திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

1138 525 திருவாசக ஆராய்ச்சியுரை சதுரை மறந்தறி மால்கொள்வர் சார்ந்தவர் சாற்றிச் சொன்னோம் கதிரை மறைத்தன்ன சோதி கழுக்கடை கைப்பிடித்துக் குதிரையின் மேல்வந்து கூடிடு மேற்குடி கேடுகண்டீர் மதுரையர் மன்னன் மறுபிறப் போட மறித்திடுமே. ப - ரை! கதிரை மறைத்தன்ன சோதி - கதிரவனைத் தன் சோதி யால் மறைத்தாற் போன்ற மிக்க ஒளிபொருந்திய உருவத்தை யுடைய இறைவன், கழுக்கடை கைப்பிடித்து - மூவிலைச் சூலத்தைத் திருக்கையிற் றாங்கி, குதிரையின் மேல் வந்து கூடிடுமேல் - குதிரை யின்மேல் ஏறி வெளிப்பட்டு வந்து எமது மத்தியில் கூடுவானாயின் குடி கேடு கண்டீர் - அவனைத் தரிசித்த எங்களது பிறப்புக் கெட் டொழியும். மதுரையர் மன்னன் மறுபிறப்பு ஓட மறித்திடும் மதுரை நகரின் கண் ணுள்ளாரது அரசனாகிய பாண்டியனது மேல்வரும் பிறப்பு விட்டு நீங்கும் வண்ணம் தடுத்து விடுவான், சாற்றிச் சொன் னோம் - இதனைப் பறையறைந்து சொன்னோம். சார்ந்தனர் சதுரை மறந்து அறிமால் கொள்வர் - இதனை அறிந்து இறைவனைச் சார்ந்த வர்கள் தந்திறமையை மறந்து சிவஞான மோகத்தைக் கொள் வர். கதிரை மறைத்தாற்போன்ற மிக்க ஒளி பொருந்திய உருவத் தையுடைய இறைவன் கழுக்கடையைக் கையிற் பிடித்துக் குதிரையின் மீது ஏறி வெளிப்பட்டு வந்து கூடின அளவில் அவனைத் தரிசித்த எங்களது பிறப்புக் கெட்டொழியும்; பாண்டியனது மறுபிறப்பு விட்டு நீங்கும் வண்ணம் அதனைத் தடுத்து விடுவான். இதனைச் சாற்றிச் சொன்னோம். இதனை அறிந்து இறைவனைச் சார்ந்தவர்கள் தம் திற மையை மறந்து சிவஞான மோகத்தைக் கொள்வர் என்பதாம். சதுர் - திறமை என்றது பசுஞான பாச ஞானங்களால் இறை வனை அறியலாம் என்னும் திறமை. அதனை மறந்து இறைவனை அறி தற்குரிய சாதனமாகிய சிவஞான மோகத்தைக் கொள்வர். சார்ந் தவர் என்றது 'சார்புணர்ந்து சார்புகெட ஒழுகின் மற்றழித்துச், சார்தரா சார்தரு நோய்" (குறள் 359) என்னும் திருவள்ளுவர் வாக்கின்படி தாம் சாரவேண்டிய உண்மைச் சார்பான இறைவனைச் சார்ந்தவர் என்றவாறு. சாற்றிச் சொல்லுதல் - பறைசாற்றிச் சொல்லுதல் போல நன்கு எடுத்துச் சொல்லுதல்.
1138 525 திருவாசக ஆராய்ச்சியுரை சதுரை மறந்தறி மால்கொள்வர் சார்ந்தவர் சாற்றிச் சொன்னோம் கதிரை மறைத்தன்ன சோதி கழுக்கடை கைப்பிடித்துக் குதிரையின் மேல்வந்து கூடிடு மேற்குடி கேடுகண்டீர் மதுரையர் மன்னன் மறுபிறப் போட மறித்திடுமே . - ரை ! கதிரை மறைத்தன்ன சோதி - கதிரவனைத் தன் சோதி யால் மறைத்தாற் போன்ற மிக்க ஒளிபொருந்திய உருவத்தை யுடைய இறைவன் கழுக்கடை கைப்பிடித்து - மூவிலைச் சூலத்தைத் திருக்கையிற் றாங்கி குதிரையின் மேல் வந்து கூடிடுமேல் - குதிரை யின்மேல் ஏறி வெளிப்பட்டு வந்து எமது மத்தியில் கூடுவானாயின் குடி கேடு கண்டீர் - அவனைத் தரிசித்த எங்களது பிறப்புக் கெட் டொழியும் . மதுரையர் மன்னன் மறுபிறப்பு ஓட மறித்திடும் மதுரை நகரின் கண் ணுள்ளாரது அரசனாகிய பாண்டியனது மேல்வரும் பிறப்பு விட்டு நீங்கும் வண்ணம் தடுத்து விடுவான் சாற்றிச் சொன் னோம் - இதனைப் பறையறைந்து சொன்னோம் . சார்ந்தனர் சதுரை மறந்து அறிமால் கொள்வர் - இதனை அறிந்து இறைவனைச் சார்ந்த வர்கள் தந்திறமையை மறந்து சிவஞான மோகத்தைக் கொள் வர் . கதிரை மறைத்தாற்போன்ற மிக்க ஒளி பொருந்திய உருவத் தையுடைய இறைவன் கழுக்கடையைக் கையிற் பிடித்துக் குதிரையின் மீது ஏறி வெளிப்பட்டு வந்து கூடின அளவில் அவனைத் தரிசித்த எங்களது பிறப்புக் கெட்டொழியும் ; பாண்டியனது மறுபிறப்பு விட்டு நீங்கும் வண்ணம் அதனைத் தடுத்து விடுவான் . இதனைச் சாற்றிச் சொன்னோம் . இதனை அறிந்து இறைவனைச் சார்ந்தவர்கள் தம் திற மையை மறந்து சிவஞான மோகத்தைக் கொள்வர் என்பதாம் . சதுர் - திறமை என்றது பசுஞான பாச ஞானங்களால் இறை வனை அறியலாம் என்னும் திறமை . அதனை மறந்து இறைவனை அறி தற்குரிய சாதனமாகிய சிவஞான மோகத்தைக் கொள்வர் . சார்ந் தவர் என்றது ' சார்புணர்ந்து சார்புகெட ஒழுகின் மற்றழித்துச் சார்தரா சார்தரு நோய் ( குறள் 359 ) என்னும் திருவள்ளுவர் வாக்கின்படி தாம் சாரவேண்டிய உண்மைச் சார்பான இறைவனைச் சார்ந்தவர் என்றவாறு . சாற்றிச் சொல்லுதல் - பறைசாற்றிச் சொல்லுதல் போல நன்கு எடுத்துச் சொல்லுதல் .