திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை ''மன்னரை படைந்து வாழ்தல் வஞ்சநஞ் சுமிழு நாகந் தன்னுடன் மருவி வாழுந் தன்மை" திருவாத: திருப்பெருந். 95 என வருவன காண்க. நஞ்சமே, ஏகாரம் தேற்றம். நஞ்சமே யமுதமாக் கும் "களமாம் விடமமிர் தாக்கியதில்லைத் தொல்லோன் (கோவை 22) என்பது காண்க. இறைவன் செவ்விதாக ஆட்கொண்டமையை "செஞ் செவே யாண்டாய் சிவபுரத் தரசே" (வாழா. 6 ) என அடிகள் பிறி தோரிடத்தும் கூறுதலானுமறிக. எம்பிரானாய் - எங்களுக்குத் தலைவ னாகிய பரமாசாரியனாய். செவ்வே செவ்வே - செஞ்செவே என இயைந்து மிகவுஞ் செவ்விதாக எனப் பொருள் தந்து நின்றது திரு முண்டம் - திருவெண்ணீற்றை முக்குறியாகத் தரித்தல். 1134 "நீளொளி வளர்திரு முண்ட நெற்றியும்” பெரிய : திருநீல. 11 "நெற்றிபின்மேல், முண்ட நீற்றர்'' பெரிய : திருக் குறிப்பு 63 "திருநீற்று முண்டத் தொளித் தழைப்பும்" பெரிய: அமர்நீதி 7 திருமுண்டம் அங்கிக் கண்கரந்த நன்னுதல் மேல் கவின்சாத்தி.'' திருவாத : திருப்பெருந் 35 என வருவனவுங் காண்க. இனி, திரு - செல்வம் என்றது திருவெண் ணீற்றை. முண்டம் - நெற்றி. தீட்டமாட்டாது என்றதனால் விபூதியை நெற்றியில் முக்குறியாக அணியமாட்டாது எனப் பொருள் உரைக் கப்படினும் அமையும், அஞ்சுவார் என்பது நாணுவார் எனப் பொருள் கொள்ளும்படி நின்றது. அஞ்சுவாரை என்பது அஞ்சுவாரவரை எனச் சுட்டு விரிக்கப்பட்டது. இதன்கண் 'எம்பிரான் செஞ்செவே யாண்டு கொண்டான்" என் பதனால் ஆனந்தமுறுதல் என்னும் பதிகப் பொருள் புலப்படுதல் காண்க. 523 கோணிலா வாளி பஞ்சேன் கூற்றுவன் சீற்றம் அஞ்சேன் நீணிலா அணியி னானை நினைந்துறைந் துருகி நெக்கு வாணிலாங் கண்கள் சோர வாழ்த்திநின் றேத்த மாட்டா ஆணலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 9 ப-ரை. கோண் இலா வாளி அஞ்சேன் - வளைதல் இல்லாத கொடிதாகிய அம்பிற்கும் பயப்படமாட்டேன்; கூற்றுவன் சீற்றம் அஞ்சேன் யமனது வெகுளிக்கும் பயப்படமாட்டேன்; நீள் நிலா அணியினானை நினைந்து நைந்து நெக்கு உருகி - நீண்ட பிறைச்சந்திர னாகிய அணியையுடைய இறைவனை அன்புடைய மனத்தினால் நினைந்து
திருவாசக ஆராய்ச்சியுரை ' ' மன்னரை படைந்து வாழ்தல் வஞ்சநஞ் சுமிழு நாகந் தன்னுடன் மருவி வாழுந் தன்மை திருவாத : திருப்பெருந் . 95 என வருவன காண்க . நஞ்சமே ஏகாரம் தேற்றம் . நஞ்சமே யமுதமாக் கும் களமாம் விடமமிர் தாக்கியதில்லைத் தொல்லோன் ( கோவை 22 ) என்பது காண்க . இறைவன் செவ்விதாக ஆட்கொண்டமையை செஞ் செவே யாண்டாய் சிவபுரத் தரசே ( வாழா . 6 ) என அடிகள் பிறி தோரிடத்தும் கூறுதலானுமறிக . எம்பிரானாய் - எங்களுக்குத் தலைவ னாகிய பரமாசாரியனாய் . செவ்வே செவ்வே - செஞ்செவே என இயைந்து மிகவுஞ் செவ்விதாக எனப் பொருள் தந்து நின்றது திரு முண்டம் - திருவெண்ணீற்றை முக்குறியாகத் தரித்தல் . 1134 நீளொளி வளர்திரு முண்ட நெற்றியும் பெரிய : திருநீல . 11 நெற்றிபின்மேல் முண்ட நீற்றர் ' ' பெரிய : திருக் குறிப்பு 63 திருநீற்று முண்டத் தொளித் தழைப்பும் பெரிய : அமர்நீதி 7 திருமுண்டம் அங்கிக் கண்கரந்த நன்னுதல் மேல் கவின்சாத்தி . ' ' திருவாத : திருப்பெருந் 35 என வருவனவுங் காண்க . இனி திரு - செல்வம் என்றது திருவெண் ணீற்றை . முண்டம் - நெற்றி . தீட்டமாட்டாது என்றதனால் விபூதியை நெற்றியில் முக்குறியாக அணியமாட்டாது எனப் பொருள் உரைக் கப்படினும் அமையும் அஞ்சுவார் என்பது நாணுவார் எனப் பொருள் கொள்ளும்படி நின்றது . அஞ்சுவாரை என்பது அஞ்சுவாரவரை எனச் சுட்டு விரிக்கப்பட்டது . இதன்கண் ' எம்பிரான் செஞ்செவே யாண்டு கொண்டான் என் பதனால் ஆனந்தமுறுதல் என்னும் பதிகப் பொருள் புலப்படுதல் காண்க . 523 கோணிலா வாளி பஞ்சேன் கூற்றுவன் சீற்றம் அஞ்சேன் நீணிலா அணியி னானை நினைந்துறைந் துருகி நெக்கு வாணிலாங் கண்கள் சோர வாழ்த்திநின் றேத்த மாட்டா ஆணலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே . 9 - ரை . கோண் இலா வாளி அஞ்சேன் - வளைதல் இல்லாத கொடிதாகிய அம்பிற்கும் பயப்படமாட்டேன் ; கூற்றுவன் சீற்றம் அஞ்சேன் யமனது வெகுளிக்கும் பயப்படமாட்டேன் ; நீள் நிலா அணியினானை நினைந்து நைந்து நெக்கு உருகி - நீண்ட பிறைச்சந்திர னாகிய அணியையுடைய இறைவனை அன்புடைய மனத்தினால் நினைந்து