திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை யுடையவனே, முன்னைப்பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளாயுள்ளவனே, பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியை உன்னைத் தலைவனாகப்பெற்ற சிறப்பினையுடைய உன் அடிமைகளாகிய நாங்கள் உன் அடியார்களுடைய திருவடிகளையே வணங்குவோம், அவ்வாறே அவ்வடியவர்க்கே உரிமையுடையவராவோம். அன்ன வரே எம் கணவராவார், அவர் விரும்பிக் கட்டளையிட்டபடியே தொழும்பாய் பணி செய்வோம். எங்கள் தலைவனாகிய நீ நாங்கள் வேண்டிக்கொண்ட இந்த வகையான பேறுகளையே தருவீராயின் பின்னர் நாங்கள் எவ்விதமான குறைபாடுகளும் இல்லாதவர்களா வோம். எம்பாவாய்! நாங்கள் வேண்டிக்கொண்ட வண்ணம் இறை வன் அருளும்படி முதலில் நீ அருள் செய்வாயாக என்பதாம். 518 அநாதியாயுள்ள உயிர் உலகு ஆகிய பழைய பொருள்களுக் கெல்லாம் அநாதியாயுள்ள பழம் பொருளாயுமுள்ளவன் இறைவ னாதலின் ** மூன்னைப் பழம் பொருட்கு மூன்னைப் பழம் பொருளே'' என்றார். மூளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி" (நாவு.- 232-1) "முற்றும் பின்னையாய் முன்னமே முளைத்தானை " (சுந். 67 - 9) 64 எனத் தேவாரத்தும் "முன்னோரில்லா முன்னோன் " (கடவுள் - 6) என ஞானாமிர்தத்தும் வருவன காண்க. முன்னை - அநாதி. பொருட்டாதல் " முன்னை மரபின் முதுமொழி முதல்" என்னும் பரிபாடலுரையில் ( 3 - 47) முன்னை என்பதற்கு அநாதி எனப் பரிமேலழகர் உரைத்தமையானும் அறியப்படும். முன்னைப் பழம் பொருளாயுள்ள இறைவன் மீட்டும் பின்னைய புதிய பொருள் எல்லாவற்றிற்கும் புதிய பொருளாயுள்ளவனாதலின் "பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே 66 வேதக் காட்சிக்கும் உபநிடத் துச்சியில் விரித்த போதக் காட்சிக்குங் காணலன் புதியரிற் புதியன் மூதக் கார்க்குமூ தக்கவன் முடிவிற்கு முடிவாய் ஆதிக் காதியா யுயிர்க்குயி ராய்நின்ற வமலன்" என்றனர். (சூரனமைச்சு -127) எனக் கந்தபுரர்ணத்தும் வருதல் காண்க. பேர்த்தும் என்றது, முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம் பொருளாயிருக்கும் தன்மையன்றிப், புதிய பொருள்களுக்கெல்லாம் புதிய பொருளாயுமிருக்கும் தன்மையுடையன் என்பதை நின்றது. விளக்கி
திருவாசக ஆராய்ச்சியுரை யுடையவனே முன்னைப்பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளாயுள்ளவனே பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியை உன்னைத் தலைவனாகப்பெற்ற சிறப்பினையுடைய உன் அடிமைகளாகிய நாங்கள் உன் அடியார்களுடைய திருவடிகளையே வணங்குவோம் அவ்வாறே அவ்வடியவர்க்கே உரிமையுடையவராவோம் . அன்ன வரே எம் கணவராவார் அவர் விரும்பிக் கட்டளையிட்டபடியே தொழும்பாய் பணி செய்வோம் . எங்கள் தலைவனாகிய நீ நாங்கள் வேண்டிக்கொண்ட இந்த வகையான பேறுகளையே தருவீராயின் பின்னர் நாங்கள் எவ்விதமான குறைபாடுகளும் இல்லாதவர்களா வோம் . எம்பாவாய் ! நாங்கள் வேண்டிக்கொண்ட வண்ணம் இறை வன் அருளும்படி முதலில் நீ அருள் செய்வாயாக என்பதாம் . 518 அநாதியாயுள்ள உயிர் உலகு ஆகிய பழைய பொருள்களுக் கெல்லாம் அநாதியாயுள்ள பழம் பொருளாயுமுள்ளவன் இறைவ னாதலின் ** மூன்னைப் பழம் பொருட்கு மூன்னைப் பழம் பொருளே ' ' என்றார் . மூளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி ( நாவு.- 232-1 ) முற்றும் பின்னையாய் முன்னமே முளைத்தானை ( சுந் . 67 - 9 ) 64 எனத் தேவாரத்தும் முன்னோரில்லா முன்னோன் ( கடவுள் - 6 ) என ஞானாமிர்தத்தும் வருவன காண்க . முன்னை - அநாதி . பொருட்டாதல் முன்னை மரபின் முதுமொழி முதல் என்னும் பரிபாடலுரையில் ( 3 - 47 ) முன்னை என்பதற்கு அநாதி எனப் பரிமேலழகர் உரைத்தமையானும் அறியப்படும் . முன்னைப் பழம் பொருளாயுள்ள இறைவன் மீட்டும் பின்னைய புதிய பொருள் எல்லாவற்றிற்கும் புதிய பொருளாயுள்ளவனாதலின் பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே 66 வேதக் காட்சிக்கும் உபநிடத் துச்சியில் விரித்த போதக் காட்சிக்குங் காணலன் புதியரிற் புதியன் மூதக் கார்க்குமூ தக்கவன் முடிவிற்கு முடிவாய் ஆதிக் காதியா யுயிர்க்குயி ராய்நின்ற வமலன் என்றனர் . ( சூரனமைச்சு -127 ) எனக் கந்தபுரர்ணத்தும் வருதல் காண்க . பேர்த்தும் என்றது முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம் பொருளாயிருக்கும் தன்மையன்றிப் புதிய பொருள்களுக்கெல்லாம் புதிய பொருளாயுமிருக்கும் தன்மையுடையன் என்பதை நின்றது . விளக்கி