திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவெம்பாவை பேர்த்தும் - மீண்டும். பெற்றியன் - தன்மையன்; பெற்றி - தன்மை; '"உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும் பெற்றியார்ப் பேணிக்கொளல்” (திருக்குறள் 442) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. உன்னை, என்றது முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம் பொருளாயும் பின்னைப்புதுமைக்கும் பேர்த்துமப்பெற்றியனாகவுமுள்ள உன்னை என்றவாறு. பிரானாகப் பெறுதலே கிடைத்தற்கரிய பெரும் பேறு என்பது தோன்ற '"உன்னைப் பிரானாகப்பெற்ற" என்றார். இத்தகைய உன்னை யாம் தலைவனாகப் பெற்றமையால் சிறந்த அடி யாராயினோம் என்பார், "சீரடியோம் " என்றும் கூறினர். பெற்ற என்னும் எச்சம் காரணப்பொருட்டு. உமக்கு அடியோமாகப் பெற்றதனால் நின்மெய்யடியாரின் திரு வடியை வணங்கும் பேறுபெற்றே மென்பார், "உன்னடியார் தாள் பணிவோம் " என்றார். அடியார் தாளை வணங்குதலை, திருஞானசம் பந்தமூர்த்தி நாயனார் ஏறிவரும் முத்துச் சிவிகையைத் தாங்குகின் றவர்களோடு தாமும் ஒருவராய்த் திருநாவுக்கரசு நாயனார் தாங்கி வந்தமையும், திருஞானசம்பந்தர் "அப்பர் எங்குற்றார்" என வினவ, அப்பமூர்த்தி, அடியேன் தேவரீரைத் தாங்கிவரும் வாழ்வைப் பெற்று இங்குற்றேன்' என, உடனே பிள்ளையார் சிவிகையினின் றும் இறங்கி அப்பமூர்த்தியை வணங்க, அப்பமூர்த்தியும் தம்மை அவர் வணங்குவதற்குமுன் தாம் அவரை வணங்கியமையும், அது கண்ட அடியாரெல்லாரும் வணங்கியமையுமாகிய செயல்களை, அப்பர்தா மெங்குற்றா ரிப்பொழுது என்றருள் செய்யச் செப்பரிய புகழ்த்திருநா வுக்கரசர் செப்புவா ரொப்பரிய தவஞ்செய்தே னாதலினா லும்மடிக ளிப்பொழுது தாங்கிவரப் பெற்றுய்ந்தேன் யான் என்றார். 519 அவ்வார்த்தை கேட்டஞ்சி யவனியின்மே லிழிந்தருளி இவ்வாறு செய்தருளிற் றென்னாம் என் றிறைஞ்சுதலுஞ் செவ்வாறு மொழிநாவர் திருஞான சம்பத்தாக்க கெவ்வாறு செயத்தகுவ தென்றெதிரே பிறைஞ்சுதலும். சூழ்ந்துமிடைத் தருகணையுந் தெ ாண்டரெல்லா மதுகண்டு தாழ்ந்துநில முறவணங்கி யெழுந்து தலைக் கைகுவித்து வாழ்ந்துமனக் களிப்பினரய் மற்றிவரை வணங்கப்பெற் றாழ்ந்தபிறப் புய்ந்தோம் என்றண்டமெலா முறவார்த்தார். (திருஞான-935 -7) எனப் பெரிய புராணத்து வருவனவற்றாலுமறிக.
திருவெம்பாவை பேர்த்தும் - மீண்டும் . பெற்றியன் - தன்மையன் ; பெற்றி - தன்மை ; ' உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும் பெற்றியார்ப் பேணிக்கொளல் ( திருக்குறள் 442 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . உன்னை என்றது முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம் பொருளாயும் பின்னைப்புதுமைக்கும் பேர்த்துமப்பெற்றியனாகவுமுள்ள உன்னை என்றவாறு . பிரானாகப் பெறுதலே கிடைத்தற்கரிய பெரும் பேறு என்பது தோன்ற ' உன்னைப் பிரானாகப்பெற்ற என்றார் . இத்தகைய உன்னை யாம் தலைவனாகப் பெற்றமையால் சிறந்த அடி யாராயினோம் என்பார் சீரடியோம் என்றும் கூறினர் . பெற்ற என்னும் எச்சம் காரணப்பொருட்டு . உமக்கு அடியோமாகப் பெற்றதனால் நின்மெய்யடியாரின் திரு வடியை வணங்கும் பேறுபெற்றே மென்பார் உன்னடியார் தாள் பணிவோம் என்றார் . அடியார் தாளை வணங்குதலை திருஞானசம் பந்தமூர்த்தி நாயனார் ஏறிவரும் முத்துச் சிவிகையைத் தாங்குகின் றவர்களோடு தாமும் ஒருவராய்த் திருநாவுக்கரசு நாயனார் தாங்கி வந்தமையும் திருஞானசம்பந்தர் அப்பர் எங்குற்றார் என வினவ அப்பமூர்த்தி அடியேன் தேவரீரைத் தாங்கிவரும் வாழ்வைப் பெற்று இங்குற்றேன் ' என உடனே பிள்ளையார் சிவிகையினின் றும் இறங்கி அப்பமூர்த்தியை வணங்க அப்பமூர்த்தியும் தம்மை அவர் வணங்குவதற்குமுன் தாம் அவரை வணங்கியமையும் அது கண்ட அடியாரெல்லாரும் வணங்கியமையுமாகிய செயல்களை அப்பர்தா மெங்குற்றா ரிப்பொழுது என்றருள் செய்யச் செப்பரிய புகழ்த்திருநா வுக்கரசர் செப்புவா ரொப்பரிய தவஞ்செய்தே னாதலினா லும்மடிக ளிப்பொழுது தாங்கிவரப் பெற்றுய்ந்தேன் யான் என்றார் . 519 அவ்வார்த்தை கேட்டஞ்சி யவனியின்மே லிழிந்தருளி இவ்வாறு செய்தருளிற் றென்னாம் என் றிறைஞ்சுதலுஞ் செவ்வாறு மொழிநாவர் திருஞான சம்பத்தாக்க கெவ்வாறு செயத்தகுவ தென்றெதிரே பிறைஞ்சுதலும் . சூழ்ந்துமிடைத் தருகணையுந் தெ ாண்டரெல்லா மதுகண்டு தாழ்ந்துநில முறவணங்கி யெழுந்து தலைக் கைகுவித்து வாழ்ந்துமனக் களிப்பினரய் மற்றிவரை வணங்கப்பெற் றாழ்ந்தபிறப் புய்ந்தோம் என்றண்டமெலா முறவார்த்தார் . ( திருஞான -935 -7 ) எனப் பெரிய புராணத்து வருவனவற்றாலுமறிக .