திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

1150 திருவாசக ஆராய்ச்சியுரை அழகால் வீற்றிருந்தான் - தானும் தனது பெருந்தேவியாகிய உமை யம்மையுமாக அழகினொடு வீற்றிருந்த இறைவனே, ஓர் மீனவன் பால் - ஒப்பற்ற பாண்டியனிடத்து, ஏற்று வந்து - எதிர்ப்பட்டு வந்து, ஆர் உயிர் உண்ட திறல் ஒற்றை சேவகன் - அப்பாண்டியனது அரிய உயிரின் தற்போதத்தினைத் தன்னுட்கொண்டு சிவபோதத்தினை நல் கிய வலியினையுடைய ஒப்பற்ற வீரனுமாயினான், தேற்றம் இலாதவர்- அதனைத் தெளிந்து அறியமாட்டாதவர்களே, சே அடி சிக்கென சேர் மின்கள் - அவனைத் தெளியும்பொருட்டுச் செவ்விய திருவடிகளையே உறுதியாக அடைந்து பற்றுங்கள். கூற்றுவனை வென்று ஐம்பொறிகளையும் வென்று தானும் பெருந் தேவியுமாக அழகினோடு வீற்றிருந்த இறைவனே ஒப்பற்ற பாண்டிய னிடத்தில் எதிர்ப்பட்டு வந்து அவன் உயிரியல்பினை ஏற்றுக்கொண்ட வலியினையுடைய ஒப்பற்ற வீரனுமாயினான். அதனைத் தெளிந்தறிய மாட்டாதவர்கள் அவனது திருவடிகளையே உறுதியாக அடைந்து பற்றுங்கள் என்பதாம். கூற்றை வென்றது மார்க்கண்டேயர் பொருட்டு. "அடியடைந்த மாணிக்காக நணுகியதோர் பெருங்கூற்றைச் சேவடியால் செற்றவன் காண்" "அந்தணனாரைக் கொல்வான், சாற்றுநாள் அற்றதென்று 21-9 தருமராசற்காய் வந்த கூற்றினைக்குமைப்பர் போலும்" 49-2 "மார்க்கண்டற்காக அன்று காலனை உதைப்பர்போலும்" என அப்பர் கூறுதலுங் காண்க ஆங்கு - அப்படியே "ஆங்கதையறிந் தனி ராயின்' (கலி. 133-15) என்பது காண்க. ஐம்பொறிகளை ஐந்து அரசர்களாகக் கூறியது அப்பொறிகளைந்தும் உயிரினை அடிமையாக்கித் தாம் வேண்டியவாறு விடயங்களிற் சென்று உயிரினை ஆளுதல் பற்றி யாகும். வென்று என்றது பொறிகளைப் புலன்கண்மேற் செல்லாமற் காத்து என்றவாறு. இறைவன் இயல்பாகவே ஐந்தவித்தானாகலின் ஐவர் கோக்களையும் லென்று என்றார். இறைவன் ஐந்தையும் வென் றமை, "புலன்கள் வென்றவன் எம்மிறைவன்” ''ஐந்து, புலனீர்மை புறங்கண்டார்" "வென்றவன் புலனைந்தும்' "அஞ்சொண் புலனுமவை செற்ற, மஞ்சன்'' "அஞ்சுகொலாமவர் வெல் புலனாவன" வெலவலான் புலன் ஐந்தொடு" வென்றானைப் புலன் ஐந்தும்'" "புலன்களைந்தும் வென்றானை" 298-6 319-7 ஞான. ஞான.191-6 ஞான. 113-10 ஞான.38-4 நாவு. 18-5 நாவு.132-2 நாவு. 211-7 நாவு. 203-3
1150 திருவாசக ஆராய்ச்சியுரை அழகால் வீற்றிருந்தான் - தானும் தனது பெருந்தேவியாகிய உமை யம்மையுமாக அழகினொடு வீற்றிருந்த இறைவனே ஓர் மீனவன் பால் - ஒப்பற்ற பாண்டியனிடத்து ஏற்று வந்து - எதிர்ப்பட்டு வந்து ஆர் உயிர் உண்ட திறல் ஒற்றை சேவகன் - அப்பாண்டியனது அரிய உயிரின் தற்போதத்தினைத் தன்னுட்கொண்டு சிவபோதத்தினை நல் கிய வலியினையுடைய ஒப்பற்ற வீரனுமாயினான் தேற்றம் இலாதவர் அதனைத் தெளிந்து அறியமாட்டாதவர்களே சே அடி சிக்கென சேர் மின்கள் - அவனைத் தெளியும்பொருட்டுச் செவ்விய திருவடிகளையே உறுதியாக அடைந்து பற்றுங்கள் . கூற்றுவனை வென்று ஐம்பொறிகளையும் வென்று தானும் பெருந் தேவியுமாக அழகினோடு வீற்றிருந்த இறைவனே ஒப்பற்ற பாண்டிய னிடத்தில் எதிர்ப்பட்டு வந்து அவன் உயிரியல்பினை ஏற்றுக்கொண்ட வலியினையுடைய ஒப்பற்ற வீரனுமாயினான் . அதனைத் தெளிந்தறிய மாட்டாதவர்கள் அவனது திருவடிகளையே உறுதியாக அடைந்து பற்றுங்கள் என்பதாம் . கூற்றை வென்றது மார்க்கண்டேயர் பொருட்டு . அடியடைந்த மாணிக்காக நணுகியதோர் பெருங்கூற்றைச் சேவடியால் செற்றவன் காண் அந்தணனாரைக் கொல்வான் சாற்றுநாள் அற்றதென்று 21-9 தருமராசற்காய் வந்த கூற்றினைக்குமைப்பர் போலும் 49-2 மார்க்கண்டற்காக அன்று காலனை உதைப்பர்போலும் என அப்பர் கூறுதலுங் காண்க ஆங்கு - அப்படியே ஆங்கதையறிந் தனி ராயின் ' ( கலி . 133-15 ) என்பது காண்க . ஐம்பொறிகளை ஐந்து அரசர்களாகக் கூறியது அப்பொறிகளைந்தும் உயிரினை அடிமையாக்கித் தாம் வேண்டியவாறு விடயங்களிற் சென்று உயிரினை ஆளுதல் பற்றி யாகும் . வென்று என்றது பொறிகளைப் புலன்கண்மேற் செல்லாமற் காத்து என்றவாறு . இறைவன் இயல்பாகவே ஐந்தவித்தானாகலின் ஐவர் கோக்களையும் லென்று என்றார் . இறைவன் ஐந்தையும் வென் றமை புலன்கள் வென்றவன் எம்மிறைவன் ' ' ஐந்து புலனீர்மை புறங்கண்டார் வென்றவன் புலனைந்தும் ' அஞ்சொண் புலனுமவை செற்ற மஞ்சன் ' ' அஞ்சுகொலாமவர் வெல் புலனாவன வெலவலான் புலன் ஐந்தொடு வென்றானைப் புலன் ஐந்தும் ' புலன்களைந்தும் வென்றானை 298-6 319-7 ஞான . ஞான.191-6 ஞான . 113-10 ஞான.38-4 நாவு . 18-5 நாவு.132-2 நாவு . 211-7 நாவு . 203-3