திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

அச்சப்பத்து 1131 தடுக்கமுடியாத பெரும்பழிக்கும் அஞ்சேன்; சாதலைக் குறித்து அஞ்சேன்; ஆயின், எரியைக் கையிலேந்தி அம்பலத்தில் ஆடுகின்ற இறைவனது திருவடியை ஏத்தி மனம் நெகிழாதவரைக் கண்டால் நாம் பயப்படும் தன்மை மிகப் பெரிதாகும் என்பதாம். தகைவிலாப்பழி - விளக்கமுடியாத பெரும்பழி. தகைத்தல்-விலக் குதல். "நின்னைத் தகைத்தனே னல்லல்காண்" (கலி. 108-20) என்புழி யும் இப்பொருட்டாதல் காண்க தடுத்தலுமாம். பழி என்றது பிறன் மனை நயத்தல், நன்றிம றத்தல் முதலாயின. சாதலை முன்ம் அஞ்சேன் என்றது சாதலைக் குறித்து அஞ்சேன் என்றவாறு. முன்னம் - குறிப்பு. "முன்னத்தினுணருங் கிளவியுமுளவே" என்பது காண்க. புகை முகந்த எரி - முகந்தெரி எனப் பெயரெச்சத்து அகரம் தொக்கது. புகை முகத் தல் எரிக்கு இயற்கையடை. எரி - தாருகாவனத்து முனிவர்கள் விடுத்த எரி. எரிகை வீசி ஆடும் முன்னவன் என்க, முகை நகை - அரும்பு விரிகின்ற கொன்றை மாலை. முன்னவன் - எப்பொருட்கும் முன்னாயவன் (கோவை 170) உரை). இனி, தானல்லாத அரி அயன் முத லாகிய தேவர்களுக்கெல்லாம் முன்னேயுள்ளான்(கோவை 306 உரை) எனினுமாம் "மற்றைத் தேவர்களுக்கெல்லாம் முன்னவன்'' (கோவை 306) எனவும், முன்னவன் -உலகத்திற்கு முன்னுள்ளான் (கோவை 312 உரை) எனவும், ''முன்னவன் உலகுக்கு" (அப்பர் 172-8) எனவும் வருதல் காண்க. இதன்கண் 'முன்னவன் பாதமேத்தி அகநெகிழ்தல்" என்பதனால் ஆனந்தமுறுதல் என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க. 7 521 3-08 தறிசெறு களிறும் அஞ்சேன் தழல்விழி யுழுவை மஞ்சேன் வெறிகமழ் சடைய னப்பன் விண்ணவர் நண்ண மாட்டாச் செறிதரு கழல்க ளேத்திச் சிறந்தினி திருக்க மாட்டா அறிவிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. ப-ரை. தறிசெறு களிறும் அஞ்சேன் - கட்டுத் தறியைச் சிதைக்க மேற்படுகின்ற மதயானைக்கும் அஞ்சமாட்டேன்; தழல் விழி உழுவை அஞ்சேன் - நெருப்புப் போன்ற கண்களையுடைய புலிக்கும் பயப்பட மாட்டேன்; வெறி கமழ் சடையன் அப்பன் - நறுமணம் கமழாநின்ற சடையையுடையவனும் தந்தையுமாகிய இறைவனது; விண்ணவர் நண்ணமாட்டா செறிதரு கழல்கள் ஏத்தி-தேவர்களும்
அச்சப்பத்து 1131 தடுக்கமுடியாத பெரும்பழிக்கும் அஞ்சேன் ; சாதலைக் குறித்து அஞ்சேன் ; ஆயின் எரியைக் கையிலேந்தி அம்பலத்தில் ஆடுகின்ற இறைவனது திருவடியை ஏத்தி மனம் நெகிழாதவரைக் கண்டால் நாம் பயப்படும் தன்மை மிகப் பெரிதாகும் என்பதாம் . தகைவிலாப்பழி - விளக்கமுடியாத பெரும்பழி . தகைத்தல் - விலக் குதல் . நின்னைத் தகைத்தனே னல்லல்காண் ( கலி . 108-20 ) என்புழி யும் இப்பொருட்டாதல் காண்க தடுத்தலுமாம் . பழி என்றது பிறன் மனை நயத்தல் நன்றிம றத்தல் முதலாயின . சாதலை முன்ம் அஞ்சேன் என்றது சாதலைக் குறித்து அஞ்சேன் என்றவாறு . முன்னம் - குறிப்பு . முன்னத்தினுணருங் கிளவியுமுளவே என்பது காண்க . புகை முகந்த எரி - முகந்தெரி எனப் பெயரெச்சத்து அகரம் தொக்கது . புகை முகத் தல் எரிக்கு இயற்கையடை . எரி - தாருகாவனத்து முனிவர்கள் விடுத்த எரி . எரிகை வீசி ஆடும் முன்னவன் என்க முகை நகை - அரும்பு விரிகின்ற கொன்றை மாலை . முன்னவன் - எப்பொருட்கும் முன்னாயவன் ( கோவை 170 ) உரை ) . இனி தானல்லாத அரி அயன் முத லாகிய தேவர்களுக்கெல்லாம் முன்னேயுள்ளான் ( கோவை 306 உரை ) எனினுமாம் மற்றைத் தேவர்களுக்கெல்லாம் முன்னவன் ' ' ( கோவை 306 ) எனவும் முன்னவன் -உலகத்திற்கு முன்னுள்ளான் ( கோவை 312 உரை ) எனவும் ' ' முன்னவன் உலகுக்கு ( அப்பர் 172-8 ) எனவும் வருதல் காண்க . இதன்கண் ' முன்னவன் பாதமேத்தி அகநெகிழ்தல் என்பதனால் ஆனந்தமுறுதல் என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க . 7 521 3-08 தறிசெறு களிறும் அஞ்சேன் தழல்விழி யுழுவை மஞ்சேன் வெறிகமழ் சடைய னப்பன் விண்ணவர் நண்ண மாட்டாச் செறிதரு கழல்க ளேத்திச் சிறந்தினி திருக்க மாட்டா அறிவிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே . - ரை . தறிசெறு களிறும் அஞ்சேன் - கட்டுத் தறியைச் சிதைக்க மேற்படுகின்ற மதயானைக்கும் அஞ்சமாட்டேன் ; தழல் விழி உழுவை அஞ்சேன் - நெருப்புப் போன்ற கண்களையுடைய புலிக்கும் பயப்பட மாட்டேன் ; வெறி கமழ் சடையன் அப்பன் - நறுமணம் கமழாநின்ற சடையையுடையவனும் தந்தையுமாகிய இறைவனது ; விண்ணவர் நண்ணமாட்டா செறிதரு கழல்கள் ஏத்தி - தேவர்களும்