திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

அச்சப்பத்து யியல்பு உணர்ந்து இறைவனை வழிபடும் மெய்யன்பர், இறைவனை யன்றிப் பிறர் எவரையும் வழிபடார் என்பதனை, ''பொது நீக்கித் தனைநினைய வல்லார்க்கென்றும், பெருந்துணையை" என்னும் அப்பர் வாக்கானுமுணர்க. இறைவனுடைய திருவடியை அடைதற்குரிய சைவனாயிருந்தும் அவ்விறைவனை விட வேறுமொரு தெய்வம் உண்டென நினைந்து அவ் விறைவனது பதியிலக்கணம் முழுவதையும் அறியாத வரைக் கண்டால் நாம் அஞ்சும் தன்மை பெரிதென்பார், அஞ்சவேண்டிய ‘அரவுமஞ் சேன் பொய்யர்தம் பொய்யும் அஞ்சேன்' என்றார். அஞ்சேன் என முன்னர் ஒருமையாற் கூறிப் பின்னர் நாம் அஞ்சுமாறு எனப் பன்மை யாற் கூறியது ஒருமை பன்மை மயக்கம். இனி,நாம் என்பது இயல்பி னால் ஒருமையைப் பன்மையாகக் கூறியது எனினுமாம். அம்ம என் னும் இடைச்சொல் ஈண்டு மிகுதிப் பொருளில் வந்தது. "அம்ம கேட் பிக்கும்'' என்பது தொல்காப்பியமாயினும் முன்னிலையிலன்றி இங்கே படர்க்கைக்கண் வந்து மிகுதிப்பொருள் தருவதாயிற்று. உலக வழக் கிலும் அம்மம்ம என்று மிகுதிப்பொருளில் வழங்கிவருதலும் அறியத் தக்கது. இதன் கண் "கற்றைவார் சடையெம் அண்ணல் கண்ணுதல் பாதம் நண்ணி" என்பதனால் ஆனந்த முறுதல் என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க. 1 515 வெருவரேன் வேட்கை வந்தால் வினைக்கடல் கொளினும் அஞ்சேன் இருவரான் மாறு காணா எம்பிரான் தம்பி ரானாம் திருவுரு வன்றி மற்றோர் 1123 தேவரெத் தேவ ரென்ன அருவரா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. பரை. வேட்கை வந்தால் வெருவரேன் - உலகப்பற்றுக்கள் வந்து என்னைப் பற்றினும் அவற்றிற்கு அஞ்சமாட்டேன்; வினைகடல் கொளினும் அஞ்சேன் - எனது வினைகளாகிய கடலானது என்னைத் தன்னுள் மூழ்கச் செய்யினும் அதற்கும் அஞ்சமாட்டேன்; இருவரால் மாறு காணா எம்பிரான் தம் பிரானாம் திரு உரு அன்றி- அயன் அரி என்னும் தேவத்தலைவர்கள் இருவராலும் மாறுபட்டுக் காண முடியாத எங்கள் தலைவன் அவ்விருவர்க்கும் தானே தலைவன் என்பதை உணர்த்துமாறு கொண்ட திருவுருவத்தையன்றி, மற்று
அச்சப்பத்து யியல்பு உணர்ந்து இறைவனை வழிபடும் மெய்யன்பர் இறைவனை யன்றிப் பிறர் எவரையும் வழிபடார் என்பதனை ' ' பொது நீக்கித் தனைநினைய வல்லார்க்கென்றும் பெருந்துணையை என்னும் அப்பர் வாக்கானுமுணர்க . இறைவனுடைய திருவடியை அடைதற்குரிய சைவனாயிருந்தும் அவ்விறைவனை விட வேறுமொரு தெய்வம் உண்டென நினைந்து அவ் விறைவனது பதியிலக்கணம் முழுவதையும் அறியாத வரைக் கண்டால் நாம் அஞ்சும் தன்மை பெரிதென்பார் அஞ்சவேண்டிய அரவுமஞ் சேன் பொய்யர்தம் பொய்யும் அஞ்சேன் ' என்றார் . அஞ்சேன் என முன்னர் ஒருமையாற் கூறிப் பின்னர் நாம் அஞ்சுமாறு எனப் பன்மை யாற் கூறியது ஒருமை பன்மை மயக்கம் . இனி நாம் என்பது இயல்பி னால் ஒருமையைப் பன்மையாகக் கூறியது எனினுமாம் . அம்ம என் னும் இடைச்சொல் ஈண்டு மிகுதிப் பொருளில் வந்தது . அம்ம கேட் பிக்கும் ' ' என்பது தொல்காப்பியமாயினும் முன்னிலையிலன்றி இங்கே படர்க்கைக்கண் வந்து மிகுதிப்பொருள் தருவதாயிற்று . உலக வழக் கிலும் அம்மம்ம என்று மிகுதிப்பொருளில் வழங்கிவருதலும் அறியத் தக்கது . இதன் கண் கற்றைவார் சடையெம் அண்ணல் கண்ணுதல் பாதம் நண்ணி என்பதனால் ஆனந்த முறுதல் என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க . 1 515 வெருவரேன் வேட்கை வந்தால் வினைக்கடல் கொளினும் அஞ்சேன் இருவரான் மாறு காணா எம்பிரான் தம்பி ரானாம் திருவுரு வன்றி மற்றோர் 1123 தேவரெத் தேவ ரென்ன அருவரா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே . பரை . வேட்கை வந்தால் வெருவரேன் - உலகப்பற்றுக்கள் வந்து என்னைப் பற்றினும் அவற்றிற்கு அஞ்சமாட்டேன் ; வினைகடல் கொளினும் அஞ்சேன் - எனது வினைகளாகிய கடலானது என்னைத் தன்னுள் மூழ்கச் செய்யினும் அதற்கும் அஞ்சமாட்டேன் ; இருவரால் மாறு காணா எம்பிரான் தம் பிரானாம் திரு உரு அன்றி அயன் அரி என்னும் தேவத்தலைவர்கள் இருவராலும் மாறுபட்டுக் காண முடியாத எங்கள் தலைவன் அவ்விருவர்க்கும் தானே தலைவன் என்பதை உணர்த்துமாறு கொண்ட திருவுருவத்தையன்றி மற்று