திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

குழைத்தபத்து "நாக்குச் செவியுங் கண்ணுநீயென்பன்" 'குற்றநீ குணங்கள் நீ கூடலால வாயிலாய் சுற்றந் பிரானுநீ தொடர்ந்திலங்கு சோதிநீ கற்றநூற் கருத்துநீ யருத்தமின்ப மென்றிவை முற்றுநீ புகழ்ந்து முன்னுரைப்பதென் முகம்மனே தே: 310-3 என ஆளுடைய பிள்ளையார் அருளியமையுங் காண்க: திகைப்பு நீ தேறும் வகை நீ நன்மை தீமை முழுதும் நீ எனமாற் றிக் கூட்டிப் பொருள் கொள்க. பரிசு - தன்மை. ஒன்று - சிறிதும் என்னும் பொருளில் வந்தது. "இடனின்றி யிரந்தோர்க்கொன் றீயாமை யிழிவென" (கலி 2-19) என்புழிப்போல, மெய்ம்மை உன்னை என்றதனை உன் மெய்ம்மையை என இயைத்துப் பொருள் கொள்க. "தேறும் வகை என்" என்றது எல்லாம் நீயேயாயிருத்தலின் நினது அருளின்றி யான் தெளிவடையும் வழியாது? ஒன்றுமில்லை என்றபடி. ஆகையால் நான் திகைப்படைந்தால் நீ தெளிவித்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதாம். 1097 சுந். 4-7 இதன்கண் ''சிவலோகா திகைத்தால் தேற்ற வேண்டாவோ" என்பதனால் ஆத்தும நிவேதனம் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க. 5 499 வேண்டத் தக்க தறிவோய்நீ வேண்ட முழுதுந் தருவோய்நீ வேண்டும் அயன்மாற் கரியோய்நீ வேண்டி யென்னைப் பணிகொண்டாய் வேண்டி நீயா தருள்செய்தாய் யானும் அதுவே வேண்டினல்லால் வேண்டும் பரிசொன் றுண்டென்னில் அதுவும் உன்றன் விருப்பன்றே. ப - ரை. வேண்டத்தக்கது அறிவோய் நீ -நான் விரும்பத்தக்க வற்றை அறிபவனும் நீயே, வேண்ட முழுதும் தருவோய் நீ - விரும் பிய அவற்றை நின்பால் இரந்து கேட்க ழுழுவதும் தருபவனும் நீயே; வேண்டும் அயன் மாற்கு அரியோய் நீ - நினது அடியும் முடியுமா கிய எல்லைகளைச் செருக்கொடு காணவிரும்பிய பிரமனுக்கும் திரு மாலுக்கும் காணுதற்கு அரியலனும் நீயே, என்னை வேண்டி பணி கொண்டாய் - என்னை நீயே விரும்பி வந்து ஆட்கொண்டருளினை; வேண்டி நீ யாது அருள் செய்தாய் - விரும்பி நீ எதனை எனக்குத் தந்தருளினையோ, யானும் அதனை வேண்டின் அல்லால் - யானும் அதனையே விரும்பி ஏற்றுக்கொள்வதல்லாமல், வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில் - யான் விரும்பி இரந்து கேட்கக்கூடியதொரு பரிசு
குழைத்தபத்து நாக்குச் செவியுங் கண்ணுநீயென்பன் ' குற்றநீ குணங்கள் நீ கூடலால வாயிலாய் சுற்றந் பிரானுநீ தொடர்ந்திலங்கு சோதிநீ கற்றநூற் கருத்துநீ யருத்தமின்ப மென்றிவை முற்றுநீ புகழ்ந்து முன்னுரைப்பதென் முகம்மனே தே : 310-3 என ஆளுடைய பிள்ளையார் அருளியமையுங் காண்க : திகைப்பு நீ தேறும் வகை நீ நன்மை தீமை முழுதும் நீ எனமாற் றிக் கூட்டிப் பொருள் கொள்க . பரிசு - தன்மை . ஒன்று - சிறிதும் என்னும் பொருளில் வந்தது . இடனின்றி யிரந்தோர்க்கொன் றீயாமை யிழிவென ( கலி 2-19 ) என்புழிப்போல மெய்ம்மை உன்னை என்றதனை உன் மெய்ம்மையை என இயைத்துப் பொருள் கொள்க . தேறும் வகை என் என்றது எல்லாம் நீயேயாயிருத்தலின் நினது அருளின்றி யான் தெளிவடையும் வழியாது ? ஒன்றுமில்லை என்றபடி . ஆகையால் நான் திகைப்படைந்தால் நீ தெளிவித்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதாம் . 1097 சுந் . 4-7 இதன்கண் ' ' சிவலோகா திகைத்தால் தேற்ற வேண்டாவோ என்பதனால் ஆத்தும நிவேதனம் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க . 5 499 வேண்டத் தக்க தறிவோய்நீ வேண்ட முழுதுந் தருவோய்நீ வேண்டும் அயன்மாற் கரியோய்நீ வேண்டி யென்னைப் பணிகொண்டாய் வேண்டி நீயா தருள்செய்தாய் யானும் அதுவே வேண்டினல்லால் வேண்டும் பரிசொன் றுண்டென்னில் அதுவும் உன்றன் விருப்பன்றே . - ரை . வேண்டத்தக்கது அறிவோய் நீ -நான் விரும்பத்தக்க வற்றை அறிபவனும் நீயே வேண்ட முழுதும் தருவோய் நீ - விரும் பிய அவற்றை நின்பால் இரந்து கேட்க ழுழுவதும் தருபவனும் நீயே ; வேண்டும் அயன் மாற்கு அரியோய் நீ - நினது அடியும் முடியுமா கிய எல்லைகளைச் செருக்கொடு காணவிரும்பிய பிரமனுக்கும் திரு மாலுக்கும் காணுதற்கு அரியலனும் நீயே என்னை வேண்டி பணி கொண்டாய் - என்னை நீயே விரும்பி வந்து ஆட்கொண்டருளினை ; வேண்டி நீ யாது அருள் செய்தாய் - விரும்பி நீ எதனை எனக்குத் தந்தருளினையோ யானும் அதனை வேண்டின் அல்லால் - யானும் அதனையே விரும்பி ஏற்றுக்கொள்வதல்லாமல் வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில் - யான் விரும்பி இரந்து கேட்கக்கூடியதொரு பரிசு