திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருப்பாண்டிப் பதிகம் சிவானந்த விளைவு திருப்பெருந்துறையில் அருளிச் செய்யப்பட்டது பாண்டியனுக்காகப் பரிமேற்கொண்டு மதுரையிற் புக்க இறை வன் உயர்வினை அடியார்க்கு எடுத்து இயம்பும் பத்துத் திருப் பாடல்களையுடையது இத்திருப்பதிகம். இதன் உள்ளுறை சிவானந்த விளைவு. அஃதாவது சிவனது இன்பம் உளதாதல். இதனைத் திருவா சகச் சிறப்புடையார், "புரவியின்மேற் பாண்டியன்முன் வரும் பதத்தை யாம்பெறுமற் புதம் போல் யாரும் விரவுமின்க ளென்றடியார்க் குறுதி சொல றிருப் பாண்டி விருத்த மாமே'' என்பர்: இது கட்டளைக்கலித்துறை என்னும் செய்யுள் வகையால் அமைந்தது. ட் கட்டளைக் கலித்துறை 524 Arb திருச்சிற்றம்பலம் பருவரை மங்கைதன் பங்கரைப் பாண்டியற் காரமுதாம் ஒருவரை யொன்றுமி லாதவ ரைக்கழற் போதிறைஞ்சித் தெரிவரை நின்றுருக் கிப்பரி மேற்கொண்ட சேவகனார் ஒருவரை பன்றி யுருவறி யாதென்றன் உள்ளமதே. ப-ரை. பரு வரை மங்கை தன் பங்கரை - பெரிய இமய மலை அரசன் மக்ளாகிய உமாதேவியை இடப் பாகத்திலுடையவரும்; பாண்டியற்கு ஆர் அமுதாம் ஒருவரை - பாண்டிய அரசனுக்குக் கிடைத் தற்கு அரிய அமுதம் போன்ற ஒப்பற்றவரும்; ஒன்றும் இலாதவரை- குணம் குறி முதலியன தமக்கென இல்லாதவரும்; கழல் போது இறைஞ்சி தெரிவர - யான் தம் திருவடித்தாமரை மலர்களை வணங் கித் தம்மைத் தெரிந்து கொள்ளும் வண்ணம்; நின்று உருக்கி - வெளிப்பட்டு நின்று உள்ளத்தை உருகச் செய்து; பரிமேல் கொண்ட சேவகனார் ஒருவரை அன்றி - குதிரையின் மேற்கொண்டு எழுந்தருளி வந்த வீரருமாகிய முழுமுதல் ஒருவரையன்றி; என்தன் உள்ளம் உரு
திருப்பாண்டிப் பதிகம் சிவானந்த விளைவு திருப்பெருந்துறையில் அருளிச் செய்யப்பட்டது பாண்டியனுக்காகப் பரிமேற்கொண்டு மதுரையிற் புக்க இறை வன் உயர்வினை அடியார்க்கு எடுத்து இயம்பும் பத்துத் திருப் பாடல்களையுடையது இத்திருப்பதிகம் . இதன் உள்ளுறை சிவானந்த விளைவு . அஃதாவது சிவனது இன்பம் உளதாதல் . இதனைத் திருவா சகச் சிறப்புடையார் புரவியின்மேற் பாண்டியன்முன் வரும் பதத்தை யாம்பெறுமற் புதம் போல் யாரும் விரவுமின்க ளென்றடியார்க் குறுதி சொல றிருப் பாண்டி விருத்த மாமே ' ' என்பர் : இது கட்டளைக்கலித்துறை என்னும் செய்யுள் வகையால் அமைந்தது . ட் கட்டளைக் கலித்துறை 524 Arb திருச்சிற்றம்பலம் பருவரை மங்கைதன் பங்கரைப் பாண்டியற் காரமுதாம் ஒருவரை யொன்றுமி லாதவ ரைக்கழற் போதிறைஞ்சித் தெரிவரை நின்றுருக் கிப்பரி மேற்கொண்ட சேவகனார் ஒருவரை பன்றி யுருவறி யாதென்றன் உள்ளமதே . - ரை . பரு வரை மங்கை தன் பங்கரை - பெரிய இமய மலை அரசன் மக்ளாகிய உமாதேவியை இடப் பாகத்திலுடையவரும் ; பாண்டியற்கு ஆர் அமுதாம் ஒருவரை - பாண்டிய அரசனுக்குக் கிடைத் தற்கு அரிய அமுதம் போன்ற ஒப்பற்றவரும் ; ஒன்றும் இலாதவரை குணம் குறி முதலியன தமக்கென இல்லாதவரும் ; கழல் போது இறைஞ்சி தெரிவர - யான் தம் திருவடித்தாமரை மலர்களை வணங் கித் தம்மைத் தெரிந்து கொள்ளும் வண்ணம் ; நின்று உருக்கி - வெளிப்பட்டு நின்று உள்ளத்தை உருகச் செய்து ; பரிமேல் கொண்ட சேவகனார் ஒருவரை அன்றி - குதிரையின் மேற்கொண்டு எழுந்தருளி வந்த வீரருமாகிய முழுமுதல் ஒருவரையன்றி ; என்தன் உள்ளம் உரு