திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

1118 512 திருவாசக ஆராய்ச்சியுரை எச்சம்மறி வேனானெனக் கிருக்கின்றதை யறியேன் அச்சோவெங்கள் அரனேயரு மருந்தேயென தமுதே செச்சைமலர் புரைமேனியன் திருப்பெருந்துறை யுறைவான் நிச்சம்மென நெஞ்சின்மன்னி யானாகிநின் றானே. ப-ரை. செச்சைமலர் புரை மேனியன் - வெட்சிமலர் போன்ற சிவந்த திருமேனியையுடையவனே, திருப்பெருந்துறை உறைவான்- திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருப்பவனே, நிச்சம் என நெஞ்சில் மன்னி யானாகி நின்றானே - நாடோறும் என்னுடைய உள்ளத்தில் நிலைபெற்று அத்துவிதமாகக் கலந்து யானாகி நின்றவனே, எங்கள் அரனே - எங்கள் பாசத்தைக் கெடுப்பவனே, அருமருந்தே - கிடைத் தற்கரிய மருந்தே, எனது அமுதே - எனது அமுதமே, யான் எச்சம் அறிவேன் - யான் பெறவேண்டிய குறையாகிய வீடுபேற்றினை அறி வேன், எனக்கு இருக்கின்றதை அறியேன் - அதனைப் பெறுதற்குத் தடையாக எனக்கிருக்கின்ற குற்றத்தினை அறிகிலேன், அச்சோ- இஃதென்ன இரக்கமும் வியப்புமாகும். அதனை அறிந்த நீ இரங்கி நீக்கியருளவேண்டும். வெட்சிமலர் போன்ற திருமேனியையுடையவனே, திருப்பெருந் துறை உறைவானே, என் நெஞ்சில் மன்னி யானாகி நின்றவனே, நான் பெறவேண்டிய குறையாகிய வீடுபேற்றினை அறிவேன். ஆனால் அதனைப் இஃ பெறுதற்குத் தடையாயிருக்கின்ற குற்றத்தினை அறியேன். தென்ன இரக்கமும் வியப்புமாகும். அதனை அறிந்த நீ இரங்கித் தடை களை நீக்கியருள வேண்டும் என்பதாம். எச்சம் - எஞ்சியுள்ளது. அஃது இங்கே வீடுபேற்றினைக் குறித்தது. எனக்கு இருக்கின்றது என்றது அதனைப் பெறுதற்குத் தடையாயிருக் கின்ற குற்றத்தை: இங்கே குற்றம் பிராரத்த கன்ம அனுபவத்தோடு கூடியிருத்தல். அச்சோ - வியப்புப் பற்றிய இரக்கச் சொல். செச்சை- வெட்சி (முருகு 208 நச்.) "சிந்தூரமுங் குல்லையும் செச்சையும் வெட்சி" (பிங். 9- 42). நித்தம் - நிச்சம் என எதுகை நோக்கித் திரிந் தது. "நிச்சலும் ஈர்த்தாட் கொள்வோன் வாழ்க" (அண்ட. 99 ) என அடிகள் கூறுதலும் காண்சு. என நெஞ்சில் என்னும் ஆறாம் வேற்றுமை அகரவுருபு ஒருமைப் பொருளில் வந்தது. யானாகி நிற்றல் -என்னொடு அத்துவிதமாகக் கலந்து யானாகி நிற்றல். நின்றானே என்பதில் உள்ள விளியுருபாகிய ஏ என்பதனை மேனியன் உறைவான் என்பவற்றோடு கூட்டி மேனியானே உறைவானே என உரைக்க.
1118 512 திருவாசக ஆராய்ச்சியுரை எச்சம்மறி வேனானெனக் கிருக்கின்றதை யறியேன் அச்சோவெங்கள் அரனேயரு மருந்தேயென தமுதே செச்சைமலர் புரைமேனியன் திருப்பெருந்துறை யுறைவான் நிச்சம்மென நெஞ்சின்மன்னி யானாகிநின் றானே . - ரை . செச்சைமலர் புரை மேனியன் - வெட்சிமலர் போன்ற சிவந்த திருமேனியையுடையவனே திருப்பெருந்துறை உறைவான் திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருப்பவனே நிச்சம் என நெஞ்சில் மன்னி யானாகி நின்றானே - நாடோறும் என்னுடைய உள்ளத்தில் நிலைபெற்று அத்துவிதமாகக் கலந்து யானாகி நின்றவனே எங்கள் அரனே - எங்கள் பாசத்தைக் கெடுப்பவனே அருமருந்தே - கிடைத் தற்கரிய மருந்தே எனது அமுதே - எனது அமுதமே யான் எச்சம் அறிவேன் - யான் பெறவேண்டிய குறையாகிய வீடுபேற்றினை அறி வேன் எனக்கு இருக்கின்றதை அறியேன் - அதனைப் பெறுதற்குத் தடையாக எனக்கிருக்கின்ற குற்றத்தினை அறிகிலேன் அச்சோ இஃதென்ன இரக்கமும் வியப்புமாகும் . அதனை அறிந்த நீ இரங்கி நீக்கியருளவேண்டும் . வெட்சிமலர் போன்ற திருமேனியையுடையவனே திருப்பெருந் துறை உறைவானே என் நெஞ்சில் மன்னி யானாகி நின்றவனே நான் பெறவேண்டிய குறையாகிய வீடுபேற்றினை அறிவேன் . ஆனால் அதனைப் இஃ பெறுதற்குத் தடையாயிருக்கின்ற குற்றத்தினை அறியேன் . தென்ன இரக்கமும் வியப்புமாகும் . அதனை அறிந்த நீ இரங்கித் தடை களை நீக்கியருள வேண்டும் என்பதாம் . எச்சம் - எஞ்சியுள்ளது . அஃது இங்கே வீடுபேற்றினைக் குறித்தது . எனக்கு இருக்கின்றது என்றது அதனைப் பெறுதற்குத் தடையாயிருக் கின்ற குற்றத்தை : இங்கே குற்றம் பிராரத்த கன்ம அனுபவத்தோடு கூடியிருத்தல் . அச்சோ - வியப்புப் பற்றிய இரக்கச் சொல் . செச்சை வெட்சி ( முருகு 208 நச் . ) சிந்தூரமுங் குல்லையும் செச்சையும் வெட்சி ( பிங் . 9- 42 ) . நித்தம் - நிச்சம் என எதுகை நோக்கித் திரிந் தது . நிச்சலும் ஈர்த்தாட் கொள்வோன் வாழ்க ( அண்ட . 99 ) என அடிகள் கூறுதலும் காண்சு . என நெஞ்சில் என்னும் ஆறாம் வேற்றுமை அகரவுருபு ஒருமைப் பொருளில் வந்தது . யானாகி நிற்றல் -என்னொடு அத்துவிதமாகக் கலந்து யானாகி நிற்றல் . நின்றானே என்பதில் உள்ள விளியுருபாகிய என்பதனை மேனியன் உறைவான் என்பவற்றோடு கூட்டி மேனியானே உறைவானே என உரைக்க .