திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

1162 "தொழும்ப ருளக்கோயில்" மீனாட்சிபிள்ளை 62 எனக் குமரகுருபர சுவாமிகள் பிரபந்தத்திலும் வருவன காண்க. தான் இறைவனால் ஆட்கொள்ளப்பட்டமையால் தன் குடியில் உள் ளாரும் உய்தி கூடுவர் என்னும் அறநூல் துணிவு பற்றி "என்குடி முழுதாண்ட" என்றார். பிறவிவேர் என்றது மூலகாரணமாயுள்ள இரு வினைகளை. ''என் பிறவி வேரறுக்குங் கரும்பினை" (சுந். 58-6) எனக் கூறுதலுங் காண்க. பிஞ்ஞகன் - சடையை முடியாகக் கொண்ட கோலத்தையுடையவன். எம் பெரிய பொருள் எனக் கூட்டுக. அரிய பெரும் பொருளாகி நின்றான்றன்னை" என அப்பர் வாக்கா லுங் காண்க. திறவு - திறந்த வெளி. காட்சி - காண்டற்கருவியாகிய அறிவாயினும் ஈண்டு காணப்பட்ட பொருளை உணர்த்தி நின்றது இறவு - முடிவு. இதற்குமுன் பற்றினவற்றை யெல்லாம் விட்டுக் கண்ட காட்சியை "திறவிலே கண்ட காட்சியே'' என்றார். 66 திருவாசக ஆராய்ச்சியுரை இதன்கண் 'இறவிலே "ன்னைச் சிக்கெனப்பிடித்தேன்" என்ப தனால் முத்திக்கலப்புஈரத்தல் என்னும் பதிகப் பொருள் புலப்படுதல் காண்க. 540 பாசவே ரறுக்கும் பழம்பொருள் தன்னைப் பற்றுமா றடியனேற் கருளிப் பூசனை யுகந்தென் சிந்தையுட் புகுந்து பூங்கழல் காட்டிய பொருளே தேசுடை விளக்கே செழுஞ்சுடர் மூர்த்தி செல்வமே சிவபெரு மானே ஈசனே யுன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே 6 ப-ரை: பாச வேர் அறுக்கும் பழம் பொருள் தன்னை - மும்மலங் களின் மூலத்தினை அறுத்தற்கேதுவான பழமையான பொருளாயுள்ள உபாயத்தினை,பற்றும் ஆறு அடியனேற்கு அருளி - பற்றிக் கொள்ளும் முறைமையினை அடியனேற்கு உபதேசஞ் செய்தருளி, பூசனை உகந்து என் சிந்தையுள் புகுந்து - அடியேனது வழிபாட்டினை விரும்பி ஏற் றருளி என் உள்ளத்தினுள் வெளிப்பட்டு, பூ கழல் காட்டிய பொருளே - தாமரை மலர் போன்ற வீரக்கழல் அணிந்த திருவடி களைக் காட்டியருளிய மெய்ப்பொருளாயுள்ளவனே, தேசு உடை விளக்கே - இயற்கையான ஒளியையுடைய விளக்கே, செழு சுடர் மூர்த்தி -மிக்க ஒளியையுடைய வடிவினையுடையவனே, செல்வமே - எனது நிலைபெற்ற செல்வமே, சிவபெருமானே - சிவபெருமானே, ஈசனே - என்னை உடையவனே, உன்னை சிக்கென பிடித்தேன் - உன்னை உறுதியாகப் பற்றிக் கொண்டேன், இனி எங்கு எழுந்தருளுவது - இனி நீ என்னை விட்டு எங்கே எழுந்தருள்வது?
1162 தொழும்ப ருளக்கோயில் மீனாட்சிபிள்ளை 62 எனக் குமரகுருபர சுவாமிகள் பிரபந்தத்திலும் வருவன காண்க . தான் இறைவனால் ஆட்கொள்ளப்பட்டமையால் தன் குடியில் உள் ளாரும் உய்தி கூடுவர் என்னும் அறநூல் துணிவு பற்றி என்குடி முழுதாண்ட என்றார் . பிறவிவேர் என்றது மூலகாரணமாயுள்ள இரு வினைகளை . ' ' என் பிறவி வேரறுக்குங் கரும்பினை ( சுந் . 58-6 ) எனக் கூறுதலுங் காண்க . பிஞ்ஞகன் - சடையை முடியாகக் கொண்ட கோலத்தையுடையவன் . எம் பெரிய பொருள் எனக் கூட்டுக . அரிய பெரும் பொருளாகி நின்றான்றன்னை என அப்பர் வாக்கா லுங் காண்க . திறவு - திறந்த வெளி . காட்சி - காண்டற்கருவியாகிய அறிவாயினும் ஈண்டு காணப்பட்ட பொருளை உணர்த்தி நின்றது இறவு - முடிவு . இதற்குமுன் பற்றினவற்றை யெல்லாம் விட்டுக் கண்ட காட்சியை திறவிலே கண்ட காட்சியே ' ' என்றார் . 66 திருவாசக ஆராய்ச்சியுரை இதன்கண் ' இறவிலே ன்னைச் சிக்கெனப்பிடித்தேன் என்ப தனால் முத்திக்கலப்புஈரத்தல் என்னும் பதிகப் பொருள் புலப்படுதல் காண்க . 540 பாசவே ரறுக்கும் பழம்பொருள் தன்னைப் பற்றுமா றடியனேற் கருளிப் பூசனை யுகந்தென் சிந்தையுட் புகுந்து பூங்கழல் காட்டிய பொருளே தேசுடை விளக்கே செழுஞ்சுடர் மூர்த்தி செல்வமே சிவபெரு மானே ஈசனே யுன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே 6 - ரை : பாச வேர் அறுக்கும் பழம் பொருள் தன்னை - மும்மலங் களின் மூலத்தினை அறுத்தற்கேதுவான பழமையான பொருளாயுள்ள உபாயத்தினை பற்றும் ஆறு அடியனேற்கு அருளி - பற்றிக் கொள்ளும் முறைமையினை அடியனேற்கு உபதேசஞ் செய்தருளி பூசனை உகந்து என் சிந்தையுள் புகுந்து - அடியேனது வழிபாட்டினை விரும்பி ஏற் றருளி என் உள்ளத்தினுள் வெளிப்பட்டு பூ கழல் காட்டிய பொருளே - தாமரை மலர் போன்ற வீரக்கழல் அணிந்த திருவடி களைக் காட்டியருளிய மெய்ப்பொருளாயுள்ளவனே தேசு உடை விளக்கே - இயற்கையான ஒளியையுடைய விளக்கே செழு சுடர் மூர்த்தி -மிக்க ஒளியையுடைய வடிவினையுடையவனே செல்வமே - எனது நிலைபெற்ற செல்வமே சிவபெருமானே - சிவபெருமானே ஈசனே - என்னை உடையவனே உன்னை சிக்கென பிடித்தேன் - உன்னை உறுதியாகப் பற்றிக் கொண்டேன் இனி எங்கு எழுந்தருளுவது - இனி நீ என்னை விட்டு எங்கே எழுந்தருள்வது ?