திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

1178 552 திருவாசக ஆராய்ச்சியுரை மருவினிய மலர்ப்பாத மனத்தில் வளர்ந் துள்ளுருகத் தெருவுதொறு மிகவலறிச் சிவபெருமான் என்றேத்திப் பருகியநின் பரங்கருணைத் தடங்கடலிற் படிவாமா றருளெனக்கிங் கிடைமருதே யிடங்கொண்ட அம்மானே. ப - ரை. இடை மருது இடம் கொண்ட அம்மானே- திருவிடை மருதூரைத் திருப்பதியாகக்கொண்ட எம்பெருமானே, மருவு இனிய மலர் பாதம் மனத்தில் வளர்ந்து உள் உருக - பொருந்துதற்கினிய தாமரை மலர்போன்ற நின் திருவடிகள் எனது உள்ளத்தில் தழைத்து உள்ளத்தினை உருகச் செய்யவும், தெருவுதொறும் மிக அலறி சிவ பெருமான் என்று ஏத்தி பருகிய - வீதிகள் தோறும் மிகவும் ஓலமிட் டுச் சிவபெருமானே என்று துதித்துப் பருகவும், நின் பரம் கருணை கடலில் படிவு ஆம் ஆறு - நினது மேலான திருவருட் பெருங்கட லிற் சென்று சேரும் வண்ணம், எனக்கு இங்கு அருள் - இவ்வுலகில் அடியேனுக்குத் தந்தருள்க. எம்பெருமானே, உன் திருவடிகள் என் உள்ளத்தில் வளர்ந்து உள்ளுருக்க அதனால் தெருவுதொறும் மிக அலறிச் சிவபெருமானே என்று ஏத்தி நின் திருவருட் பெருங்கடலிற் சென்று சேருந் தன்மை யினை இவ்வுலகில் அடியேனுக்குத் தந்தருள்க என்பதாம். மருவினிய - மருவுதற்கினிய. இனிய பாதம் என இயையும். வளர் தல் - தழைத்தல் என்றது திருவடிகளைப்பற்றிய தியானம் இடையீ டின்றி விரிவடைதல். உருக என்னும் செயவெனெச்சத்தினை உருக்க எனப் பிறவினையாக்கி அதனைப் பாதத்தின் வினையாகக் கொள்க. இனி, வளர்ந்து என்னும் செய்தென்னெச்சத்தைச் செயவெனெச்ச மாக்கி ஏத்தி என்னும் வினையொடு முடிப்பினும் அமையும். அலறு தல் பேரொலியாய் அழைத்தல். "நாடு நகரமும் நற்றிருக் கோயிலுந் தேடித் திரிந்து சிவபெரு மான்என்று பாடுமின் பாடப் படிமின் பணிந்தபின் கூடிய நெஞ்சத்துக் கோயிலாக் கொள்வனே' சிவபெரு மானென்று நானழைத் தேத்தத் தவபெரு மானென்று தான்வந்து நின்றான்' என திருமந்திரத்தும் வருதல் காண்க. (1445) (2971) பருகிய - செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம். பருக என்பது பொருள். அவறி ஏத்தி பருகிய என்னும் எச்சங்களைப் படி
1178 552 திருவாசக ஆராய்ச்சியுரை மருவினிய மலர்ப்பாத மனத்தில் வளர்ந் துள்ளுருகத் தெருவுதொறு மிகவலறிச் சிவபெருமான் என்றேத்திப் பருகியநின் பரங்கருணைத் தடங்கடலிற் படிவாமா றருளெனக்கிங் கிடைமருதே யிடங்கொண்ட அம்மானே . - ரை . இடை மருது இடம் கொண்ட அம்மானே- திருவிடை மருதூரைத் திருப்பதியாகக்கொண்ட எம்பெருமானே மருவு இனிய மலர் பாதம் மனத்தில் வளர்ந்து உள் உருக - பொருந்துதற்கினிய தாமரை மலர்போன்ற நின் திருவடிகள் எனது உள்ளத்தில் தழைத்து உள்ளத்தினை உருகச் செய்யவும் தெருவுதொறும் மிக அலறி சிவ பெருமான் என்று ஏத்தி பருகிய - வீதிகள் தோறும் மிகவும் ஓலமிட் டுச் சிவபெருமானே என்று துதித்துப் பருகவும் நின் பரம் கருணை கடலில் படிவு ஆம் ஆறு - நினது மேலான திருவருட் பெருங்கட லிற் சென்று சேரும் வண்ணம் எனக்கு இங்கு அருள் - இவ்வுலகில் அடியேனுக்குத் தந்தருள்க . எம்பெருமானே உன் திருவடிகள் என் உள்ளத்தில் வளர்ந்து உள்ளுருக்க அதனால் தெருவுதொறும் மிக அலறிச் சிவபெருமானே என்று ஏத்தி நின் திருவருட் பெருங்கடலிற் சென்று சேருந் தன்மை யினை இவ்வுலகில் அடியேனுக்குத் தந்தருள்க என்பதாம் . மருவினிய - மருவுதற்கினிய . இனிய பாதம் என இயையும் . வளர் தல் - தழைத்தல் என்றது திருவடிகளைப்பற்றிய தியானம் இடையீ டின்றி விரிவடைதல் . உருக என்னும் செயவெனெச்சத்தினை உருக்க எனப் பிறவினையாக்கி அதனைப் பாதத்தின் வினையாகக் கொள்க . இனி வளர்ந்து என்னும் செய்தென்னெச்சத்தைச் செயவெனெச்ச மாக்கி ஏத்தி என்னும் வினையொடு முடிப்பினும் அமையும் . அலறு தல் பேரொலியாய் அழைத்தல் . நாடு நகரமும் நற்றிருக் கோயிலுந் தேடித் திரிந்து சிவபெரு மான்என்று பாடுமின் பாடப் படிமின் பணிந்தபின் கூடிய நெஞ்சத்துக் கோயிலாக் கொள்வனே ' சிவபெரு மானென்று நானழைத் தேத்தத் தவபெரு மானென்று தான்வந்து நின்றான் ' என திருமந்திரத்தும் வருதல் காண்க . ( 1445 ) ( 2971 ) பருகிய - செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம் . பருக என்பது பொருள் . அவறி ஏத்தி பருகிய என்னும் எச்சங்களைப் படி