திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை ப - ரை. பண் ஆர்ந்த மொழி மங்கை பங்கா - பண்ணினது தன்மை நிறைந்த இனிய சொற்களையுடைய உமையம்மை பாகனே. நின் ஆளானார்க்கு உண் ஆர்ந்த ஆர் அமுதே - நினது தொண்டர் களுக்கு உண்ணுதற்கு நிறைவுடைய கிடைத்தற்கரிய அமுதமான வனே, உடையானே - என்னை ஆளாக உடையவனே. அடியேனை மண் ஆர்ந்த பிறப்பு அறுத்திட்டு ஆள்வாய் நீ - நினது அடியேனை நில வுலகிற் பொருந்திய பிறவியைத் தொலைத்து ஆண்டருள்பவனே, வா என்ன - இங்கே வருக என்று அழைக்க, உய்ந்த ஆறு - யான் நின் பால் வந்து உய்வடைந்த முறைமை. உன் கழல் கண்ணார கண்டு அன்றே - உன்னுடைய வீரக்கழலணிந்த திருவடிகளைக் கண்ணாரக் கண் டல்லவா? அத்திருவடியின் பெருமையை என்னென்றுரைப்பேன். 1170 உமையம்மை பாகனே, ஆளானார்க்கு அமுதமாயிருப்பவனே. உடையானே, அடியேனைப் பிறப்பறுத்து ஆட்கொண்டருள்பவனே, நீ இங்கே வருக என்று அழைக்க யான் நின்பால் வந்து உன்னுடைய வீரக்கழலணிந்த திருவடியைக் கண்ணாரக் கண்டல்லவா? அத் திருவடி யின் பெருமையை என்னென்றுரைப்பேன். பண்ணார்ந்த மொழி மங்கை என்றது உமையம்மையை. "பண்ணி னேர் மொழியாள்" (123-1) "பண்ணின் இன் மொழியாளை' '(119-6) என அப்பரும் "பண்ணினேர் மொழியாள்" (304-9) 'பண்ணியன் றெழுமென்மொழியாள்" (260-5) என ஞானசம்பந்தரும் அருளியமை காண்க. உண்ண என்னும் செயவெனெச்சத்தீறு கெட்டது. பூவுல கில் எனக்குளதாகிய பிறப்பு என்பார், மண்ணார்ந்த பிறப்பு என்றார். வா என்ன உய்ந்த ஆறு நின்கழல் கண்ணாரக் கண்டு அன்றே என இயைத்துப் பொருள் கொள்க. உய்ந்தவாறு என்றது நான் நின்பால் வந்து உய்வடைந்த முறைமை. உய்ந்த ஆறு கண்ணாரக் கண்டு அன்றே என இயைக்க. கண்ணாரக் கண்டு அன்றே என்பதன் ஆற்றலால் என் னென்றுரைப்பேன் என்பது வருவித்துரைக்கப்பட்டது. கண்ணாரக் காணுதல் - நன்றாகத் தரிசித்தல். இதன்கண்,ஆள்வாய் நீவா வென்ன உய்ந்த ஆறு உன் கழல் கண்ணாரக் கண்டு அன்றே என்பதனால் சுட்டறிவொழித்தல் என்னும் பதிகப் பொருள் புலப்படுமாறு காண்க. 2 546 ஆதமிலி யான்பிறப் பிறப்பென்னும் அருநரகில் ஆர்தமரும் இன்றியே அழுந்துவேற் காவாவென் றோதமலி நஞ்சுண்ட வுடையானே அடியேற்குன் பாதமலர் காட்டியவா றன்றேயெம் பரம்பரனே. ப-ரை. எம் பரம்பரனே - எமது மேலோர்க்கும் மேலோனே, ஓதம் மலி நஞ்சு உண்ட உடையானே - பாற்கடலில் மிக்கெழுந்த நஞ்
திருவாசக ஆராய்ச்சியுரை - ரை . பண் ஆர்ந்த மொழி மங்கை பங்கா - பண்ணினது தன்மை நிறைந்த இனிய சொற்களையுடைய உமையம்மை பாகனே . நின் ஆளானார்க்கு உண் ஆர்ந்த ஆர் அமுதே - நினது தொண்டர் களுக்கு உண்ணுதற்கு நிறைவுடைய கிடைத்தற்கரிய அமுதமான வனே உடையானே - என்னை ஆளாக உடையவனே . அடியேனை மண் ஆர்ந்த பிறப்பு அறுத்திட்டு ஆள்வாய் நீ - நினது அடியேனை நில வுலகிற் பொருந்திய பிறவியைத் தொலைத்து ஆண்டருள்பவனே வா என்ன - இங்கே வருக என்று அழைக்க உய்ந்த ஆறு - யான் நின் பால் வந்து உய்வடைந்த முறைமை . உன் கழல் கண்ணார கண்டு அன்றே - உன்னுடைய வீரக்கழலணிந்த திருவடிகளைக் கண்ணாரக் கண் டல்லவா ? அத்திருவடியின் பெருமையை என்னென்றுரைப்பேன் . 1170 உமையம்மை பாகனே ஆளானார்க்கு அமுதமாயிருப்பவனே . உடையானே அடியேனைப் பிறப்பறுத்து ஆட்கொண்டருள்பவனே நீ இங்கே வருக என்று அழைக்க யான் நின்பால் வந்து உன்னுடைய வீரக்கழலணிந்த திருவடியைக் கண்ணாரக் கண்டல்லவா ? அத் திருவடி யின் பெருமையை என்னென்றுரைப்பேன் . பண்ணார்ந்த மொழி மங்கை என்றது உமையம்மையை . பண்ணி னேர் மொழியாள் ( 123-1 ) பண்ணின் இன் மொழியாளை ' ' ( 119-6 ) என அப்பரும் பண்ணினேர் மொழியாள் ( 304-9 ) ' பண்ணியன் றெழுமென்மொழியாள் ( 260-5 ) என ஞானசம்பந்தரும் அருளியமை காண்க . உண்ண என்னும் செயவெனெச்சத்தீறு கெட்டது . பூவுல கில் எனக்குளதாகிய பிறப்பு என்பார் மண்ணார்ந்த பிறப்பு என்றார் . வா என்ன உய்ந்த ஆறு நின்கழல் கண்ணாரக் கண்டு அன்றே என இயைத்துப் பொருள் கொள்க . உய்ந்தவாறு என்றது நான் நின்பால் வந்து உய்வடைந்த முறைமை . உய்ந்த ஆறு கண்ணாரக் கண்டு அன்றே என இயைக்க . கண்ணாரக் கண்டு அன்றே என்பதன் ஆற்றலால் என் னென்றுரைப்பேன் என்பது வருவித்துரைக்கப்பட்டது . கண்ணாரக் காணுதல் - நன்றாகத் தரிசித்தல் . இதன்கண் ஆள்வாய் நீவா வென்ன உய்ந்த ஆறு உன் கழல் கண்ணாரக் கண்டு அன்றே என்பதனால் சுட்டறிவொழித்தல் என்னும் பதிகப் பொருள் புலப்படுமாறு காண்க . 2 546 ஆதமிலி யான்பிறப் பிறப்பென்னும் அருநரகில் ஆர்தமரும் இன்றியே அழுந்துவேற் காவாவென் றோதமலி நஞ்சுண்ட வுடையானே அடியேற்குன் பாதமலர் காட்டியவா றன்றேயெம் பரம்பரனே . - ரை . எம் பரம்பரனே - எமது மேலோர்க்கும் மேலோனே ஓதம் மலி நஞ்சு உண்ட உடையானே - பாற்கடலில் மிக்கெழுந்த நஞ்