திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

37. பிடித்த பத்து முத்திக்கலப்புரைத்தல் திருத்தோணிபுரத்தில் அருளிச் செய்யப்பட்டது பிடித்தபத்து திருத்தோணிபுரத்தில் அருளிச் செய்யப்பட்டது எனக் கூறப்பட்டுள்ளது. அது திருத்தோணிபுரத்தில் பாடப்பட்டது என்பதற்கு அசுச் சான்று அப்பதிகத்துள் எப்பகுதியிலும் குறிக் கப்படவில்லை. ஆயினும் அடிகள் வரலாறு கூறும் திருவாதவூரடிகள் புராணத்தில், "சென்றுயர் கயிலையான செய்திகண் டிறைஞ்சு மெல்லை மன்றிடை நடித்தபாத மலரடி பிடித்துக் கொண்டு பின்றிகழ் சடையோன் முன்னர்ப் பிடித்தபத் தருளிச் செய்தார்" எனக் கூறப்பட்டுள்ளது. இதுவே பிடித்தபத்து திருத்தோணி புரத் தில் அருளிச் செய்யப்பட்டது என்பதற்கு ஆதாரமாகவுள்ளது. இன்னும் நம்பி திருவிளையாடல் பரஞ்சோதி திருவிளையாடல்களி லும் வருவன அறியலாம். இதன் உள்ளுறை முத்திக்கலப்புரைத்தல். இதன் பொருளை, "மிக்கபிற வித்துயரெ லாமொழிந்து விபுத்துவமிங் களித்த லாலே சிக்கறச்சிக் கெனப்பிடித்தே னின்னையென்று துணிவு செப்பல் பிடித்த பத்தாம்" எனக் கூறுவனவற்றாலும் காண்க. (விபுத்துவம் - மேலான தன்மை) பிறவித் துன்பத்தை ஒழித்து மேலான தன்மையைத் தருதலால் நின்னைச் சிக்கெனப் பிடித்தேன் என்பது இதன் பொருள். எனவே முத்திக்கலப்புரைத்தல் என்பது புலப்படுமாறு காண்க. இது எழுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம் என்னும் செய்யுள் வகையால் இயன்றது. எழுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம் 534 உம்பர்கட் கரசே யொழிவற நிறைந்த யோகமே ஊற்றையேன் றனக்கு வம்பெனப் பழுத்தென் குடிமுழு தாண்டு வாழ்வற வார்வித்த மருந்தே செம்பொருட் டுணிவே சீருடைக் கழலே செல்வமே சிவபெரு மானே எம்பொருட் டுன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே.
37. பிடித்த பத்து முத்திக்கலப்புரைத்தல் திருத்தோணிபுரத்தில் அருளிச் செய்யப்பட்டது பிடித்தபத்து திருத்தோணிபுரத்தில் அருளிச் செய்யப்பட்டது எனக் கூறப்பட்டுள்ளது . அது திருத்தோணிபுரத்தில் பாடப்பட்டது என்பதற்கு அசுச் சான்று அப்பதிகத்துள் எப்பகுதியிலும் குறிக் கப்படவில்லை . ஆயினும் அடிகள் வரலாறு கூறும் திருவாதவூரடிகள் புராணத்தில் சென்றுயர் கயிலையான செய்திகண் டிறைஞ்சு மெல்லை மன்றிடை நடித்தபாத மலரடி பிடித்துக் கொண்டு பின்றிகழ் சடையோன் முன்னர்ப் பிடித்தபத் தருளிச் செய்தார் எனக் கூறப்பட்டுள்ளது . இதுவே பிடித்தபத்து திருத்தோணி புரத் தில் அருளிச் செய்யப்பட்டது என்பதற்கு ஆதாரமாகவுள்ளது . இன்னும் நம்பி திருவிளையாடல் பரஞ்சோதி திருவிளையாடல்களி லும் வருவன அறியலாம் . இதன் உள்ளுறை முத்திக்கலப்புரைத்தல் . இதன் பொருளை மிக்கபிற வித்துயரெ லாமொழிந்து விபுத்துவமிங் களித்த லாலே சிக்கறச்சிக் கெனப்பிடித்தே னின்னையென்று துணிவு செப்பல் பிடித்த பத்தாம் எனக் கூறுவனவற்றாலும் காண்க . ( விபுத்துவம் - மேலான தன்மை ) பிறவித் துன்பத்தை ஒழித்து மேலான தன்மையைத் தருதலால் நின்னைச் சிக்கெனப் பிடித்தேன் என்பது இதன் பொருள் . எனவே முத்திக்கலப்புரைத்தல் என்பது புலப்படுமாறு காண்க . இது எழுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம் என்னும் செய்யுள் வகையால் இயன்றது . எழுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம் 534 உம்பர்கட் கரசே யொழிவற நிறைந்த யோகமே ஊற்றையேன் றனக்கு வம்பெனப் பழுத்தென் குடிமுழு தாண்டு வாழ்வற வார்வித்த மருந்தே செம்பொருட் டுணிவே சீருடைக் கழலே செல்வமே சிவபெரு மானே எம்பொருட் டுன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே .