திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

1146 திருவாசக ஆராய்ச்சியுரை கிய அரிய பெரிய சிறப்பினையுடைய திருவருளையே கொடுத்தருளு வான்; பெரிய வீடுபேற்றுக் கொடையையுடைய பாண்டிப் பிரானது திருவடிகளையே சென்று சேர்வீர்களாக என்பதாம். இறைவன் ஏறிவந்த குதிரை உலகிலுள்ள குதிரை போலாகாது இறைவனது மாயா சாமர்த்தியத்தால் உளதாயதாகலின் மாய் வனப்பரி' என்றார். மற்றவர் என்றது பிறரை; என்றது இறைவன் குதிரையைக் கொணருங்கால் அத்திருக் கோலத்தைத் தரிசித் தோரை. கைக் மற்றவரை கொள்ளல் - தன்வசப்படுத்துதல். பகைகளை பிறப்பென்னும் காரணமாக உபசரித்தவாறு. 'பிறப்பென்னும் பேதைமை நீங்க' (குறள் 358) என்புழியும் இவ்வாறு வருதல் காண்க. பகைகள் காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாற்சரியம் என்னும் ஆறு மாம். இவற்றை வடநூலார் ஹரிஷட் வர்க்கம் என்பர். இவை பிற விக்குக் காரணமாயினும் இவற்றிற்கும் காரணமாக ஆணவ முத் லிய மும்மலங்களும் உள்ளன என அறிக. கைக்கொளலும் பகைகள் போயறும் என முடிக்க. போயறும் - விட்டு நீங்கும். ஆய என்பதன் ஆற்றலால் வீடு பேற்றிற்குச் சாதனமாய எனப் பொருளுரைக்கப் பட்டது. அருளும் - அருளுவான். செய்யுமென்னும் முற்று; அருளும் ஆதலால் என ஒரு சொல் வருவிக்க. செய்ய நெடுங்கொடை என் பது எதுகை நோக்கிச் சேய நெடுங்கொடை எனத் திரிந்தது சேவடி சேர்மின் - இறைவன் அருளும் அருளையே துணையாகக்கொண்டு சிவந்த திருவடிகளையே சென்று சேருங்கள்; என இரண்டாவது பிறப்புக்குக் பகையென்றது விரிக்க. காரணமாகிய காரியத்தைக் இதன்கண் ''தென்னவன் பரிமேல் கொண்டு கைக்கொளலும் பகைகள் போயறும் புகுந்தவருக்குத் தன்னருளே அருளும்" என்ப வற்றால் சிவானந்த விளைவு என்னும் பதிகப் பொருள் புலப்படும். 7 531 அழிவின்றி நின்றதொ ரானந்த வெள்ளத் திடை யழுத்திக் கழிவில் கருணையைக் காட்டிக் கடிய வினையகற்றிப் பழமலம் பற்றறுத் தாண்டவன் பாண்டிப் பெரும்பதமே முழுதுல குந்தரு வான்கொடை யேசென்று முந்துமினே. ப -ரை : அழிவு இன்றி நின்றது ஓர் ஆனந்த வெள்ளத்திடை அழுத்தி - ஒருகாலத்தும் அழிவில்லாது நிலைபெற்ற ஒப்பற்ற பேரா னந்த வெள்ளத்தின்கண் முழுகும்படி செய்து, கழிவு இல் கருணையை காட்டி - நீங்குதலில்லாத தன் திருவருளைத் தந்து, கடிய வினை
1146 திருவாசக ஆராய்ச்சியுரை கிய அரிய பெரிய சிறப்பினையுடைய திருவருளையே கொடுத்தருளு வான் ; பெரிய வீடுபேற்றுக் கொடையையுடைய பாண்டிப் பிரானது திருவடிகளையே சென்று சேர்வீர்களாக என்பதாம் . இறைவன் ஏறிவந்த குதிரை உலகிலுள்ள குதிரை போலாகாது இறைவனது மாயா சாமர்த்தியத்தால் உளதாயதாகலின் மாய் வனப்பரி ' என்றார் . மற்றவர் என்றது பிறரை ; என்றது இறைவன் குதிரையைக் கொணருங்கால் அத்திருக் கோலத்தைத் தரிசித் தோரை . கைக் மற்றவரை கொள்ளல் - தன்வசப்படுத்துதல் . பகைகளை பிறப்பென்னும் காரணமாக உபசரித்தவாறு . ' பிறப்பென்னும் பேதைமை நீங்க ' ( குறள் 358 ) என்புழியும் இவ்வாறு வருதல் காண்க . பகைகள் காமம் குரோதம் லோபம் மோகம் மதம் மாற்சரியம் என்னும் ஆறு மாம் . இவற்றை வடநூலார் ஹரிஷட் வர்க்கம் என்பர் . இவை பிற விக்குக் காரணமாயினும் இவற்றிற்கும் காரணமாக ஆணவ முத் லிய மும்மலங்களும் உள்ளன என அறிக . கைக்கொளலும் பகைகள் போயறும் என முடிக்க . போயறும் - விட்டு நீங்கும் . ஆய என்பதன் ஆற்றலால் வீடு பேற்றிற்குச் சாதனமாய எனப் பொருளுரைக்கப் பட்டது . அருளும் - அருளுவான் . செய்யுமென்னும் முற்று ; அருளும் ஆதலால் என ஒரு சொல் வருவிக்க . செய்ய நெடுங்கொடை என் பது எதுகை நோக்கிச் சேய நெடுங்கொடை எனத் திரிந்தது சேவடி சேர்மின் - இறைவன் அருளும் அருளையே துணையாகக்கொண்டு சிவந்த திருவடிகளையே சென்று சேருங்கள் ; என இரண்டாவது பிறப்புக்குக் பகையென்றது விரிக்க . காரணமாகிய காரியத்தைக் இதன்கண் ' ' தென்னவன் பரிமேல் கொண்டு கைக்கொளலும் பகைகள் போயறும் புகுந்தவருக்குத் தன்னருளே அருளும் என்ப வற்றால் சிவானந்த விளைவு என்னும் பதிகப் பொருள் புலப்படும் . 7 531 அழிவின்றி நின்றதொ ரானந்த வெள்ளத் திடை யழுத்திக் கழிவில் கருணையைக் காட்டிக் கடிய வினையகற்றிப் பழமலம் பற்றறுத் தாண்டவன் பாண்டிப் பெரும்பதமே முழுதுல குந்தரு வான்கொடை யேசென்று முந்துமினே . -ரை : அழிவு இன்றி நின்றது ஓர் ஆனந்த வெள்ளத்திடை அழுத்தி - ஒருகாலத்தும் அழிவில்லாது நிலைபெற்ற ஒப்பற்ற பேரா னந்த வெள்ளத்தின்கண் முழுகும்படி செய்து கழிவு இல் கருணையை காட்டி - நீங்குதலில்லாத தன் திருவருளைத் தந்து கடிய வினை