திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை இதன் கண் 'இடைவிடாதுன்னைச் சிக்கெனப் பிடித்தேன்" என் பதனால் முத்திக்கலப்புரைத்தல் என்னும் பதிகப்பொருள் புலப்படுமாறு காண்க. 1156 536 அம்மையே யப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்தவா ரமுதே பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் றனக்குச் செம்மையே பாய சிவபதம் அளித்த 2 செல்வமே சிவபெரு மானே இம்மையே யுன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. wud vote 1. ப-ரை. அம்மையே - தாயே, அப்பா - தந்தையே, ஒப்பு இல்லா மணியே - உவமை இல்லாத மாணிக்க மணியே, அன்பினில் விளைந்த ஆர் அமுதே - மெய்யன்பாகிய பாற்கடலில் உண்டாகிய கிடைத்தற் கரிய அமுதமே, பொழுதினை பொய்ம்மையே பெருக்கி சுருக்கும் - எனது வாழ்நாளினை நிலையற்ற பொருள்களைத் தேடும் நெறியில் சுருக் கிக் கொள்ளும், புழு தல புலையனேன் தனக்கு புழுவுக்கிடமான புலால் பொருந்திய உடம்பையுடைய எனக்கு, செம்மையே ய சிவ பதம் அளித்த செல்வமே - மிகவும் செவ்விதாகிய சிவமாந்தன்மைப் பெருவாழ்வு அளித்த நிலைபெற்ற வீட்டுச்செல்வத்தையுடையவனே, சிவபெருமானே - சிவபெருமானே, இம்மையே உன்னை சிக்கெனப் பிடித்தேன் - இப்பிறப்பில் உன்னை உறுதியாகப் பற்றினேன், இனி எங்கு எழுந்தருளுவது - இனி நீ என்னை விட்டு எங்குச் செல்வது? anapoule t அம்மையே, அப்பா, ஒப்பில்லாத மாணிக்கமணியே, அன்பாகிய சடலில் விளைந்த அரிய அமுதமே எனது வாழ்நாளை நிலையற்ற பொருள்களைத் தேடுவதில் பெருகச் செலவிட்டு, மெய்ப்பொருளாகிய நின்னை அடையும் நெறியிற் சுருக்கிக் கொள்ளும் புழுவுக்கிடமான புலாலுடம்பை உடையேனுக்குச் செம்மையேயாய சிவபதம் அளித்த செல்வமே, சிவபெருமானே, இப்பிறப்பில் உன்னை உறுதியாகப்பற்றி யுள்ளேன்; இனி நீ எங்கு எழுந்தருள்வது என்பதாம். TA விளைந்த அமுதே என்றதனால் அன்பினில் என்பதற்கு அன்பாகிய பாற்கடலில் என உரைக்கப்பட்டது. பொழுதினைப் பொய்ம்மையே பெருக்கிச் சுருக்கும் எனக் கூட்டிப் பொருள் கொள்க. பொழுது என் பது பால் வரை தெய்வத்தினால் வரையறுக்கப்பட்ட வாழ்நாளை. பொய்ம்மையே பெருக்கி என்றது நிலையற்ற பொருள்களைத் தேடும் நெறியில் பெருகச் செலவிட்டு என்பதாம். பொய்ம்மையாலே போது போக்கி" (சுந். 5-7) எனவும் காண்க. பொய்ம்மை பெருக்கி என்னும்
திருவாசக ஆராய்ச்சியுரை இதன் கண் ' இடைவிடாதுன்னைச் சிக்கெனப் பிடித்தேன் என் பதனால் முத்திக்கலப்புரைத்தல் என்னும் பதிகப்பொருள் புலப்படுமாறு காண்க . 1156 536 அம்மையே யப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்தவா ரமுதே பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் றனக்குச் செம்மையே பாய சிவபதம் அளித்த 2 செல்வமே சிவபெரு மானே இம்மையே யுன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே . wud vote 1 . - ரை . அம்மையே - தாயே அப்பா - தந்தையே ஒப்பு இல்லா மணியே - உவமை இல்லாத மாணிக்க மணியே அன்பினில் விளைந்த ஆர் அமுதே - மெய்யன்பாகிய பாற்கடலில் உண்டாகிய கிடைத்தற் கரிய அமுதமே பொழுதினை பொய்ம்மையே பெருக்கி சுருக்கும் - எனது வாழ்நாளினை நிலையற்ற பொருள்களைத் தேடும் நெறியில் சுருக் கிக் கொள்ளும் புழு தல புலையனேன் தனக்கு புழுவுக்கிடமான புலால் பொருந்திய உடம்பையுடைய எனக்கு செம்மையே சிவ பதம் அளித்த செல்வமே - மிகவும் செவ்விதாகிய சிவமாந்தன்மைப் பெருவாழ்வு அளித்த நிலைபெற்ற வீட்டுச்செல்வத்தையுடையவனே சிவபெருமானே - சிவபெருமானே இம்மையே உன்னை சிக்கெனப் பிடித்தேன் - இப்பிறப்பில் உன்னை உறுதியாகப் பற்றினேன் இனி எங்கு எழுந்தருளுவது - இனி நீ என்னை விட்டு எங்குச் செல்வது ? anapoule t அம்மையே அப்பா ஒப்பில்லாத மாணிக்கமணியே அன்பாகிய சடலில் விளைந்த அரிய அமுதமே எனது வாழ்நாளை நிலையற்ற பொருள்களைத் தேடுவதில் பெருகச் செலவிட்டு மெய்ப்பொருளாகிய நின்னை அடையும் நெறியிற் சுருக்கிக் கொள்ளும் புழுவுக்கிடமான புலாலுடம்பை உடையேனுக்குச் செம்மையேயாய சிவபதம் அளித்த செல்வமே சிவபெருமானே இப்பிறப்பில் உன்னை உறுதியாகப்பற்றி யுள்ளேன் ; இனி நீ எங்கு எழுந்தருள்வது என்பதாம் . TA விளைந்த அமுதே என்றதனால் அன்பினில் என்பதற்கு அன்பாகிய பாற்கடலில் என உரைக்கப்பட்டது . பொழுதினைப் பொய்ம்மையே பெருக்கிச் சுருக்கும் எனக் கூட்டிப் பொருள் கொள்க . பொழுது என் பது பால் வரை தெய்வத்தினால் வரையறுக்கப்பட்ட வாழ்நாளை . பொய்ம்மையே பெருக்கி என்றது நிலையற்ற பொருள்களைத் தேடும் நெறியில் பெருகச் செலவிட்டு என்பதாம் . பொய்ம்மையாலே போது போக்கி ( சுந் . 5-7 ) எனவும் காண்க . பொய்ம்மை பெருக்கி என்னும்