திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை ப -ரை, அத்தனே - தந்தையே, அண்டர் அண்டமாய் நின்ற ஆதியே - தேவர்களுக்கு ஆதார உலகமாய் நின்ற முதல்வனே. யாதும் ஈறு இல்லா சித்தனே - சிறிதும் அழிவில்லாத அறிவுடைப் பொருளே, பத்தர் சிக்கெனப் பிடித்த செல்வமே - அடியார்கள் உறுதியாகப் பிடித்த வீடுபேற்றுச் செல்வத்தையுடையவனே, சிவ பெருமானே - சிவபெருமானே. பித்தனே - உயிர்கட்கு அருள்செய்யும் பித்துடையவனே, எல்லா உயிருமாய் - எல்லா உயிர்களோடும் கலந்து அவையேயாயும், தழைத்து பிழைத்த அவை அல்லையாய் நிற் கும் எத்தனே - நின் திருவருளால் உண்டாகிச் சீவித்த அவ்வுயிர்க ளல்லாமல் வேறு பொருளாய் நிற்கின்ற சூழ்ச்சியுடையவனே, உன்னை சிக்கெனப் பிடித்தேன் - உன்னை உறுதியாகப் பற்றினேன், இனி எங்கு எழுந்தருளுவது - இனி நீ என்னைவிட்டு எங்கு எழுந்தருள்வது? திரியாறு வம் 1164 அத்தனே, அண்டர் அண்டமாய் நின்ற முதல்வனே, சிறிதும் அடியார்கள் சிக்கெனப் அழிவில்லாத அறிவுடைப் பொருளே, பிடித்த வீடுபேற்றுச் செல்வத்தையுடையவனே, சிவபெருமானே. பித்தனே, எல்லாவுயிர்களோடும் கலந்து அவையேயாகியும் நினது அருளால் உண்டாகிச் சீவித்த அவ்வுயிர்களல்லாமல் வேறு பொரு ளாகியும் நிற்கின்ற எத்தனே. உனை உறுதியாகப் பற்றினேன்; இனி நீ என்னை விட்டு எங்கு எழுந்தருள்வது என்பதாம். அத்தன் - தந்தை, அண்டர் அண்டம் - தேவர்கள் தங்கும் உலகு. யாதும் - சிறிதும் "நெய்கடை பாலிற் பயன் யாதுமின்றாகி" (கலி 110 - 17) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. சித்தன் - அறி வுடையவன். பித்தன் - செய்த ஒரு காரியத்திலேயே மேன்மேலும் விரும்புதலுடையவன். என்றது தன் அடியார்க்கு அருள் செய்தலையே மிகவும் விரும்பியுள்ளவன், இறைவன் எல்லாவுயிர்களோடும் கலந்து அவையேயாகியும் தனதருளால் உண்டாகிச் சீவித்த அவ்வுயிர்க ளல்லாமல் வேறு பொருளாயும் நிற்கின்ற சூழ்ச்சியையுடையவனாத லின் "எல்லாவுயிருமாய்த் தழைத்துப் பிழைத்த அவையல்லையாய் நிற்கும் எத்தனே" என்றார். "யாவையுமாய் அல்லையுமாம், சோதியனே" சிவபுராணம் 71-2 "நிரந்த ஆசாயம் நீர் நிலம் தீகால் ஆயவை அல்லையாய் ஆங்கே கரந்ததோர் உருவே'' கோயிற்.6 "ஒன்று நீ யல்லை யன்றியொன் றில்லை" கோயிற்.7 என அடிகள் அருளியவாறுங் காண்க, எத்து - சூழ்ச்சி, பிழைத்த அவை என்னும் பெயரெச்சத்தீறு கெட்டது.
திருவாசக ஆராய்ச்சியுரை -ரை அத்தனே - தந்தையே அண்டர் அண்டமாய் நின்ற ஆதியே - தேவர்களுக்கு ஆதார உலகமாய் நின்ற முதல்வனே . யாதும் ஈறு இல்லா சித்தனே - சிறிதும் அழிவில்லாத அறிவுடைப் பொருளே பத்தர் சிக்கெனப் பிடித்த செல்வமே - அடியார்கள் உறுதியாகப் பிடித்த வீடுபேற்றுச் செல்வத்தையுடையவனே சிவ பெருமானே - சிவபெருமானே . பித்தனே - உயிர்கட்கு அருள்செய்யும் பித்துடையவனே எல்லா உயிருமாய் - எல்லா உயிர்களோடும் கலந்து அவையேயாயும் தழைத்து பிழைத்த அவை அல்லையாய் நிற் கும் எத்தனே - நின் திருவருளால் உண்டாகிச் சீவித்த அவ்வுயிர்க ளல்லாமல் வேறு பொருளாய் நிற்கின்ற சூழ்ச்சியுடையவனே உன்னை சிக்கெனப் பிடித்தேன் - உன்னை உறுதியாகப் பற்றினேன் இனி எங்கு எழுந்தருளுவது - இனி நீ என்னைவிட்டு எங்கு எழுந்தருள்வது ? திரியாறு வம் 1164 அத்தனே அண்டர் அண்டமாய் நின்ற முதல்வனே சிறிதும் அடியார்கள் சிக்கெனப் அழிவில்லாத அறிவுடைப் பொருளே பிடித்த வீடுபேற்றுச் செல்வத்தையுடையவனே சிவபெருமானே . பித்தனே எல்லாவுயிர்களோடும் கலந்து அவையேயாகியும் நினது அருளால் உண்டாகிச் சீவித்த அவ்வுயிர்களல்லாமல் வேறு பொரு ளாகியும் நிற்கின்ற எத்தனே . உனை உறுதியாகப் பற்றினேன் ; இனி நீ என்னை விட்டு எங்கு எழுந்தருள்வது என்பதாம் . அத்தன் - தந்தை அண்டர் அண்டம் - தேவர்கள் தங்கும் உலகு . யாதும் - சிறிதும் நெய்கடை பாலிற் பயன் யாதுமின்றாகி ( கலி 110 - 17 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . சித்தன் - அறி வுடையவன் . பித்தன் - செய்த ஒரு காரியத்திலேயே மேன்மேலும் விரும்புதலுடையவன் . என்றது தன் அடியார்க்கு அருள் செய்தலையே மிகவும் விரும்பியுள்ளவன் இறைவன் எல்லாவுயிர்களோடும் கலந்து அவையேயாகியும் தனதருளால் உண்டாகிச் சீவித்த அவ்வுயிர்க ளல்லாமல் வேறு பொருளாயும் நிற்கின்ற சூழ்ச்சியையுடையவனாத லின் எல்லாவுயிருமாய்த் தழைத்துப் பிழைத்த அவையல்லையாய் நிற்கும் எத்தனே என்றார் . யாவையுமாய் அல்லையுமாம் சோதியனே சிவபுராணம் 71-2 நிரந்த ஆசாயம் நீர் நிலம் தீகால் ஆயவை அல்லையாய் ஆங்கே கரந்ததோர் உருவே ' ' கோயிற் .6 ஒன்று நீ யல்லை யன்றியொன் றில்லை கோயிற் .7 என அடிகள் அருளியவாறுங் காண்க எத்து - சூழ்ச்சி பிழைத்த அவை என்னும் பெயரெச்சத்தீறு கெட்டது .