திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

Le maba பிடித்தபத்து இதன் கண் "எத்தனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்" என் பதனால் முத்திக்கலப்புரைத்தல் என்னும் பதிகப்பொருள் புலப்படு மாறு காண்க. 8 512 பானினைந் தூட்டுந் தாயினுஞ் சாலப் பரிந்துநீ பாவியே னுடைய ஊனினை புருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்த மாய தேனினைச் சொரித்து புறம்புறந் திரிந்த செல்வமே சிவபெரு மானே யனுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. 1165 ப - ரை பால் நினைந்து ஊட்டும் தாயினும் சால பரிந்து - தன் குழந்தைக்குப் பசியுளவாங் காலத்தை அது அழுதற்கு முன்னே நினைந்து அறிந்து பாலினை ஊட்டுகின்ற தாயினும் மிகவும் இரங்கி, பாவியேன் உடைய ஊனினை உருக்கி - தீவினையேனுடைய உடம் பினை உருகச்செய்து, உள் ஒளி பெருக்கி - மனத்திலே அறிவொளியை மிகுவித்து, உலப்பு இல்லா ஆனந்தம் ஆய தேனினை சொரிந்து - குறைதல் இல்லாத பேரின்பமாகிய தேனினைப் பொழிந்து, புறம் புறம் திரிந்த செல்வமே - புறத்தே யான் செல்லுமிடந் தோறும் திரிந்த என்னுடைய செல்வமே. சிவபெருமானே - சிவபெருமானே, யான் உனைத் தொடர்ந்து சிக்கென பிடித்தேன் - யான் உன்னை இடைவிடாது உறுதியாகப் பற்றிக்கொண்டேன். இனி எங்கு எழுந் தருளுவது - இனி என்னை விட்டு எங்கு எழுந்தருள்வது? Ana Samoi க்கு பாப பால் நினைந்து ஊட்டும் தாயினும் மிகவும் இரங்கிப் பாவியே னுடைய உடம்பினை உருகச் செய்து, உள்ளத்திலே அறிவொளியைப் பெருகச்செய்து, குறைதலில்லாத பேரின்பத்தினைச் சொரிந்து, புறத்தே யான் செல்லுமிடந்தோறும் என்னுடன் திரிந்த என் செல்வமே, சிவபெருமானே, யான் உனைத் தொடர்ந்து உறுதி யாகப் பற்றினேன்; இனி நீ என்னை விட்டு எங்கு எழுந்தருள்வது என்பதாம். நினைத்தலும் மறத்தலுமுடைய தாயன்பினும் நினைப்பு மறப் பற்ற இறைவனது அருள் பெரிதாகலின் 'பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து'' என்றார். "தாயிற் சிறந்த தயாவான தத்துவனே' (சிவபுராணம் 61) 'தாயிற் பெரிதும் தயாவுடைய தம் பெருமான்' (பூவல்லி 3) எனத் திருவாசகத்தும், "பெற்றிருந்த தாய் அவளின் நல்லாய் நீயே" (நாவு 251-5) எனத் தேவாரத்தும் வருதல் காண்க. தாயினும் என்பதிலுள்ள உம்மை உயர்வு சிறப்பு, ஊன்
Le maba பிடித்தபத்து இதன் கண் எத்தனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் என் பதனால் முத்திக்கலப்புரைத்தல் என்னும் பதிகப்பொருள் புலப்படு மாறு காண்க . 8 512 பானினைந் தூட்டுந் தாயினுஞ் சாலப் பரிந்துநீ பாவியே னுடைய ஊனினை புருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்த மாய தேனினைச் சொரித்து புறம்புறந் திரிந்த செல்வமே சிவபெரு மானே யனுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே . 1165 - ரை பால் நினைந்து ஊட்டும் தாயினும் சால பரிந்து - தன் குழந்தைக்குப் பசியுளவாங் காலத்தை அது அழுதற்கு முன்னே நினைந்து அறிந்து பாலினை ஊட்டுகின்ற தாயினும் மிகவும் இரங்கி பாவியேன் உடைய ஊனினை உருக்கி - தீவினையேனுடைய உடம் பினை உருகச்செய்து உள் ஒளி பெருக்கி - மனத்திலே அறிவொளியை மிகுவித்து உலப்பு இல்லா ஆனந்தம் ஆய தேனினை சொரிந்து - குறைதல் இல்லாத பேரின்பமாகிய தேனினைப் பொழிந்து புறம் புறம் திரிந்த செல்வமே - புறத்தே யான் செல்லுமிடந் தோறும் திரிந்த என்னுடைய செல்வமே . சிவபெருமானே - சிவபெருமானே யான் உனைத் தொடர்ந்து சிக்கென பிடித்தேன் - யான் உன்னை இடைவிடாது உறுதியாகப் பற்றிக்கொண்டேன் . இனி எங்கு எழுந் தருளுவது - இனி என்னை விட்டு எங்கு எழுந்தருள்வது ? Ana Samoi க்கு பாப பால் நினைந்து ஊட்டும் தாயினும் மிகவும் இரங்கிப் பாவியே னுடைய உடம்பினை உருகச் செய்து உள்ளத்திலே அறிவொளியைப் பெருகச்செய்து குறைதலில்லாத பேரின்பத்தினைச் சொரிந்து புறத்தே யான் செல்லுமிடந்தோறும் என்னுடன் திரிந்த என் செல்வமே சிவபெருமானே யான் உனைத் தொடர்ந்து உறுதி யாகப் பற்றினேன் ; இனி நீ என்னை விட்டு எங்கு எழுந்தருள்வது என்பதாம் . நினைத்தலும் மறத்தலுமுடைய தாயன்பினும் நினைப்பு மறப் பற்ற இறைவனது அருள் பெரிதாகலின் ' பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து ' ' என்றார் . தாயிற் சிறந்த தயாவான தத்துவனே ' ( சிவபுராணம் 61 ) ' தாயிற் பெரிதும் தயாவுடைய தம் பெருமான் ' ( பூவல்லி 3 ) எனத் திருவாசகத்தும் பெற்றிருந்த தாய் அவளின் நல்லாய் நீயே ( நாவு 251-5 ) எனத் தேவாரத்தும் வருதல் காண்க . தாயினும் என்பதிலுள்ள உம்மை உயர்வு சிறப்பு ஊன்