திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருப்பாண்டிப்பதிகம் 1143 இறைவனைக் கூறியது இறைவனுக்கும் பாண்டிநாட்டிற்கும் தொடர் பான வரலாறுகள் பலவுளவாதலாலும், இறைவி தடாதகாதேவி யாகவும், இறைவன் சோமசுந்தர பாண்டியனாகவும், குமரவேள் உக் கிர பாண்டியனாசவும் அரசியல் புரிந்தமையாலும் அடிகளுக்கு மிகவும் அருள் செய்தமையாலுமாகும். இதுபற்றியே "தென்னா டுடைய சிவனே போற்றி" "அன்பாண்டு மீளா அருள்புரிவான் நாடென்றும் தென்பாண்டி நாடே தெளி" என அடிகள் அருளியமையும் இதனை வலியுறுத்தும். போற்றி.164 மூலபண்டாரம் வழங்குகின்றான் என்றது திருவைந்தெழுத்து திருவெண்ணீறு திருவுருத்திராக்கம் என்னும் சைவசாதனங்களையும், சாத்தியமாகிய சிவஞானத்தினையும் வரையாது வழங்குகின்றான் என்றவாறு. மூலபண்டாரம் வழங்குதல் முக்காலத்தும் நிகழ்தலின் வழங்குகின்றான் என நிகழ்காலத்தாற் கூறினார். வழங்குகின்றன் என்றார், ஏற்பார்மாட்டொன்றும் பயன் கருதாது கொடுத்தலின், முத்தி வழங்கும் பிரான்' (கோவை 127) என்பதன் உரையில் 'ஏற் பார் மாட்டொன்றுங் கருதாது கொடுத்தலின் வழங்குமென்றார்' எனப் பேராசிரியர் உரைத்தமை காண்க. வந்து முந்துமின் என்றது உலக வாழ்வில் வாழ்நாளைக் கழியாமல் பேரின்ப வாழ்வை விரைந்து வந்து முந்திப் பெற்றுக்கொள்ளுங்கள் என்றவாறு. 529 தசாங்.2 இதன்கண், காதல் செய்துய்மின் வழங்குகின்றான் வந்து முந்து மின் என அடிகள் தமக்குளதாகும் சிவானந்த விளைவினைப் பிறரும் பெற ஏவுமாற்றான் சிவானந்த விளைவு என்னும் பதிகநுதல்ய பொருள் போதருதல் காண்க. ஈண்டிய மாயா விருள்கெட எப்பொரு ளும்விளங்கத் தூண்டிய சோதியை மீனவ னுஞ்சொல்ல வல்லனல்லன் வேண்டிய போதே விலக்கிலை வாய்தல் விரும்புமின்றாள் பாண்டிய னாரருள் செய்கின்ற முத்தீப் பரிசிதுவே. 5 ப-ரை. ஈண்டிய மாயா இருள்கெட - செறிந்த கெடாத ஆணவ இருள் கெட்டுப்போகவும், எப்பொருளும் விளங்க - எல்லாப் பொருள் களும் விளங்கவும், தூண்டிய சோதியை - குதிரையைச் செலுத்தி வந்த ஒளிவடிவினனாகிய இறைவனை, மீனவனும் சொல்ல வல்லன்
திருப்பாண்டிப்பதிகம் 1143 இறைவனைக் கூறியது இறைவனுக்கும் பாண்டிநாட்டிற்கும் தொடர் பான வரலாறுகள் பலவுளவாதலாலும் இறைவி தடாதகாதேவி யாகவும் இறைவன் சோமசுந்தர பாண்டியனாகவும் குமரவேள் உக் கிர பாண்டியனாசவும் அரசியல் புரிந்தமையாலும் அடிகளுக்கு மிகவும் அருள் செய்தமையாலுமாகும் . இதுபற்றியே தென்னா டுடைய சிவனே போற்றி அன்பாண்டு மீளா அருள்புரிவான் நாடென்றும் தென்பாண்டி நாடே தெளி என அடிகள் அருளியமையும் இதனை வலியுறுத்தும் . போற்றி .164 மூலபண்டாரம் வழங்குகின்றான் என்றது திருவைந்தெழுத்து திருவெண்ணீறு திருவுருத்திராக்கம் என்னும் சைவசாதனங்களையும் சாத்தியமாகிய சிவஞானத்தினையும் வரையாது வழங்குகின்றான் என்றவாறு . மூலபண்டாரம் வழங்குதல் முக்காலத்தும் நிகழ்தலின் வழங்குகின்றான் என நிகழ்காலத்தாற் கூறினார் . வழங்குகின்றன் என்றார் ஏற்பார்மாட்டொன்றும் பயன் கருதாது கொடுத்தலின் முத்தி வழங்கும் பிரான் ' ( கோவை 127 ) என்பதன் உரையில் ' ஏற் பார் மாட்டொன்றுங் கருதாது கொடுத்தலின் வழங்குமென்றார் ' எனப் பேராசிரியர் உரைத்தமை காண்க . வந்து முந்துமின் என்றது உலக வாழ்வில் வாழ்நாளைக் கழியாமல் பேரின்ப வாழ்வை விரைந்து வந்து முந்திப் பெற்றுக்கொள்ளுங்கள் என்றவாறு . 529 தசாங் .2 இதன்கண் காதல் செய்துய்மின் வழங்குகின்றான் வந்து முந்து மின் என அடிகள் தமக்குளதாகும் சிவானந்த விளைவினைப் பிறரும் பெற ஏவுமாற்றான் சிவானந்த விளைவு என்னும் பதிகநுதல்ய பொருள் போதருதல் காண்க . ஈண்டிய மாயா விருள்கெட எப்பொரு ளும்விளங்கத் தூண்டிய சோதியை மீனவ னுஞ்சொல்ல வல்லனல்லன் வேண்டிய போதே விலக்கிலை வாய்தல் விரும்புமின்றாள் பாண்டிய னாரருள் செய்கின்ற முத்தீப் பரிசிதுவே . 5 - ரை . ஈண்டிய மாயா இருள்கெட - செறிந்த கெடாத ஆணவ இருள் கெட்டுப்போகவும் எப்பொருளும் விளங்க - எல்லாப் பொருள் களும் விளங்கவும் தூண்டிய சோதியை - குதிரையைச் செலுத்தி வந்த ஒளிவடிவினனாகிய இறைவனை மீனவனும் சொல்ல வல்லன்