திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

பிடித்தபத்து trap ஆற்றலால் மெய்ம்மை என்பது வருவிக்கப்பட்டது. புழுத்தலைப் புலை -புழுவுக்கிடமாகிய புலால் உடம்பு. தலை - இடம். புலையனேன் றனக்கு - புலால் உடம்பையுடையேனுக்கு. சிவபதம்- சிவமாந் தன்மைப் பெருவாழ்வு. இம்மை - இப்பிறப்பு. இதன் கண் 'இம்மையே யுன்னைச் சிக்கெனப் பிடித்தேன்" என்ப தனால் முத்திக்கலப்புரைத்தல் என்னும் பதிகப் பொருள் புலப்படுமாறு காண்க. 537 அருளுடைச் சுடரே அளிந்ததோர் கனியே பெருந்திறல் அருந்தவர்க் கரசே பொருளுடைக் கலையே புகழ்ச்சியைக் கடந்த போகமே யோகத்தின் பொலிவே தெருளிடத் தடியார் சிந்தையுட் புகுந்த செல்வமே சிவபெரு மானே இருளிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. 1157 . 3 ப-ரை. அருள் உடை கூடரே - இரங்கி அருளுதலையுடைய ஒளியே, அளிந்தது ஓர் கனியே மிக்க கனிந்ததாகிய ஒப்பற்ற கனி போன்றவனே, பெரு திறல் அரு தவர்க்கு அரசே - பேராற்றலை யுடைய செய்தற்கரிய தவத்தினையுடையவர்க்கு அரசனே, பொருள் உடை கலையே - மெய்ப்பொருள்களையுடைய கலை வடிவினனே, புகழ்ச்சியை கடந்த போகமே - புகழ்ந்து சொல்லுதற்கு அடங்காத அனுபவமாக உள்ளவனே, யோகத்தின் பொலிவே - யோகநிலையின் விளக்கமாக உள்ளவனே, தெருளிடத்து அடியார் சிந்தையுள் புகுந்த செல்வமே - தெளிந்த அறிவுண்டாயபோது அடியார் உள்ளத்து விளங் கித் தோன்றுகின்ற செல்வமாக உள்ளவனே, சிவபெருமானே - சிவ பெருமானே, இருள் இடத்து உன்னை சிக்கென பிடித்தேன் - இருளை யுடைய நடு இரவின் கண் உன்னை உறுதியாகப் பற்றினேன்,இனி எங்கு எழுந்தருளுவது -இனி நீ என்னை விட்டு எங்கு எழுந்தருள்வது? இரங்கி அருளுதலையுடைய ஒளியே, மிக்க கனிந்ததாகிய ஒப்பற்ற கனியே, பெருந்திறலையுடைய அருந்தவர்க்கு அரசனே, மெய்ப் பொருள்களையுடைய கலைவடிவினனே, புகழ்ச்சியைக் கடந்த அனுபவ மாயுள்ளவனே, யோகத்தின் பொலிவே, தெளிந்த அறிவுண்டாய போது அடியார் சிந்தையுள் புகுந்த செல்வமே. சிவபெருமானே. இருளையுடைய நடு இரவின்கண் உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; இனி நீ என்னை விட்டு எங்கு எழுந்தருள்வது என்பதாம்.
பிடித்தபத்து trap ஆற்றலால் மெய்ம்மை என்பது வருவிக்கப்பட்டது . புழுத்தலைப் புலை -புழுவுக்கிடமாகிய புலால் உடம்பு . தலை - இடம் . புலையனேன் றனக்கு - புலால் உடம்பையுடையேனுக்கு . சிவபதம்- சிவமாந் தன்மைப் பெருவாழ்வு . இம்மை - இப்பிறப்பு . இதன் கண் ' இம்மையே யுன்னைச் சிக்கெனப் பிடித்தேன் என்ப தனால் முத்திக்கலப்புரைத்தல் என்னும் பதிகப் பொருள் புலப்படுமாறு காண்க . 537 அருளுடைச் சுடரே அளிந்ததோர் கனியே பெருந்திறல் அருந்தவர்க் கரசே பொருளுடைக் கலையே புகழ்ச்சியைக் கடந்த போகமே யோகத்தின் பொலிவே தெருளிடத் தடியார் சிந்தையுட் புகுந்த செல்வமே சிவபெரு மானே இருளிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே . 1157 . 3 - ரை . அருள் உடை கூடரே - இரங்கி அருளுதலையுடைய ஒளியே அளிந்தது ஓர் கனியே மிக்க கனிந்ததாகிய ஒப்பற்ற கனி போன்றவனே பெரு திறல் அரு தவர்க்கு அரசே - பேராற்றலை யுடைய செய்தற்கரிய தவத்தினையுடையவர்க்கு அரசனே பொருள் உடை கலையே - மெய்ப்பொருள்களையுடைய கலை வடிவினனே புகழ்ச்சியை கடந்த போகமே - புகழ்ந்து சொல்லுதற்கு அடங்காத அனுபவமாக உள்ளவனே யோகத்தின் பொலிவே - யோகநிலையின் விளக்கமாக உள்ளவனே தெருளிடத்து அடியார் சிந்தையுள் புகுந்த செல்வமே - தெளிந்த அறிவுண்டாயபோது அடியார் உள்ளத்து விளங் கித் தோன்றுகின்ற செல்வமாக உள்ளவனே சிவபெருமானே - சிவ பெருமானே இருள் இடத்து உன்னை சிக்கென பிடித்தேன் - இருளை யுடைய நடு இரவின் கண் உன்னை உறுதியாகப் பற்றினேன் இனி எங்கு எழுந்தருளுவது -இனி நீ என்னை விட்டு எங்கு எழுந்தருள்வது ? இரங்கி அருளுதலையுடைய ஒளியே மிக்க கனிந்ததாகிய ஒப்பற்ற கனியே பெருந்திறலையுடைய அருந்தவர்க்கு அரசனே மெய்ப் பொருள்களையுடைய கலைவடிவினனே புகழ்ச்சியைக் கடந்த அனுபவ மாயுள்ளவனே யோகத்தின் பொலிவே தெளிந்த அறிவுண்டாய போது அடியார் சிந்தையுள் புகுந்த செல்வமே . சிவபெருமானே . இருளையுடைய நடு இரவின்கண் உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் ; இனி நீ என்னை விட்டு எங்கு எழுந்தருள்வது என்பதாம் .