திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை இதன்கண் 1'நீயே அருள் செய்து கூவிக்கொள்ளுநாள் என்று என்று உன்னைக் கூறுவதே" என்பதனால் ஆத்தும நிவேதனம் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க. Tog கூறும் நாவே முதலாகக் 1096 498. { கூறுங் கரண மெல்லாநீ தேறும் வகைநீ திகைப்பு நீ தீமை நன்மை முழுதுநீ வேறோர் பரிசிங் கொன்றில்லை மெய்ம்மை யுன்னை விரித்துரைக்கில் தேறும் வகையென் சிவலோகா திகைத்தால் தேற்ற வேண்டாவோ. ப- ரை. சிவலோகா - சிவலோகநாதனே, உன் மெய்ம்மை விரித்து உரைக்கில் - நினது உண்மைத்தன்மையை எடுத்து விரித்துச் சொல்லப்புகில், கூறும் நாவே முதலாக கூறும் கரணம் எல்லாம் நீ- சொல்லுதற்குக் கருவியாகிய நாக்கு முதலாகக் கொண்டு சொல்லப் படுகின்ற கரணங்கள் எல்லாம் நீயாகவே இருக்கின்றாய். அம்மட்டோ, திகைப்பும் நீ - யான் மயங்குதற்குக் காரணமும் நீயே, தேறும் வகை நீ - அம்மயக்கத்தினின்றும் தெளிவடைவதற்கு வழியும் நீயே, நன்மை தீமை முமுதும் நீ - நன்மை தீமை என்கின்ற எல்லாம் நீயே, இங்கு வேறு ஓர் பரிசு ஒன்று இல்லை - இவ்வுலகில் நின்னின் வேறாக ஒரு தன்மையும் சிறிதும் இல்லை. தேறும் வகை என் - நான் தெளி வடையும் வழியாது? திகைத்தால் தேற்ற வேண்டாவோ நான் மயக்கமடைந்தால் தெளிவித்து ஏற்றுக்கொள்ள வேண்டாவோ? 4 சிவலோகா, உன் மெயம்மையை விரித்துரைக்கில் நாவே முத லாகக் கொண்டு கூறும் கரணங்களெல்லாம் நீயே; தேறும் வகை நீ; திகைப்பு நீ; நன்மை தீமை எல்லாம் நீயே; இவ்வுலகில் நின்னின் வேறாக ஒரு தன்மையும் சிறிதும் இல்லை. நான் தெளிவடையும் வழி யாது? நான் திகைத்தால் தெளிவித்து என்னை ஏற்றுக்கொள்ள வேண்டாவோ? ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதாம். கூறும் நாவே முதலாகக் கூறும் கரணம் என்றது நா முதலா கச் சொல்லப்படுகின்ற கன்மேந்திரியம் ஐந்தும், மெய் முதலாகச் சொல்லப்படுகின்ற ஞானேந்திரியம் ஐந்தும், மனம் புத்தி சித்தம் அகங்காரம் என்னும் அந்தக்கரணங்கள் நான்குமாகும். சித்தும் அசித்துமாகிய பிரபஞ்ச முழுவதிலும் அத்துவிதமாய்க் கலந்திருந்து அவற்றையெல்லாம் இயக்குபவன் இறைவனாதலின். கூறு நாவே முதலாகக் கூறும் கரணமெல்லாம் நீ' என்றார்.
திருவாசக ஆராய்ச்சியுரை இதன்கண் 1'நீயே அருள் செய்து கூவிக்கொள்ளுநாள் என்று என்று உன்னைக் கூறுவதே என்பதனால் ஆத்தும நிவேதனம் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க . Tog கூறும் நாவே முதலாகக் 1096 498 . { கூறுங் கரண மெல்லாநீ தேறும் வகைநீ திகைப்பு நீ தீமை நன்மை முழுதுநீ வேறோர் பரிசிங் கொன்றில்லை மெய்ம்மை யுன்னை விரித்துரைக்கில் தேறும் வகையென் சிவலோகா திகைத்தால் தேற்ற வேண்டாவோ . ப- ரை . சிவலோகா - சிவலோகநாதனே உன் மெய்ம்மை விரித்து உரைக்கில் - நினது உண்மைத்தன்மையை எடுத்து விரித்துச் சொல்லப்புகில் கூறும் நாவே முதலாக கூறும் கரணம் எல்லாம் நீ சொல்லுதற்குக் கருவியாகிய நாக்கு முதலாகக் கொண்டு சொல்லப் படுகின்ற கரணங்கள் எல்லாம் நீயாகவே இருக்கின்றாய் . அம்மட்டோ திகைப்பும் நீ - யான் மயங்குதற்குக் காரணமும் நீயே தேறும் வகை நீ - அம்மயக்கத்தினின்றும் தெளிவடைவதற்கு வழியும் நீயே நன்மை தீமை முமுதும் நீ - நன்மை தீமை என்கின்ற எல்லாம் நீயே இங்கு வேறு ஓர் பரிசு ஒன்று இல்லை - இவ்வுலகில் நின்னின் வேறாக ஒரு தன்மையும் சிறிதும் இல்லை . தேறும் வகை என் - நான் தெளி வடையும் வழியாது ? திகைத்தால் தேற்ற வேண்டாவோ நான் மயக்கமடைந்தால் தெளிவித்து ஏற்றுக்கொள்ள வேண்டாவோ ? 4 சிவலோகா உன் மெயம்மையை விரித்துரைக்கில் நாவே முத லாகக் கொண்டு கூறும் கரணங்களெல்லாம் நீயே ; தேறும் வகை நீ ; திகைப்பு நீ ; நன்மை தீமை எல்லாம் நீயே ; இவ்வுலகில் நின்னின் வேறாக ஒரு தன்மையும் சிறிதும் இல்லை . நான் தெளிவடையும் வழி யாது ? நான் திகைத்தால் தெளிவித்து என்னை ஏற்றுக்கொள்ள வேண்டாவோ ? ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதாம் . கூறும் நாவே முதலாகக் கூறும் கரணம் என்றது நா முதலா கச் சொல்லப்படுகின்ற கன்மேந்திரியம் ஐந்தும் மெய் முதலாகச் சொல்லப்படுகின்ற ஞானேந்திரியம் ஐந்தும் மனம் புத்தி சித்தம் அகங்காரம் என்னும் அந்தக்கரணங்கள் நான்குமாகும் . சித்தும் அசித்துமாகிய பிரபஞ்ச முழுவதிலும் அத்துவிதமாய்க் கலந்திருந்து அவற்றையெல்லாம் இயக்குபவன் இறைவனாதலின் . கூறு நாவே முதலாகக் கூறும் கரணமெல்லாம் நீ ' என்றார் .