திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருப்பாண்டிப்பதிகம் பேரொளி மண்டிலமாகிய கதிரவனை மறைத்தாற்போலும் ஒளி யையுடையவன் இறைவன் என்பார், 'கதிரை மறைத்தன்ன சோதி' என்றார். ''விரிகின்ற ஞாயிறு போன்றது மேனி" (பொன் வண்ணத்.26) 1139 கழுக்கடை - முத்தலைச் சூலம். குதிரைச் சேவகனாக இறைவன் எழுந்தருளிவந்தபோது கழுக்கடை கைக்கொண்டிலனாகவும் "கழுக் கடை கைப்பிடித்து" என்றது அப்போது இறைவன் திருக்கரத்தில் சம்மட்டியாக அமைந்தது கழுக்கடையே என்பதை உணர்த்தும் பொருட்டாகும். கூடிடுமேல் பிறப்புக் கெட்டொழியும் மன்னன் பிறப்போட மறித் திடும் என எதிர்காலத்தாற் கூறினும் குதிரையின் மேல்வந்து கூடின அளவில் குடிகெட்டொழிந்தது. மன்னன் பிறப்போட மறிக்கப்பட் டது என இறந்தகாலப் பொருள் கொள்வதே பொருந்துவதாகும். இப்பொருளை,சாற்றிச் சொன்னோம் என்னும் அடிகள் வாக்கு வலி யுறுத்தி நிற்றல் காண்க. குடி,பிறப்பினாலுளதாகலின் அது பிறப்பினை உணர்த்தி நின்றது. கேடு உளதாகும் என ஒரு சொல் வருவித்து முடிக்க. கண்டீர் - முன்னிலையசை. மதுரை மன்னன் பொருட்டு இறை வன் குதிரையின் மேல் வந்து சேர்ந்து காட்சி கொடுத்த அளவில் அத னைத் தரிசித்தவர்களின் பிறவித்துன்பம் நீங்கும்; அன்றியும் மதுரை யார் மன்னனது மறுபிறப்பினையும் நீங்கிப் போம்படி தடுத்து விடு வான் என்பதாம். இதன்சண் 'சோதி கழுக்கடை கைப்பிடித்துக் குதிரையின் மேல் வந்து கூடிடுமேல் குடிகேடு" என்றதனால் சிவானந்த விளைவு என் னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க. 2 நீரின்ப வெள்ளத்துள் நீந்திக் குளிக்கின்ற நெஞ்சங் கொண்டீர் பாரின்ப வெள்ளங் கொளப்பரி மேற்கொண்ட பாண்டியனார் ஓரின்ப வெள்ளத் துருக்கொண்டு தொண்டரை யுள்ளங் கொண்டார் பேரின்ப வெள்ளத்துட் பெய்கழ லே சென்று பேணுமினே. 526 ப- ரை: நீர் இன்ப வெள்ளத்து நீந்தி குளிக்கின்ற நெஞ்சம் கொண்டீர் - நீங்கள் இறைவனது பேரின்பப் பெருக்கிலே நீந்திக் குளிக்க வேண்டும் என்று விரும்புகின்ற மனமுடையீராயின், பார் இன்ப வெள்ளம் கொள்ள - நிலவுலகத்திலுள்ளாரை ஆனந்த வெள்ளம் மூடிக் கொள்ளும்படி, பரிமேற் கொண்ட பாண்டியனார் - குதிரையின் மேல்
திருப்பாண்டிப்பதிகம் பேரொளி மண்டிலமாகிய கதிரவனை மறைத்தாற்போலும் ஒளி யையுடையவன் இறைவன் என்பார் ' கதிரை மறைத்தன்ன சோதி ' என்றார் . ' ' விரிகின்ற ஞாயிறு போன்றது மேனி ( பொன் வண்ணத் .26 ) 1139 கழுக்கடை - முத்தலைச் சூலம் . குதிரைச் சேவகனாக இறைவன் எழுந்தருளிவந்தபோது கழுக்கடை கைக்கொண்டிலனாகவும் கழுக் கடை கைப்பிடித்து என்றது அப்போது இறைவன் திருக்கரத்தில் சம்மட்டியாக அமைந்தது கழுக்கடையே என்பதை உணர்த்தும் பொருட்டாகும் . கூடிடுமேல் பிறப்புக் கெட்டொழியும் மன்னன் பிறப்போட மறித் திடும் என எதிர்காலத்தாற் கூறினும் குதிரையின் மேல்வந்து கூடின அளவில் குடிகெட்டொழிந்தது . மன்னன் பிறப்போட மறிக்கப்பட் டது என இறந்தகாலப் பொருள் கொள்வதே பொருந்துவதாகும் . இப்பொருளை சாற்றிச் சொன்னோம் என்னும் அடிகள் வாக்கு வலி யுறுத்தி நிற்றல் காண்க . குடி பிறப்பினாலுளதாகலின் அது பிறப்பினை உணர்த்தி நின்றது . கேடு உளதாகும் என ஒரு சொல் வருவித்து முடிக்க . கண்டீர் - முன்னிலையசை . மதுரை மன்னன் பொருட்டு இறை வன் குதிரையின் மேல் வந்து சேர்ந்து காட்சி கொடுத்த அளவில் அத னைத் தரிசித்தவர்களின் பிறவித்துன்பம் நீங்கும் ; அன்றியும் மதுரை யார் மன்னனது மறுபிறப்பினையும் நீங்கிப் போம்படி தடுத்து விடு வான் என்பதாம் . இதன்சண் ' சோதி கழுக்கடை கைப்பிடித்துக் குதிரையின் மேல் வந்து கூடிடுமேல் குடிகேடு என்றதனால் சிவானந்த விளைவு என் னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க . 2 நீரின்ப வெள்ளத்துள் நீந்திக் குளிக்கின்ற நெஞ்சங் கொண்டீர் பாரின்ப வெள்ளங் கொளப்பரி மேற்கொண்ட பாண்டியனார் ஓரின்ப வெள்ளத் துருக்கொண்டு தொண்டரை யுள்ளங் கொண்டார் பேரின்ப வெள்ளத்துட் பெய்கழ லே சென்று பேணுமினே . 526 ப- ரை : நீர் இன்ப வெள்ளத்து நீந்தி குளிக்கின்ற நெஞ்சம் கொண்டீர் - நீங்கள் இறைவனது பேரின்பப் பெருக்கிலே நீந்திக் குளிக்க வேண்டும் என்று விரும்புகின்ற மனமுடையீராயின் பார் இன்ப வெள்ளம் கொள்ள - நிலவுலகத்திலுள்ளாரை ஆனந்த வெள்ளம் மூடிக் கொள்ளும்படி பரிமேற் கொண்ட பாண்டியனார் - குதிரையின் மேல்