திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

பிடித்தபத்து 1155 முடைய உடம்பினை விடமாட்டாது முழுவதும் புழுக்களையுடைய இவ் வுடம்பாகிய கூட்டின்கட் கிடந்து முதிர்ச்சியடைந்து, அற மண்ணாய் கடை படா வண்ணம் - முழுவதும் பயனின்றிக் கீழ்மைப்படா வண் ணம். எனை காத்து ஆண்ட கடவுளே - என்னைப் பாதுகாத்து ஆட் கொண்ட தெய்வமே, கருணை மா கடலே - அருட்பெருங் கடலே. இடைவிடாது உன்னை சிக்கென பிடித்தேன் - இடையறாமல் உன்னை உறுதியாகப் பற்றியுள்ளேன், இனி எங்கெழுந்தருள்வது - இனி நீ என்னை விட்டு எங்குச் செல்வது? eft விடையை விடாது உகந்து வாகனமாகக் கொண்ட விண்ணவர் கோவே. தீவினையேனுக்குக் கிடைத்த மெய்ப்பொருளாயுள்ளவனே அடியேன் முடை நாற்றமுடைய உடம்பினை விட மாட்டாது முழுவ தும் புழுக்களையுடைய இவ்வுடம்பாகிய குரம்பையிற் கிடந்து மூத்து அறமண்ணாய்க் கடைப்படாவண்ணம் என்னைக் காத்து ஆண்ட கட வுளே, கருணைமாகடலே, இடைவிடாது உன்னைச் சிக்கெனப் பிடித் தேன்; இனி நீ எங்கு எழுந்தருள்வது என்பதாம். CRE முப்புரமெரித்தற் பொருட்டு விண்ணவர் அமைத்த தேரின் அச்சு முறிந்த சாலத்தில் திருமால் எருத்துவாகனமாக இறைவனைத் தாங்க விரும்பிய போது அதனை நீக்காது விரும்பி வாகனமாக தேவர் தலைவ னாகிய இறைவன் ஏற்றுக்கொண்டமையின் 'விடை விடா துகந்த விண்ணவர் கோவே' என்றார். இதனை, "கடகரியும் பரிமாவும் தேருமுகந் தேறாதே இடபமுகந் தேறியவா றெனக்கறிய இயம்பேடீ தடமதில்க ளவைமூன்றுந் தழலெரித்த அந்நாளில் இடபமதாய்த் தாங்கினான் திருமால்காண் சாழலோ" (சாழல் 15) என் அடிகள் அருளியவாற்றானும் தெளிக தீவினையேனாயினும் நினதரு ளால் உன்னை எனக்குத் தந்தனையாதலின் "வினையனேனுடைய மெய்ப் பொருளே" என்றார். 'மாலமுதப் பெருங்கடலே மலையே யுன்னைத், தந்தனை" சத.26 "தந்ததுன் றன்னைக் கொண்டதென் றன்னை” "தன்னைத் தந்த வென்னாரமுதை” கோயிற்.10 புணர்ச்சிப். 1 என டிகள் இறைவன் தன்னைத் தந்தமையை அருளியவாறுங் காண்க. முடை - புலால் நாற்றமுடைய உடம்பிற்கு ஆகுபெயர். விடாது - விடமாட்டாது. முழுப்புழுக் குரம்பை - முழுவதும் புழுவை யுடைய கூடாகிய இவ்வுடம்பு. அற மண்ணாய் - முழுவதும் பயனின்றி என்றது சிறிதும் பயனில்லாமல் என்றபடி. அற - முழுவதும்; ''அறவே நின்னைச் சேர்ந்த அடியார்" (சத.86) என வருவது காண்க. இடையீடு படாமல் எப்பொழுதும் இறைவனை உள்ளத்தில் தியானித்தல் நிகழ்ந்து கொண்டிருத்தலின் "இடைவிடாது உன்னைப் பிடித்தேன்" என்றார்.
பிடித்தபத்து 1155 முடைய உடம்பினை விடமாட்டாது முழுவதும் புழுக்களையுடைய இவ் வுடம்பாகிய கூட்டின்கட் கிடந்து முதிர்ச்சியடைந்து அற மண்ணாய் கடை படா வண்ணம் - முழுவதும் பயனின்றிக் கீழ்மைப்படா வண் ணம் . எனை காத்து ஆண்ட கடவுளே - என்னைப் பாதுகாத்து ஆட் கொண்ட தெய்வமே கருணை மா கடலே - அருட்பெருங் கடலே . இடைவிடாது உன்னை சிக்கென பிடித்தேன் - இடையறாமல் உன்னை உறுதியாகப் பற்றியுள்ளேன் இனி எங்கெழுந்தருள்வது - இனி நீ என்னை விட்டு எங்குச் செல்வது ? eft விடையை விடாது உகந்து வாகனமாகக் கொண்ட விண்ணவர் கோவே . தீவினையேனுக்குக் கிடைத்த மெய்ப்பொருளாயுள்ளவனே அடியேன் முடை நாற்றமுடைய உடம்பினை விட மாட்டாது முழுவ தும் புழுக்களையுடைய இவ்வுடம்பாகிய குரம்பையிற் கிடந்து மூத்து அறமண்ணாய்க் கடைப்படாவண்ணம் என்னைக் காத்து ஆண்ட கட வுளே கருணைமாகடலே இடைவிடாது உன்னைச் சிக்கெனப் பிடித் தேன் ; இனி நீ எங்கு எழுந்தருள்வது என்பதாம் . CRE முப்புரமெரித்தற் பொருட்டு விண்ணவர் அமைத்த தேரின் அச்சு முறிந்த சாலத்தில் திருமால் எருத்துவாகனமாக இறைவனைத் தாங்க விரும்பிய போது அதனை நீக்காது விரும்பி வாகனமாக தேவர் தலைவ னாகிய இறைவன் ஏற்றுக்கொண்டமையின் ' விடை விடா துகந்த விண்ணவர் கோவே ' என்றார் . இதனை கடகரியும் பரிமாவும் தேருமுகந் தேறாதே இடபமுகந் தேறியவா றெனக்கறிய இயம்பேடீ தடமதில்க ளவைமூன்றுந் தழலெரித்த அந்நாளில் இடபமதாய்த் தாங்கினான் திருமால்காண் சாழலோ ( சாழல் 15 ) என் அடிகள் அருளியவாற்றானும் தெளிக தீவினையேனாயினும் நினதரு ளால் உன்னை எனக்குத் தந்தனையாதலின் வினையனேனுடைய மெய்ப் பொருளே என்றார் . ' மாலமுதப் பெருங்கடலே மலையே யுன்னைத் தந்தனை சத .26 தந்ததுன் றன்னைக் கொண்டதென் றன்னை தன்னைத் தந்த வென்னாரமுதை கோயிற் .10 புணர்ச்சிப் . 1 என டிகள் இறைவன் தன்னைத் தந்தமையை அருளியவாறுங் காண்க . முடை - புலால் நாற்றமுடைய உடம்பிற்கு ஆகுபெயர் . விடாது - விடமாட்டாது . முழுப்புழுக் குரம்பை - முழுவதும் புழுவை யுடைய கூடாகிய இவ்வுடம்பு . அற மண்ணாய் - முழுவதும் பயனின்றி என்றது சிறிதும் பயனில்லாமல் என்றபடி . அற - முழுவதும் ; ' ' அறவே நின்னைச் சேர்ந்த அடியார் ( சத .86 ) என வருவது காண்க . இடையீடு படாமல் எப்பொழுதும் இறைவனை உள்ளத்தில் தியானித்தல் நிகழ்ந்து கொண்டிருத்தலின் இடைவிடாது உன்னைப் பிடித்தேன் என்றார் .