திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

Stadt T 35. அச்சப்பத்து ஆனந்தமுறுதல் திருத்தில்லையில் அருளிச்செய்யப்பட்டது திருவாதவூரடிகள் திருத்தில்லையில் எழுந்தருளியிருக்குங் காலத்து தாம் யாருக்கு அஞ்சுவார் என்பதனைக் குறித்து அருளிச் செய்த பத்துத் திருப்பாடல்களையுடைய பதிகமாதலின் அச்சப்பத்து எனப் பெயர் பெற்றது. இதன் உட்பொருள் ஆனந்தமுறுதல் என்பது ஞானத்தினால் அறியப்படும் பொருளாகிய நேயத்திலே ஒன்றுபட்டு அதன் இன்பத்தை அடைதல். நேயம்-சிவஞானத்தால் அறியப் படும் பதிப்பொருள். இதனைத் திருவாசகச் சிறப்புடையார், "தரையில் வளர் வினைமுழுதும் வரினுமஞ்சென் 514 சிவசமயத் தவஞ்சா ராதார் அருகில்வரக் காண்சின்மனம் அஞ்சுமென இகழ்ந் துரைத்த லச்சப்பத்தாம்" என்பர். இது அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம். ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம் புற்றில்வா ளரவும் அஞ்சேன் பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன் கற்றைவார் சடையெம் அண்ணல் கண்ணுதல் பாதம் நண்ணி மற்றுமோர் தெய்வந் தன்னை உண்டென நினைந்தெம் பெம்மாற் கற்றிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. ப-ரை. புற்றில் வாள் அரவும் அஞ்சேன் - புற்றின்கணுள்ள ஒளியையுடைய நச்சுப்பாம்பிற்கும் பயப்படேன்; பொய்யர்தம் மெய் யும் அஞ்சேன் - பொய்யர்களாகிய புறச்சமயத்தார் கற்பித்துக் கூறும் மெய்ம்மை போலும் மொழிகளுக்கும் அஞ்சமாட்டேன்; கற்றை வார் சடை எம் அண்ணல் கண் நுதல் பாதம் நண்ணி - தொகுதியாகிய நீண்ட சடையையுடைய எமது அண்ணலாகிய கண் பொருந்திய நெற்றியையுடைய இறைவனுடைய திருவடிகளை அடைந்தும்; மற்று ஓர் தெய்வம் தன்னை உண்டு என நினைந்து - அவ்விறைவனை விட வேறு 101
Stadt T 35. அச்சப்பத்து ஆனந்தமுறுதல் திருத்தில்லையில் அருளிச்செய்யப்பட்டது திருவாதவூரடிகள் திருத்தில்லையில் எழுந்தருளியிருக்குங் காலத்து தாம் யாருக்கு அஞ்சுவார் என்பதனைக் குறித்து அருளிச் செய்த பத்துத் திருப்பாடல்களையுடைய பதிகமாதலின் அச்சப்பத்து எனப் பெயர் பெற்றது . இதன் உட்பொருள் ஆனந்தமுறுதல் என்பது ஞானத்தினால் அறியப்படும் பொருளாகிய நேயத்திலே ஒன்றுபட்டு அதன் இன்பத்தை அடைதல் . நேயம் - சிவஞானத்தால் அறியப் படும் பதிப்பொருள் . இதனைத் திருவாசகச் சிறப்புடையார் தரையில் வளர் வினைமுழுதும் வரினுமஞ்சென் 514 சிவசமயத் தவஞ்சா ராதார் அருகில்வரக் காண்சின்மனம் அஞ்சுமென இகழ்ந் துரைத்த லச்சப்பத்தாம் என்பர் . இது அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம் . ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம் புற்றில்வா ளரவும் அஞ்சேன் பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன் கற்றைவார் சடையெம் அண்ணல் கண்ணுதல் பாதம் நண்ணி மற்றுமோர் தெய்வந் தன்னை உண்டென நினைந்தெம் பெம்மாற் கற்றிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே . - ரை . புற்றில் வாள் அரவும் அஞ்சேன் - புற்றின்கணுள்ள ஒளியையுடைய நச்சுப்பாம்பிற்கும் பயப்படேன் ; பொய்யர்தம் மெய் யும் அஞ்சேன் - பொய்யர்களாகிய புறச்சமயத்தார் கற்பித்துக் கூறும் மெய்ம்மை போலும் மொழிகளுக்கும் அஞ்சமாட்டேன் ; கற்றை வார் சடை எம் அண்ணல் கண் நுதல் பாதம் நண்ணி - தொகுதியாகிய நீண்ட சடையையுடைய எமது அண்ணலாகிய கண் பொருந்திய நெற்றியையுடைய இறைவனுடைய திருவடிகளை அடைந்தும் ; மற்று ஓர் தெய்வம் தன்னை உண்டு என நினைந்து - அவ்விறைவனை விட வேறு 101