திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவேசறவு ப - ரை: எம்பெருமானே - எங்கள் தலைவனே, உடையானே- என்னை அடிமையாக உடையவனே, அம்பலத்து அமுதே-சிற்சபையி லாடும் அமுதமே. பஞ்சுஆய அடிமடவார் கடைக்கண்ணால் இடர்ப் பட்டு - செம்பஞ்சுக் குழம்பு ஊட்டிய கால்களையுடைய பொது மகளி ரது கடைக்கண் பார்வையினால் துன்பம் அடைந்து, நஞ்சு ஆய துயர்கூர நடுங்குவேன் - நஞ்சு உண்டாற்போன்ற துன்பம் மிக அத னால் நடுக்கமடையும் பாசபந்தமுடையேனாகிய யான். நின் அரு ளால் உய்ஞ்சேன் - நின் அருளுபதேசத்தினால் உய்வடைந்தேன், அடி யேனை அஞ்சேல் என்று ஆண்ட ஆறு அன்றே - அடியேனை அஞ்சற்க என்று நீ ஆட்கொண்டருளிய முறைமை நின் பேரருட் டிறமல்லவா? அதனை என்னென்பேன். 1175 எம்பெருமானே, உடையானே, அம்பலத்து அமுதே, பொது மகளிரது கடைக்கண் பார்வையால் துன்பமடைந்து, நஞ்சுண்டது போன்ற துன்பம் மிக அதனால் நடுக்கமடையும் பாசபந்தமுடையே னாகிய யான், நின் அருள் உபதேசத்தினால் உய்வடைந்தேன். அடி யேனை அஞ்சல் என்று நீ ஆட்கொண்டருளிய முறைமை நின் பேரருட் டிறமல்லவா? அதனை என்னென்பேன் என்பதாம். பஞ்சாய அடி -பஞ்சுபோன்ற அடி எனினுமாம், மடவார் என் றது பொது மகளிரை, அவரது கடைக்கண்ணால் இடர்ப்பட்டுத் துயர் மிக நிற்பேன் நின்னருளால் உய்ந்தேன் என்பதனை "பஞ்சாய அடிமடவார் கடைக்கண்ணு லிடர்ப்பட்டு நெஞ்சாய துயர்கூர நிற்பேன் உன் அருள் பெற்றேன் உய்ஞ்சேன் நான் உடையானே" அச்சோ. 5 என அடிகள் பிறிதோரிடத்தும் அருளுமாறு காண்க. நஞ்சாய துயர் என்றது நஞ்சை உண்டால் உளதாகும் துன்பம் போன்ற துன்பம். கூர-மிக. நடுங்குவேன் என அடிகள் தம்மைக் கூறியது எங் கும் தம்மைத் தாழ்த்திக் கூறும் முறைமை பற்றியாகும். உய்ந்தேன் என்பது எதுகை நோக்கி உய்ஞ்சேன் எனத் திரிந்தது. அன்றே என்பதற்கு நின் திருவருட்டிறமல்லவா அதனை என்னென்பேன் எனச் சில சொற்கள் வருவித்துரைக்க இதன்கண்,:'அடியேனை அஞ்சேலென்று ஆண்டவாறு அன்றே'" என்பவற்றால் சுட்டறிவொழித்தல் என்னும் பதிகப் பொருள் போதரு தல் காண்க. 6 550 என்பாலைப் பிறப்பறுத்திங் கிமையவர்க்கும் அறிய வொண்ணாத் தென்பாலைத் திருப்பெருந் துறையுறையுஞ் சிவபெருமான்
திருவேசறவு - ரை : எம்பெருமானே - எங்கள் தலைவனே உடையானே என்னை அடிமையாக உடையவனே அம்பலத்து அமுதே - சிற்சபையி லாடும் அமுதமே . பஞ்சுஆய அடிமடவார் கடைக்கண்ணால் இடர்ப் பட்டு - செம்பஞ்சுக் குழம்பு ஊட்டிய கால்களையுடைய பொது மகளி ரது கடைக்கண் பார்வையினால் துன்பம் அடைந்து நஞ்சு ஆய துயர்கூர நடுங்குவேன் - நஞ்சு உண்டாற்போன்ற துன்பம் மிக அத னால் நடுக்கமடையும் பாசபந்தமுடையேனாகிய யான் . நின் அரு ளால் உய்ஞ்சேன் - நின் அருளுபதேசத்தினால் உய்வடைந்தேன் அடி யேனை அஞ்சேல் என்று ஆண்ட ஆறு அன்றே - அடியேனை அஞ்சற்க என்று நீ ஆட்கொண்டருளிய முறைமை நின் பேரருட் டிறமல்லவா ? அதனை என்னென்பேன் . 1175 எம்பெருமானே உடையானே அம்பலத்து அமுதே பொது மகளிரது கடைக்கண் பார்வையால் துன்பமடைந்து நஞ்சுண்டது போன்ற துன்பம் மிக அதனால் நடுக்கமடையும் பாசபந்தமுடையே னாகிய யான் நின் அருள் உபதேசத்தினால் உய்வடைந்தேன் . அடி யேனை அஞ்சல் என்று நீ ஆட்கொண்டருளிய முறைமை நின் பேரருட் டிறமல்லவா ? அதனை என்னென்பேன் என்பதாம் . பஞ்சாய அடி -பஞ்சுபோன்ற அடி எனினுமாம் மடவார் என் றது பொது மகளிரை அவரது கடைக்கண்ணால் இடர்ப்பட்டுத் துயர் மிக நிற்பேன் நின்னருளால் உய்ந்தேன் என்பதனை பஞ்சாய அடிமடவார் கடைக்கண்ணு லிடர்ப்பட்டு நெஞ்சாய துயர்கூர நிற்பேன் உன் அருள் பெற்றேன் உய்ஞ்சேன் நான் உடையானே அச்சோ . 5 என அடிகள் பிறிதோரிடத்தும் அருளுமாறு காண்க . நஞ்சாய துயர் என்றது நஞ்சை உண்டால் உளதாகும் துன்பம் போன்ற துன்பம் . கூர - மிக . நடுங்குவேன் என அடிகள் தம்மைக் கூறியது எங் கும் தம்மைத் தாழ்த்திக் கூறும் முறைமை பற்றியாகும் . உய்ந்தேன் என்பது எதுகை நோக்கி உய்ஞ்சேன் எனத் திரிந்தது . அன்றே என்பதற்கு நின் திருவருட்டிறமல்லவா அதனை என்னென்பேன் எனச் சில சொற்கள் வருவித்துரைக்க இதன்கண் : ' அடியேனை அஞ்சேலென்று ஆண்டவாறு அன்றே ' என்பவற்றால் சுட்டறிவொழித்தல் என்னும் பதிகப் பொருள் போதரு தல் காண்க . 6 550 என்பாலைப் பிறப்பறுத்திங் கிமையவர்க்கும் அறிய வொண்ணாத் தென்பாலைத் திருப்பெருந் துறையுறையுஞ் சிவபெருமான்