திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை அகல ஆண்டாய் என்று இருந்தேன் - ஆட்கொண்டபோது அடியே னுடைய துன்பங்கள் எல்லாம் நீங்கும்படி ஆட்கொண்டனை என்று எண்ணியிருந்தேன்; எங்கள் சிவலோகா - எங்கள் சிவலோக நாயகனே, ஆ ஆ என்று அருளி செடி சேர் உடலை சிதையாதது எத்துக்கு - ஆ ஆ என்று இரங்கி முடைநாற்றமுடையதாய்த் துன்பவிளைவினதான இவ் வுடம்பினைக் கெடுக்காதொழிந்தது எதன் பொருட்டு? உடையாய்- என்னை உடையவனே, கூவி பணி கொள்ளாது ஒறுத்தால் ஒன்றும் போதுமே - என்னை அழைத்துத் தொண்டு செய்யும்படி ஏற்றுக்கொள் ளாது செடிசேர் உடலில் வைத்துத் தண்டித்தால் அஃதொன்றும் போதுமோ? 1092 உமையம்மை கூறா, எம்கோவே, ஆட்கொண்டபோது அடியே னுடைய அல்லலெல்லாம் நீங்கும்படி ஆட்கொண்டருளினை என்று எண்ணியிருந்தேன். ஆவாவென்று இரங்கி என் செடிசேர் உடலைச் சிதையாதொழிந்தது எதன்பொருட்டு? உடையாய், என்னைக் கூவிப் பணிகொள்ளாது இவ்வுடலில் வைத்துத் தண்டித்தால் அஃதொன் றும் போதுமோ? ஒறுப்பினும் கூவிப்பணி கொள்ளவேண்டும் என்ப தாம். முன் அடியேன் அல்லல் எல்லாம் அகல ஆண்டாய் என்றிருந் தேன் என மாறிக் கூட்டுக. முன் என்றது திருப்பெருந்துறையில் அடி களை ஆண்ட நாளைக் குறித்தது. கொடியேரிடையாள் என்றது கொடியை ஒத்த இடையினையுடைய உமையம்மையை. ''கொடியேரிடை யாளுமை, பங்குசேர் திருமார்புடையார்'' ஞான 260-9 'கொடியேரிடையாள் தலைவா" சுந். 24-6 கொடியிடை தோள்" கொடியே ரிடைக்கொடி" கோவை 9 கோவை 51 என வருதல் காண்க. ஆவா இரக்கக் குறிப்பு. இறைவன் ஆவாவென்ற ருள்புரியுமியல்பினனாதலின் 'ஆவா என்றருளி' என்றார். "ஆவாவென் றருள் புரியும் ஐயாறன்னே" (250-2) எனும் அப்பர் வாக்காலுமறிக. செடி சேர் உடல் - முடை நாற்றமுடைத்தாய்த் துன்பவிளைவின தான உடல். "செடிசே ருடலமிது நீக்கமாட்டேன்" (சத. 83) "செடி சேருடலைச் செலநீக்கி '" (யாத் 4) "செடியா ராக்கை" (ஆசை 9) என அடிகள் பிறாண்டும் அருளியமை காண்க. எத்துக்கு - எதன் பொருட்டு. "எத்துக்கு இங்கிருந்தீர்'' (சுந். 49.1) "மதுகரமே எத் துக்கு வந்தாய்'" (11-ந் திருமுறை சிவபெருமான் திருவிரட்டை. 29) என வருவனவற்றாலுமறிக. செடிசேர் உடலில் வைத்து வாழச்செய் தலையே 'ஒறுத்தால்' என்றார். போதுமே -ஏ - வினா. ஒறுப்பினும் பணி கொள்ள வேண்டும் என்பது குறிப்பெச்சம்.
திருவாசக ஆராய்ச்சியுரை அகல ஆண்டாய் என்று இருந்தேன் - ஆட்கொண்டபோது அடியே னுடைய துன்பங்கள் எல்லாம் நீங்கும்படி ஆட்கொண்டனை என்று எண்ணியிருந்தேன் ; எங்கள் சிவலோகா - எங்கள் சிவலோக நாயகனே என்று அருளி செடி சேர் உடலை சிதையாதது எத்துக்கு - என்று இரங்கி முடைநாற்றமுடையதாய்த் துன்பவிளைவினதான இவ் வுடம்பினைக் கெடுக்காதொழிந்தது எதன் பொருட்டு ? உடையாய் என்னை உடையவனே கூவி பணி கொள்ளாது ஒறுத்தால் ஒன்றும் போதுமே - என்னை அழைத்துத் தொண்டு செய்யும்படி ஏற்றுக்கொள் ளாது செடிசேர் உடலில் வைத்துத் தண்டித்தால் அஃதொன்றும் போதுமோ ? 1092 உமையம்மை கூறா எம்கோவே ஆட்கொண்டபோது அடியே னுடைய அல்லலெல்லாம் நீங்கும்படி ஆட்கொண்டருளினை என்று எண்ணியிருந்தேன் . ஆவாவென்று இரங்கி என் செடிசேர் உடலைச் சிதையாதொழிந்தது எதன்பொருட்டு ? உடையாய் என்னைக் கூவிப் பணிகொள்ளாது இவ்வுடலில் வைத்துத் தண்டித்தால் அஃதொன் றும் போதுமோ ? ஒறுப்பினும் கூவிப்பணி கொள்ளவேண்டும் என்ப தாம் . முன் அடியேன் அல்லல் எல்லாம் அகல ஆண்டாய் என்றிருந் தேன் என மாறிக் கூட்டுக . முன் என்றது திருப்பெருந்துறையில் அடி களை ஆண்ட நாளைக் குறித்தது . கொடியேரிடையாள் என்றது கொடியை ஒத்த இடையினையுடைய உமையம்மையை . ' ' கொடியேரிடை யாளுமை பங்குசேர் திருமார்புடையார் ' ' ஞான 260-9 ' கொடியேரிடையாள் தலைவா சுந் . 24-6 கொடியிடை தோள் கொடியே ரிடைக்கொடி கோவை 9 கோவை 51 என வருதல் காண்க . ஆவா இரக்கக் குறிப்பு . இறைவன் ஆவாவென்ற ருள்புரியுமியல்பினனாதலின் ' ஆவா என்றருளி ' என்றார் . ஆவாவென் றருள் புரியும் ஐயாறன்னே ( 250-2 ) எனும் அப்பர் வாக்காலுமறிக . செடி சேர் உடல் - முடை நாற்றமுடைத்தாய்த் துன்பவிளைவின தான உடல் . செடிசே ருடலமிது நீக்கமாட்டேன் ( சத . 83 ) செடி சேருடலைச் செலநீக்கி ' ( யாத் 4 ) செடியா ராக்கை ( ஆசை 9 ) என அடிகள் பிறாண்டும் அருளியமை காண்க . எத்துக்கு - எதன் பொருட்டு . எத்துக்கு இங்கிருந்தீர் ' ' ( சுந் . 49.1 ) மதுகரமே எத் துக்கு வந்தாய் ' ( 11 - ந் திருமுறை சிவபெருமான் திருவிரட்டை . 29 ) என வருவனவற்றாலுமறிக . செடிசேர் உடலில் வைத்து வாழச்செய் தலையே ' ஒறுத்தால் ' என்றார் . போதுமே -ஏ - வினா . ஒறுப்பினும் பணி கொள்ள வேண்டும் என்பது குறிப்பெச்சம் .