திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

522 அச்சப்பத்து மஞ்சுலாம் உருமும் அஞ்சேன் மன்னரோ டுறவும் அஞ்சேன் நஞ்சமே யமுத மாக்கும் R (nest நம்பிரான் எம்பி ரானாய்ச் செஞ்செவே யாண்டு கொண்டான் திருமுண்டந் தீட்ட மாட்டா தஞ்சுவா ரவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 1133 மன்ன ப - ரை : மஞ்சு உலாம் உருமும் அஞ்சேன் - மேகத்தில் தோன் றிச் செல்கின்ற இடியேற்றினுக்கும் பயப்படமாட்டேன்; ரோடு உறவும் அஞ்சேன் - அரசரோடு நட்புக் கொண்டு வாழ்வதற் கும் பயப்படமாட்டேன்; நஞ்சமே அமுதம் ஆக்கும் நம்பிரான் எம் பிரானாய் - ஆலகாலவிடத்தையே அமுதமாக்கி உட்கொண்ட நம் பிரான் எங்களுக்குத் தலைவனாய்; செஞ்செவே ஆண்டுகொண்டான்- மிகவும் செவ்விதாக ஆட்கொண் டருளினான்; திருமுண்டம் தீட்ட மாட்டாது அஞ்சுவார் அவரை கண்டால்-அவன் திருவெண்ணீற்றை முக்குறியாக அணிய மாட்டாமல் நாணுகின்றவர்களாகிய ளைக் கண்டால்; நாம் அஞ்சும் ஆறு அம்ம -நாம் பயப்படும் தன்மை மிகப் பெரிதாகும். அவர்க இடியேற்றிற்கும் அஞ்சேன்; மன்னரோடு உறவும் அஞ்சேன்; ஆனால் நஞ்சையே அமுதாக உட்கொண்ட நம்பிரான் எங்களுக்குத் தலைவனாய்ச் செஞ்செவே யாண்டுகொண்டருளினான்; அவன் திருவெண் ணீற்றை முக்குறியாக அணியமாட்டாமல் நாணுகின்றவர்களாகிய அவர்களைக் கண்டால் நாம் பயப்படும் தன்மை மிகப் பெரிதாகும் என்பதாம். மஞ்சு - மேகம். 'மஞ்சிவ ரடுக்கம்" (கலி 49-16) உரும் - இடியேறு. ''உருமேறு'' (சிறுபாண் 255 நச்). இடியேறு மேகத்தில் தோன்றிப் பரந்து செல்லுதலின் "மஞ்சுலாம் உருமும்" என்றார். உரும் விரைந்து அழித்தலின் அது அஞ்சுதற்குரியதாகும். ''செறுநர்த் தேய்த்த செல் லுறழ் தடக்கை" (முருகு 5) எனத் திருமுருகப் பெருமானின் திருக் கரத்தை நக்கீரனார் கூறியவாறுங் காண்க. மன்னரோடு உறவும் அஞ்சேன் என்றது மன்னர் வெகுண்டபோது அவரோடு உறவு நீங் குதல் மாத்திரமன்றி தண்டனையும் உளதாகலின் அதற்கும் அஞ் சேன் என்றார். ‘‘அகலாது அணுகாது தீக் காய்வார் போல்க இகல் வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்' குறள் 691
522 அச்சப்பத்து மஞ்சுலாம் உருமும் அஞ்சேன் மன்னரோ டுறவும் அஞ்சேன் நஞ்சமே யமுத மாக்கும் R ( nest நம்பிரான் எம்பி ரானாய்ச் செஞ்செவே யாண்டு கொண்டான் திருமுண்டந் தீட்ட மாட்டா தஞ்சுவா ரவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே . 1133 மன்ன - ரை : மஞ்சு உலாம் உருமும் அஞ்சேன் - மேகத்தில் தோன் றிச் செல்கின்ற இடியேற்றினுக்கும் பயப்படமாட்டேன் ; ரோடு உறவும் அஞ்சேன் - அரசரோடு நட்புக் கொண்டு வாழ்வதற் கும் பயப்படமாட்டேன் ; நஞ்சமே அமுதம் ஆக்கும் நம்பிரான் எம் பிரானாய் - ஆலகாலவிடத்தையே அமுதமாக்கி உட்கொண்ட நம் பிரான் எங்களுக்குத் தலைவனாய் ; செஞ்செவே ஆண்டுகொண்டான் மிகவும் செவ்விதாக ஆட்கொண் டருளினான் ; திருமுண்டம் தீட்ட மாட்டாது அஞ்சுவார் அவரை கண்டால் - அவன் திருவெண்ணீற்றை முக்குறியாக அணிய மாட்டாமல் நாணுகின்றவர்களாகிய ளைக் கண்டால் ; நாம் அஞ்சும் ஆறு அம்ம -நாம் பயப்படும் தன்மை மிகப் பெரிதாகும் . அவர்க இடியேற்றிற்கும் அஞ்சேன் ; மன்னரோடு உறவும் அஞ்சேன் ; ஆனால் நஞ்சையே அமுதாக உட்கொண்ட நம்பிரான் எங்களுக்குத் தலைவனாய்ச் செஞ்செவே யாண்டுகொண்டருளினான் ; அவன் திருவெண் ணீற்றை முக்குறியாக அணியமாட்டாமல் நாணுகின்றவர்களாகிய அவர்களைக் கண்டால் நாம் பயப்படும் தன்மை மிகப் பெரிதாகும் என்பதாம் . மஞ்சு - மேகம் . ' மஞ்சிவ ரடுக்கம் ( கலி 49-16 ) உரும் - இடியேறு . ' ' உருமேறு ' ' ( சிறுபாண் 255 நச் ) . இடியேறு மேகத்தில் தோன்றிப் பரந்து செல்லுதலின் மஞ்சுலாம் உருமும் என்றார் . உரும் விரைந்து அழித்தலின் அது அஞ்சுதற்குரியதாகும் . ' ' செறுநர்த் தேய்த்த செல் லுறழ் தடக்கை ( முருகு 5 ) எனத் திருமுருகப் பெருமானின் திருக் கரத்தை நக்கீரனார் கூறியவாறுங் காண்க . மன்னரோடு உறவும் அஞ்சேன் என்றது மன்னர் வெகுண்டபோது அவரோடு உறவு நீங் குதல் மாத்திரமன்றி தண்டனையும் உளதாகலின் அதற்கும் அஞ் சேன் என்றார் . அகலாது அணுகாது தீக் காய்வார் போல்க இகல் வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார் ' குறள் 691