திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

அச்சப்பத்து இதன் கண் ''இருவரால் மாறு காணா எம்பிரான் தம்பிரானாந் திருவுருவன்றி" என்பதனால் ஆனந்தமுறுதல் என்னும் பதிகப் பொருள் போதருதல் காண்க. 2 516 வன்புலால் வேலும் அஞ்சேன் வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன் என்பெலாம் உருக நோக்கி யம்பலத் தாடு கின்ற என்பொலா மணியை யேத்தி யினிதருள் பருக மாட்டா அன்பிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 1125 ப-ரை. வன் புலால் வேலும் அஞ்சேன் - வலிய புலால் நாற்றத் தையுடைய வேற்படைக்கும் அஞ்சமாட்டேன்; வளை கையார் கடைக் கண் அஞ்சேன் - வளையல் அணிந்த கையினையுடைய பொதுமகளிரது மயக்கத்தைச் செய்யும் கடைக்கண் பார்வைக்கும் பயப்படமாட் டேன்; அம்பலத்து ஆடுகின்ற என் பொல்லா மணியை நோக்கி - தில்லைச் சிற்றம்பலத்தின் கண்ணே ஆனந்தக் கூத்து ஆடுகின்ற செப்ப னிடாது தன்னியல்பால் ஒளி புலப்படும் மாணிக்கமணி போல்வானைத் தரிசித்து; என்பு எலாம் உருக ஏத்தி - அன்பினால் என்புகளெல்லாம் உருகும்படி துதித்து; இனிது அருள் பருக மாட்டா -அப்பெருமானது திருவருளை இனிதாக நுகரமாட்டாத; அன்பு இலாதவரைக் கண் டால் - அன்பு இல்லாத மக்களைக் கண்டால்; நாம் அஞ்சும் ஆறு அம்ம - நாம் பயப்படும் தன்மை மிகப் பெரிதாகும். வேற்படைக்கும் அஞ்சமாட்டேன்; பொதுமகளிரது கடைக்கண் பார்வைக்கும் அஞ்சேன்; ஆயினும் தில்லைத் திருச்சிற்றம்பலத்தின் கண்ணே ஆனந்தக் கூத்து ஆடுகின்ற இறைவனைத் தரிசித்து என் பெலாம் உருகத் துதித்து அப்பெருமானது திருவருளை இனிதாக நுகர மாட்டாத அன்பிலாதவரைக் கண்டால் நாம் பயப்படும் தன்மை மிகப் பெரிதாகும் என்பதாம். வன்மை வேல், புலால் வேல் எனத் தனித்தனி இயையும். வளைக் கையார் - வளையலையணிந்த கையினையுடைய பொதுமகளிர். வளைக் கையார் எனப் பொதுப்படக் கூறினும் கடைக்கட் பார்வையால் ஆட வரை மயக்கும் பொதுமகளிரையே குறிக்கும். வேலும் அஞ்சேன் என் றதனால் புறப்பொருள் பற்றி வரும் போருக்கும், வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன் என்றதனால் அகப்பொருள் பற்றி வரும் காமப் போருக்கும் அஞ்சாமை உணர்த்தப்பட்டன. பொல்லாமணி- பொலா மணி என இடைக்குறைந்து நின்றது. பொல்லாமணி - செப்பனிடப்
அச்சப்பத்து இதன் கண் ' ' இருவரால் மாறு காணா எம்பிரான் தம்பிரானாந் திருவுருவன்றி என்பதனால் ஆனந்தமுறுதல் என்னும் பதிகப் பொருள் போதருதல் காண்க . 2 516 வன்புலால் வேலும் அஞ்சேன் வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன் என்பெலாம் உருக நோக்கி யம்பலத் தாடு கின்ற என்பொலா மணியை யேத்தி யினிதருள் பருக மாட்டா அன்பிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே . 1125 - ரை . வன் புலால் வேலும் அஞ்சேன் - வலிய புலால் நாற்றத் தையுடைய வேற்படைக்கும் அஞ்சமாட்டேன் ; வளை கையார் கடைக் கண் அஞ்சேன் - வளையல் அணிந்த கையினையுடைய பொதுமகளிரது மயக்கத்தைச் செய்யும் கடைக்கண் பார்வைக்கும் பயப்படமாட் டேன் ; அம்பலத்து ஆடுகின்ற என் பொல்லா மணியை நோக்கி - தில்லைச் சிற்றம்பலத்தின் கண்ணே ஆனந்தக் கூத்து ஆடுகின்ற செப்ப னிடாது தன்னியல்பால் ஒளி புலப்படும் மாணிக்கமணி போல்வானைத் தரிசித்து ; என்பு எலாம் உருக ஏத்தி - அன்பினால் என்புகளெல்லாம் உருகும்படி துதித்து ; இனிது அருள் பருக மாட்டா -அப்பெருமானது திருவருளை இனிதாக நுகரமாட்டாத ; அன்பு இலாதவரைக் கண் டால் - அன்பு இல்லாத மக்களைக் கண்டால் ; நாம் அஞ்சும் ஆறு அம்ம - நாம் பயப்படும் தன்மை மிகப் பெரிதாகும் . வேற்படைக்கும் அஞ்சமாட்டேன் ; பொதுமகளிரது கடைக்கண் பார்வைக்கும் அஞ்சேன் ; ஆயினும் தில்லைத் திருச்சிற்றம்பலத்தின் கண்ணே ஆனந்தக் கூத்து ஆடுகின்ற இறைவனைத் தரிசித்து என் பெலாம் உருகத் துதித்து அப்பெருமானது திருவருளை இனிதாக நுகர மாட்டாத அன்பிலாதவரைக் கண்டால் நாம் பயப்படும் தன்மை மிகப் பெரிதாகும் என்பதாம் . வன்மை வேல் புலால் வேல் எனத் தனித்தனி இயையும் . வளைக் கையார் - வளையலையணிந்த கையினையுடைய பொதுமகளிர் . வளைக் கையார் எனப் பொதுப்படக் கூறினும் கடைக்கட் பார்வையால் ஆட வரை மயக்கும் பொதுமகளிரையே குறிக்கும் . வேலும் அஞ்சேன் என் றதனால் புறப்பொருள் பற்றி வரும் போருக்கும் வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன் என்றதனால் அகப்பொருள் பற்றி வரும் காமப் போருக்கும் அஞ்சாமை உணர்த்தப்பட்டன . பொல்லாமணி- பொலா மணி என இடைக்குறைந்து நின்றது . பொல்லாமணி - செப்பனிடப்