திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

குழைத்தபத்து 1095 வூனுடம்பின் கண்ணே புகுந்து பிறக்கும்படி என்னைச் செலுத்தி, உழ லப்பண்ணு வித்திட்டாய் - இவ்வூனுடம்போடு கூடி அலையும்வண்ணம் செய்து விட்டனை, ஆனால் - அங்ஙனம் செய்தாலும், கோனே - தலை வனே, அடியேன் அறியாமை அறிந்து நீயே அருள் செய்து - அடியே னது அறிவில்லாமையை அறிந்து நீயாகவே அருள்செய்து, கூவிக் கொள்ளும் நாள் - நின்பால் என்னை அழைத்துக்கொள்ளும் நாள். என்று என்று உன்னை கூறுவதே - எப்போது என்று நின்பால் முறை யிடுவதே என் கடமையாகும். உமையம்மை நாயகனே, மன்னே, நின் புகழை மறக்கும்படி செய்து இவ்வுடம்பின்கண் புகுந்து பிறக்கும்படி என்னைச் செலுத்தி, இவ்வூனுடம்போடு உழலும்படி செய்துவிட்டனை; அங்ஙனம் செய்தா லும் அடியேனது அறிவில்லாமையை அறிந்து நீயாகவே அருள் செய்து நின்பால் என்னை அழைத்துக்கொள்ளும் நாள் எப்போது என்று நின்பால் முறையிடுவதே என் கடமையாகும் என்பதாம். மானேர் நோக்கி என்றது உமையம்மையை "மானேர் நோக்கி கண்டங்குவப்ப மாலையாடுவார்" (ஞான: 73: 1) எனத் தேவாரத்தும் வருதல் காண்க. ஏர் - உவமவுருபு நின்சீர் மறவாதிருந்த என்னை நான் செய்த தவறு காரணமாக மறக்கும்படி செய்து ஊனுடம்பிற் புக்குப் பிறக்கும்படி செலுத்தி உழல்வித்தனை என்பார் "நின்சீர் மறப் பித் திவ்வூனே புகவென்றனை நூக்கி உழலப்பண்ணு வித்திட்டாய்' என்றார். இப்பகுதி, அடிகள் உத்தரகோசமங்கையில் தத்துவஞான உபதேசத்தில் இந்திர பவனியைப் பார்த்து உபதேசத்தை அலட் சியம் செய்தமையைக் குறிப்பதாகும். சீர் - மிக்க புகழ். நூக்குதல்- தள்ளுதல். "நூக்கிப் புறத்திரு போகென்னு மின்னாச் சொல்" (நாலடி 326). உழலப்பண்ணு வித்திட்டாய் எனப் பிறவினையாற் கூறியது பிரமா முதலிய காரணேகரர் வாயிலாக நிகழ்தலின். ஆனால் என்பது முன்னர்க் கூறியதற்கு மாறாக நீயே அறிந்து அருள் செய்யவேண்டும் என்பதைக் குறிப்பதாகும். அறியாமை அறிந்து அருள் செய்தல், தொண்டனேன் அறியாமை அறிந்து கல்லியன் மனத்தைக் கசிவித்துக் கழலடி காட்டி யென்களைகளையறுக்கும் வல்லியல் வானவர் வணங்க நின்றானை" சுந். 67-5 என்னும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் வாக்காலுமறிக என்று என்று - எப் பொழுது என்று. உன்னை என்னும் இரண்டாவது உன்னிடத்து என ஏழாவதன் பொருளில் வந்தது. கூறுவதே என்பதற்குக் கூறுவதே கடமையாகும் என ஒருசொல் வருவித்து முடிக்க.
குழைத்தபத்து 1095 வூனுடம்பின் கண்ணே புகுந்து பிறக்கும்படி என்னைச் செலுத்தி உழ லப்பண்ணு வித்திட்டாய் - இவ்வூனுடம்போடு கூடி அலையும்வண்ணம் செய்து விட்டனை ஆனால் - அங்ஙனம் செய்தாலும் கோனே - தலை வனே அடியேன் அறியாமை அறிந்து நீயே அருள் செய்து - அடியே னது அறிவில்லாமையை அறிந்து நீயாகவே அருள்செய்து கூவிக் கொள்ளும் நாள் - நின்பால் என்னை அழைத்துக்கொள்ளும் நாள் . என்று என்று உன்னை கூறுவதே - எப்போது என்று நின்பால் முறை யிடுவதே என் கடமையாகும் . உமையம்மை நாயகனே மன்னே நின் புகழை மறக்கும்படி செய்து இவ்வுடம்பின்கண் புகுந்து பிறக்கும்படி என்னைச் செலுத்தி இவ்வூனுடம்போடு உழலும்படி செய்துவிட்டனை ; அங்ஙனம் செய்தா லும் அடியேனது அறிவில்லாமையை அறிந்து நீயாகவே அருள் செய்து நின்பால் என்னை அழைத்துக்கொள்ளும் நாள் எப்போது என்று நின்பால் முறையிடுவதே என் கடமையாகும் என்பதாம் . மானேர் நோக்கி என்றது உமையம்மையை மானேர் நோக்கி கண்டங்குவப்ப மாலையாடுவார் ( ஞான : 73 : 1 ) எனத் தேவாரத்தும் வருதல் காண்க . ஏர் - உவமவுருபு நின்சீர் மறவாதிருந்த என்னை நான் செய்த தவறு காரணமாக மறக்கும்படி செய்து ஊனுடம்பிற் புக்குப் பிறக்கும்படி செலுத்தி உழல்வித்தனை என்பார் நின்சீர் மறப் பித் திவ்வூனே புகவென்றனை நூக்கி உழலப்பண்ணு வித்திட்டாய் ' என்றார் . இப்பகுதி அடிகள் உத்தரகோசமங்கையில் தத்துவஞான உபதேசத்தில் இந்திர பவனியைப் பார்த்து உபதேசத்தை அலட் சியம் செய்தமையைக் குறிப்பதாகும் . சீர் - மிக்க புகழ் . நூக்குதல் தள்ளுதல் . நூக்கிப் புறத்திரு போகென்னு மின்னாச் சொல் ( நாலடி 326 ) . உழலப்பண்ணு வித்திட்டாய் எனப் பிறவினையாற் கூறியது பிரமா முதலிய காரணேகரர் வாயிலாக நிகழ்தலின் . ஆனால் என்பது முன்னர்க் கூறியதற்கு மாறாக நீயே அறிந்து அருள் செய்யவேண்டும் என்பதைக் குறிப்பதாகும் . அறியாமை அறிந்து அருள் செய்தல் தொண்டனேன் அறியாமை அறிந்து கல்லியன் மனத்தைக் கசிவித்துக் கழலடி காட்டி யென்களைகளையறுக்கும் வல்லியல் வானவர் வணங்க நின்றானை சுந் . 67-5 என்னும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் வாக்காலுமறிக என்று என்று - எப் பொழுது என்று . உன்னை என்னும் இரண்டாவது உன்னிடத்து என ஏழாவதன் பொருளில் வந்தது . கூறுவதே என்பதற்குக் கூறுவதே கடமையாகும் என ஒருசொல் வருவித்து முடிக்க .