திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

உயிருண்ணிப்பத்து ப-ரை. செந்நாவலர் பரசும் புகழ் திருப்பெருந்துறை உறை வாய் - செவ்விய நாவன்மையையுடைய பொய்யடிமையில்லாத புல வர்களால் போற்றப்படும் பொய்யில் புகழையுடைய திருப்பெருந் துறையில் எழுந்தருளியிருப்பவனே, பை நா அரவு படம் ஏர் அல்குல் உமை பாகமதாய் - பசிய நாவினையுடைய பாம்பின் படத்தை ஒத்த அல்குலையுடைய உமையம்மை பொருந்திய இடப்பாசுத்தோடும், என் மெய் நாள் தொறும் பிரியா வினைக்கேடா - என் உள்ளத்தினை நாள் தோறும் விட்டு நீங்காத வினைக்கேடனே, விடைபாகா - இடப வாக னனே. இனி யான் எந்நாள் களித்து எந்நாள் இறுமாக்கேன் - இனி மேல் யான் நினது ஆனந்தம் மேலிடுதலால் எந்தாளில் மகிழ்ச்சி யடைந்து எந்தக் காலத்தில் இறுமாந்திருப்பேன். 1107 திருப்பெருந்துறையில் உறைபவனே, உமாதேவி பாகத்தோடும் என் உள்ளத்தினை நாள் தோறும் விட்டு நீங்காத வினைக்கேடனே. விடைப்பாகனே, இனி நான் எந்நாளில் உன்னைக் கண்டு களிப்படைந்து எந்நாளில் இறுமாந்திருப்பேன் என்பதாம். PAGA பை நா அரவு படம் ஏர் அல்குல் என இயைத்துப் பொருள் கொள்க. அல்குல் - நிதம்பம். மெய்ந்நாடொறும் பிரியா என்றாராயி னும் மெய்யினின்றும் பிரியாமல் நாடொறும் எழுந்தருளியிருப்பவனே என்பது பொருளாகக் கொள்க. மெய் என்றது ஈண்டு உள்ளத்தை. ஊனாருடல் புகுந்தான் உயிர் கலந்தான் உளம் பிரியான்" (உயி ருண்ணி 2) என மேல் அடிகள் அருளுதல் காண்க. nek பிரியா என்னும் ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம் வினைக் கேடன் என்பதில் அன் விகுதியால் உணர்த்தப்படும் வினை முதற் பெய ரொடு முடிந்தது. வினைக்கேடன் - வினையைச் கெடும் வண்ணம் செய் தவன். "கண்டார்க் கம்பலத் தமிழ்தாய், வினைகெடச் செய்தவன்'' (கோவை 141) என்பது காண்க. வினைக்கேடா என்பதற்கு உயிர்க ளின் வினையைக் கெடுப்பவனே என்பது பொருளாயினும் என்மெய்ந் நாடொறும் பிரியாது பொருந்தியிருத்தலின் வேறு செயலற்றவனே எனவும் பொருள்படநின்றது. இனி வினைக்கேடா என்பதற்கு உயிர்க ளின் பொருட்டன்றித் தனக்கென ஆற்றும் வினையொன்றுமில்லாத வனே எனவும், இயல்பாகவே வினையினீங்கினவனே எனவும் பொரு ளுரைக்கலாம். செந்நாவலர் என்றது பொய்யற்ற கீரன் முதலாய பொய்யடிமை யில்லாத புலவர்களையென்க. புகழ் என்னும் விசேடணம், உறை வாய் என்பதில் ஆய் விகுதியால் உணர்த்தப்படும் பொருளொடு முடிந்தது. களித்தல் - மகிழ்தல். இறுமாத்தல் - திருவருள் பெற்ற களிப்பு மிகுதியால் உண்டாகும் செருக்கு.p
உயிருண்ணிப்பத்து - ரை . செந்நாவலர் பரசும் புகழ் திருப்பெருந்துறை உறை வாய் - செவ்விய நாவன்மையையுடைய பொய்யடிமையில்லாத புல வர்களால் போற்றப்படும் பொய்யில் புகழையுடைய திருப்பெருந் துறையில் எழுந்தருளியிருப்பவனே பை நா அரவு படம் ஏர் அல்குல் உமை பாகமதாய் - பசிய நாவினையுடைய பாம்பின் படத்தை ஒத்த அல்குலையுடைய உமையம்மை பொருந்திய இடப்பாசுத்தோடும் என் மெய் நாள் தொறும் பிரியா வினைக்கேடா - என் உள்ளத்தினை நாள் தோறும் விட்டு நீங்காத வினைக்கேடனே விடைபாகா - இடப வாக னனே . இனி யான் எந்நாள் களித்து எந்நாள் இறுமாக்கேன் - இனி மேல் யான் நினது ஆனந்தம் மேலிடுதலால் எந்தாளில் மகிழ்ச்சி யடைந்து எந்தக் காலத்தில் இறுமாந்திருப்பேன் . 1107 திருப்பெருந்துறையில் உறைபவனே உமாதேவி பாகத்தோடும் என் உள்ளத்தினை நாள் தோறும் விட்டு நீங்காத வினைக்கேடனே . விடைப்பாகனே இனி நான் எந்நாளில் உன்னைக் கண்டு களிப்படைந்து எந்நாளில் இறுமாந்திருப்பேன் என்பதாம் . PAGA பை நா அரவு படம் ஏர் அல்குல் என இயைத்துப் பொருள் கொள்க . அல்குல் - நிதம்பம் . மெய்ந்நாடொறும் பிரியா என்றாராயி னும் மெய்யினின்றும் பிரியாமல் நாடொறும் எழுந்தருளியிருப்பவனே என்பது பொருளாகக் கொள்க . மெய் என்றது ஈண்டு உள்ளத்தை . ஊனாருடல் புகுந்தான் உயிர் கலந்தான் உளம் பிரியான் ( உயி ருண்ணி 2 ) என மேல் அடிகள் அருளுதல் காண்க . nek பிரியா என்னும் ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம் வினைக் கேடன் என்பதில் அன் விகுதியால் உணர்த்தப்படும் வினை முதற் பெய ரொடு முடிந்தது . வினைக்கேடன் - வினையைச் கெடும் வண்ணம் செய் தவன் . கண்டார்க் கம்பலத் தமிழ்தாய் வினைகெடச் செய்தவன் ' ' ( கோவை 141 ) என்பது காண்க . வினைக்கேடா என்பதற்கு உயிர்க ளின் வினையைக் கெடுப்பவனே என்பது பொருளாயினும் என்மெய்ந் நாடொறும் பிரியாது பொருந்தியிருத்தலின் வேறு செயலற்றவனே எனவும் பொருள்படநின்றது . இனி வினைக்கேடா என்பதற்கு உயிர்க ளின் பொருட்டன்றித் தனக்கென ஆற்றும் வினையொன்றுமில்லாத வனே எனவும் இயல்பாகவே வினையினீங்கினவனே எனவும் பொரு ளுரைக்கலாம் . செந்நாவலர் என்றது பொய்யற்ற கீரன் முதலாய பொய்யடிமை யில்லாத புலவர்களையென்க . புகழ் என்னும் விசேடணம் உறை வாய் என்பதில் ஆய் விகுதியால் உணர்த்தப்படும் பொருளொடு முடிந்தது . களித்தல் - மகிழ்தல் . இறுமாத்தல் - திருவருள் பெற்ற களிப்பு மிகுதியால் உண்டாகும் செருக்கு . p