திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை என்றது விதிமார்க்கத்திலாவது பத்திமார்க்கத்திலாவது யான் அமைந்திலேன் என்றவாறு. "கற்றிலேன். கலைகள் பல ஞானம்" எனத் தேவாரத்தும் காண்க. அங்ஙனமானாலும் நின் திருவருள் உப தேசச் சிறப்பினால் நின்னை அன்றிப் பிற தெய்வம் எதனையும் அறியே னாகி நின் வார்கழல் வந்து அடைந்து பேரின்பமுற்று இருந்தேன் என் பார், "மற்றறியேன் பிறதெய்வம் வாக்கியலால் வார்கழல் வந்து உற்று இறுமாந்திருந்தேன்" என்றார். அறியேன் என்றதனை முற்றெச் சமாகக் கொண்டு இறுமாந்திருந்தேன் என்னும் வினையோடு முடிக்க. வார்கழல் வந்து உற்று என்றது நின் திருவடிகளை இடைவிடாது தியா னித்து என்றவாறு. 1174 பேசி "ஈசன் அவன்அல்லா தில்லை எனநினைந்து கூசி மனத்தகத்துக் கொண்டிருந்து மறவாது வாழ்வாரை மண்ணுலகத் தென்றும் பிறவாமைக் காக்கும் பிரான்" 11-ந் திருமுறை : திருவிரட்டைமணி 2 என்பதனாலும் அறிக. இறுமாந்திருத்தல் - இறைவன் திருவருள் இன் பம் ஒன்றையே அனுபவித்துக்கொண்டு பிறிதோரனுபவமுமின்றி யிருத்தல். ''இறுமாந்திருப்பன் கொலோ" என அப்பர் தேவாரத்தும், "யானிறு மாப்ப வின்பம் அளியா" (கோவை 52) திருக்கோவையிலும் வருவன காண்க. கலைஞானநெறி, அன்புநெறி ஒன்றிலும் வாராத அடியேனுக்கு நினது பொன் போன்ற அரிய திரு வருளை நல்கியது நாய்க்குப் பொற்றவிசு இட்டது போலும் என்றனர். எனக்கு நின் அருள் நல்கியது நாய்க்குப் பொற்றவிசு இட்டது போலும் எனக் கூறின் இறைவன் தகுதியறியாது அரிய பொருளைக் கொடுப்பவன் என இறைவன்மேற் குற்றம் கூறியதோவெனின், அடி கள் தமக்கு இறைவன் திருவருள் கிடைத்தமை, நாய்க்குப் பொற் றவிசு கிடைத்தது போலும் என அதன் உயர்வினையும் தம் சிறுமை யினையும் இறைவன் பேரருட்டிறத்தினையும் நோக்கிக் கூறியதாக லின் குற்றமாகாதென்க. S என " இதன் கண் "நின் வாக்கியலால் வார்கழல் வந்துற் றிறுமாந் திருந்தேன்" என்பதனால் சுட்டறிவொழித்தல் என்னும் பதிகப்பொருள் போதருதல் காண்க. 549 பஞ்சாய அடிமடவார் கடைக்கண்ணால் இடர்ப்பட்டு நஞ்சாய துயர்கூர நடுங்குவேன் நின்னருளால் உய்ஞ்சேனெம் பெருமானே யுடையானே அடியேனை அஞ்சேலென் றாண்டவா றன்றேயம் பலத்தமுதே. 5
திருவாசக ஆராய்ச்சியுரை என்றது விதிமார்க்கத்திலாவது பத்திமார்க்கத்திலாவது யான் அமைந்திலேன் என்றவாறு . கற்றிலேன் . கலைகள் பல ஞானம் எனத் தேவாரத்தும் காண்க . அங்ஙனமானாலும் நின் திருவருள் உப தேசச் சிறப்பினால் நின்னை அன்றிப் பிற தெய்வம் எதனையும் அறியே னாகி நின் வார்கழல் வந்து அடைந்து பேரின்பமுற்று இருந்தேன் என் பார் மற்றறியேன் பிறதெய்வம் வாக்கியலால் வார்கழல் வந்து உற்று இறுமாந்திருந்தேன் என்றார் . அறியேன் என்றதனை முற்றெச் சமாகக் கொண்டு இறுமாந்திருந்தேன் என்னும் வினையோடு முடிக்க . வார்கழல் வந்து உற்று என்றது நின் திருவடிகளை இடைவிடாது தியா னித்து என்றவாறு . 1174 பேசி ஈசன் அவன்அல்லா தில்லை எனநினைந்து கூசி மனத்தகத்துக் கொண்டிருந்து மறவாது வாழ்வாரை மண்ணுலகத் தென்றும் பிறவாமைக் காக்கும் பிரான் 11 - ந் திருமுறை : திருவிரட்டைமணி 2 என்பதனாலும் அறிக . இறுமாந்திருத்தல் - இறைவன் திருவருள் இன் பம் ஒன்றையே அனுபவித்துக்கொண்டு பிறிதோரனுபவமுமின்றி யிருத்தல் . ' ' இறுமாந்திருப்பன் கொலோ என அப்பர் தேவாரத்தும் யானிறு மாப்ப வின்பம் அளியா ( கோவை 52 ) திருக்கோவையிலும் வருவன காண்க . கலைஞானநெறி அன்புநெறி ஒன்றிலும் வாராத அடியேனுக்கு நினது பொன் போன்ற அரிய திரு வருளை நல்கியது நாய்க்குப் பொற்றவிசு இட்டது போலும் என்றனர் . எனக்கு நின் அருள் நல்கியது நாய்க்குப் பொற்றவிசு இட்டது போலும் எனக் கூறின் இறைவன் தகுதியறியாது அரிய பொருளைக் கொடுப்பவன் என இறைவன்மேற் குற்றம் கூறியதோவெனின் அடி கள் தமக்கு இறைவன் திருவருள் கிடைத்தமை நாய்க்குப் பொற் றவிசு கிடைத்தது போலும் என அதன் உயர்வினையும் தம் சிறுமை யினையும் இறைவன் பேரருட்டிறத்தினையும் நோக்கிக் கூறியதாக லின் குற்றமாகாதென்க . S என இதன் கண் நின் வாக்கியலால் வார்கழல் வந்துற் றிறுமாந் திருந்தேன் என்பதனால் சுட்டறிவொழித்தல் என்னும் பதிகப்பொருள் போதருதல் காண்க . 549 பஞ்சாய அடிமடவார் கடைக்கண்ணால் இடர்ப்பட்டு நஞ்சாய துயர்கூர நடுங்குவேன் நின்னருளால் உய்ஞ்சேனெம் பெருமானே யுடையானே அடியேனை அஞ்சேலென் றாண்டவா றன்றேயம் பலத்தமுதே . 5