரித்துக்கொண்ட பெருந்தன்மையையுடைய நீ அடியேன் செய்த பிழையினையும் பொறுக்கவேண்டுமென்பார் பிழைபொறுக்க வேண்டாவோ பிறை சேர் சடையாய் என்றார் . திங்கள் செய்த பிழை தம் மனைவியர் இருபத்தெழுவரில் உரோகிணியை ஒழித்து ஒழிந்தோரை அலட்சியம் செய்தமையாகும் . முறையோ என்று அழைத்தால் என்றது பிழைத் தாற் பொறுக்க வேண்டாவோ இது தகுதியாகுமோ என்று ஓலமிட்டு அழைத்து விண்ணப்பஞ் செய்தல் என்றவாறு . தன் அடியார்க்கு உதவி செய்தலின் உன் அடியேற்கே என்றார் . உன்னடிய மென்றோரைக் குழுமித் தொல்வானவர் சூழ்ந் தேத்தும்படி நிற்பவன் எனவுங் காண்க . 495 அடியேன் அல்ல லெல்லாமுன் இதன்கண் எவ்வகையினும் தம்மை ஏற்று வீடுபேறு தந்தருள வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுதல் புலப்படுதலின் ஆத்தும நிவேதனம் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க . அகல ஆண்டா யென்றிருந்தேன் கொடியே ரிடையாள் கூறாஎம் கோவே யாவா என்றருளிச் செடிசே ருடலைச் சிதையாத தெத்துக் கெங்கள் சிவலோகா உடையாய் கூவிப் பணிகொள்ளா தொறுத்தால் ஒன்றும் போதுமே . கோவை : 173 - ரை . கொடி ஏர் இடையாள் கூறா - கொடியை ஒத்த இடை யினையுடையாளாகிய உமையம்மையை ஒரு கூற்றிலுடையவனே எம் கோவே - எங்கள் தலைவனே முன் அடியேன் அல்லல் எல்லாம்