திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை ஏறிவந்த பாண்டிப் பெருமானார், ஓர் இன்ப வெள்ளத்து உரு கொண்டு - ஒப்பற்ற இன்ப வெள்ளமே திருவுருவாகக் கொண்டு எழுந்தருளி வந்து, தொண்டரை உள்ளம் கொண்டார் தமது அடியார்களது உள்ளத்தினைக் கவர்ந்து கொண்டார், பேர் இன்ப வெள்ளத்துள் பெய் கழலே சென்று பேணுமின் - பேரின்ப வெள்ளத்துள் உள்ள வீரக் கழல் அணிந்த திருவடிகளைச் சென்றடைந்து அவற்றையே வழிபடுவீராக. 1140 நீங்கள் இறைவனது பேரின்ப வெள்ளத்துள் நீந்திக் குளிக்கவேண் டும் என்று விரும்புகின்ற மனமுடையீராயின், நிலவுலகத்திலுள் ளாரை ஆனந்த வெள்ளமானது மூடிக்கெ ள்ளும்படி பரிமேற் கொண்ட பாண்டிப் பெருமானார் இன்ப வெள்ளமே திருவுருவாகக் கொண்டு எழுந்தருளி வந்து தம் மெய்யடியார்களின் உள்ளங்களைக் கவர்ந்துகொண்டார். ஆகையால் பேரின்ப வெள்ளத்திலுள்ள திரு வடிகளையே சென்றடைந்து அவற்றையே வழிபடுவீராக என்பதாம். யின் நீர் நெஞ்சங் கொண்டீர் என்பதற்கு நீர் நெஞ்சங் கொண்டீரா என ஒருசொல் வருவித்து, பெய்கழலே சென்று பேணு மின் என்பதனோடு முடிக்க. பார் என்றது நிலவுலகத்திலுள்ளாரைக் குறித்து நின்றது. இன்ப வெள்ளம் கொள்ளல் - இன்ப வெள்ளம் மூடிக் கொள்ளல். இறைவனைப் பாண்டியனார் என்றது இறைவன் சோமசுந்தர பாண்டியனாய்த் தென்னாடாண்டமை பற்றியாகும். தொண்டரை உள்ளம் கொண்டார் என்பதனை தொண்டர் உள்ளத் தினைக் கொண்டார் என இயைத்துப் பொருள் கொள்க. பெய் கழல்- அணிந்த வீரக்கழல் (பு. வெ மா.162 உரை). அது ஆகுபெயராய்த் திருவடியை உணர்த்திற்று. பேரின்ப வெள்ளத்திலுள்ள திருவடியை உணர்த்திற்று. பேரின்ப வெள்ளத்திலுள்ள திருவடி என்க. பேணு தல் - வழிபடுதல். இதன்கண் "பரிமேற்கொண்ட பாண்டியனார் பேரின்ப வெள்ளத் துருக்கொண்டு தொண்டரை யுள்ளங் கொண்டார்" என்றதனால் சிவானந்த விளைவு என்னும் பதிகப்பொருள் புலப்படுதல் காண்க. 3 527 செறியும் பிறவிக்கு நல்லவர் செல்லன்மின் தென்னனன்னாட் டிறைவன் கிளர்கின்ற காலமிக் காலமெக் காலத்துள்ளும் அறிவொண் கதிர்வா ளுறைகழித் தானந்த மாக்கடவி எறியும் பிறப்பை யெதிர்ந்தார் புரள இருநிலத்தே.
திருவாசக ஆராய்ச்சியுரை ஏறிவந்த பாண்டிப் பெருமானார் ஓர் இன்ப வெள்ளத்து உரு கொண்டு - ஒப்பற்ற இன்ப வெள்ளமே திருவுருவாகக் கொண்டு எழுந்தருளி வந்து தொண்டரை உள்ளம் கொண்டார் தமது அடியார்களது உள்ளத்தினைக் கவர்ந்து கொண்டார் பேர் இன்ப வெள்ளத்துள் பெய் கழலே சென்று பேணுமின் - பேரின்ப வெள்ளத்துள் உள்ள வீரக் கழல் அணிந்த திருவடிகளைச் சென்றடைந்து அவற்றையே வழிபடுவீராக . 1140 நீங்கள் இறைவனது பேரின்ப வெள்ளத்துள் நீந்திக் குளிக்கவேண் டும் என்று விரும்புகின்ற மனமுடையீராயின் நிலவுலகத்திலுள் ளாரை ஆனந்த வெள்ளமானது மூடிக்கெ ள்ளும்படி பரிமேற் கொண்ட பாண்டிப் பெருமானார் இன்ப வெள்ளமே திருவுருவாகக் கொண்டு எழுந்தருளி வந்து தம் மெய்யடியார்களின் உள்ளங்களைக் கவர்ந்துகொண்டார் . ஆகையால் பேரின்ப வெள்ளத்திலுள்ள திரு வடிகளையே சென்றடைந்து அவற்றையே வழிபடுவீராக என்பதாம் . யின் நீர் நெஞ்சங் கொண்டீர் என்பதற்கு நீர் நெஞ்சங் கொண்டீரா என ஒருசொல் வருவித்து பெய்கழலே சென்று பேணு மின் என்பதனோடு முடிக்க . பார் என்றது நிலவுலகத்திலுள்ளாரைக் குறித்து நின்றது . இன்ப வெள்ளம் கொள்ளல் - இன்ப வெள்ளம் மூடிக் கொள்ளல் . இறைவனைப் பாண்டியனார் என்றது இறைவன் சோமசுந்தர பாண்டியனாய்த் தென்னாடாண்டமை பற்றியாகும் . தொண்டரை உள்ளம் கொண்டார் என்பதனை தொண்டர் உள்ளத் தினைக் கொண்டார் என இயைத்துப் பொருள் கொள்க . பெய் கழல் அணிந்த வீரக்கழல் ( பு . வெ மா .162 உரை ) . அது ஆகுபெயராய்த் திருவடியை உணர்த்திற்று . பேரின்ப வெள்ளத்திலுள்ள திருவடியை உணர்த்திற்று . பேரின்ப வெள்ளத்திலுள்ள திருவடி என்க . பேணு தல் - வழிபடுதல் . இதன்கண் பரிமேற்கொண்ட பாண்டியனார் பேரின்ப வெள்ளத் துருக்கொண்டு தொண்டரை யுள்ளங் கொண்டார் என்றதனால் சிவானந்த விளைவு என்னும் பதிகப்பொருள் புலப்படுதல் காண்க . 3 527 செறியும் பிறவிக்கு நல்லவர் செல்லன்மின் தென்னனன்னாட் டிறைவன் கிளர்கின்ற காலமிக் காலமெக் காலத்துள்ளும் அறிவொண் கதிர்வா ளுறைகழித் தானந்த மாக்கடவி எறியும் பிறப்பை யெதிர்ந்தார் புரள இருநிலத்தே .