திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவேசறவு வாமாறு என்னும் வினையொடு முடிக்க. பருகிய என்னும் வினையி னால் கடலிற் படிவாமாறு என்பதற்குக் கடலிடத்துச் சென்று சேரும் படி எனப் பொருளுரைக்கப்பட்டது. பம 1179 இப்பதிகத்தில் இஃதொழிந் த ஏனைய எல்லாத் திருப்பாடல்களி லும் தமக்கு இறைவன் செய்த அருட்டிறத்தினைச் சிறப்பித்துக் கூறிய அடிகள் இத் திருப்பாட்டில் 'மருவினிய மலர்ப்பாதம்...... படிவாமாறு அருள்' என வேண்டிக் கொள்ளுமாற்றால் ஆட்கொண்டு அருள் செய்த நீ வீடுபேற்றினைத் தந்தருள வேண்டுமென வேண்டிக் கொள்கின்றார் என்பதுபுலப்படுகின்றது. இதன்கண், மலர்ப்பாதம் மனத்தில் வளர்ந்து உள்ளம் உருகச் செய் யவும், தெருவுதொறும் மிக அலறி ஏத்திப் பருகவும் கருணைக் கட லிற் படிவாமாறு அருள் என்பதனால் கட்டறிவொழித்தல் என்னும் பதிகப்பொருள் புலப்படுமாறு காண்க. 9 553 நானேயோ தவஞ்செய்தேன் சிவாயநம எனப்பெற்றேன் தேனாயின் னமுதமுமாய்த் தித்திக்குஞ் சிவபெருமான் தானேவந் தெனதுள்ளம் புகுந்தடியேற் கருள்செய்தான் ஊனாரும் உயிர்வாழ்க்கை ஒறுத்தன்றே வெறுத்திடவே. ப-ரை. தேனாய் இன் அமுதமுமாய் தித்திக்கும் சிவபெருமான்- தேன் போன்றும் இனிய அமுதம் போன்றும் இனிமை தருகின்ற சிவ பெருமான், தானே வந்து எனது உள்ளம் புகுந்து - தானாகவே வலிய எழுந்தருளி வந்து எனது உள்ளத்தில் நெளிப்பட்டருளி, ஊன் ஆரும் உயிர் வாழ்க்கை வெறுத்திட ஒறுத்து - ஊன் நிறைந்த உடலில் உயிர் வாழ்தலை வெறுக்கும்படியாகக் கடிந்து கூறி, அன்றே அடியேற்கு அருள்செய்தான் - அடியேனை ஆட்கொண்ட பொழுதிலேயே அருளுப தேசம் செய்தான், சிவாயநம என பெற்றேன் - அதனால் சிவாயநம என்னும் சூக்குமபஞ்சாக்கரத்தைச் செபிக்கப்பெற்றேன்,நானேயோ தவஞ் செய்தேன் -நானுமோ பெரிய தவத்தைச் செய்தவனாயினேன். தேனாய் இன்னமுதமுமாய்த் தித்திக்கின்ற சிவபெருமான், தானா கவே வலிய எழுந்தருளி வந்து என் உளம் புகுந்து இவ்வுடம்போடு கூடி வாழும் வாழ்க்கையை வெறுக்கும்படியாகக் கடிந்து கூறி அடி யேனை ஆட்கொண்ட பொழுதிலேயே அருளுபதேசம் செய்தான்; அத னால் சிவாயநம எனப் பெற்றேன். நானுமோ பெரிய தவஞ் செ.தவ னாயினேன் என்பதாம்.
திருவேசறவு வாமாறு என்னும் வினையொடு முடிக்க . பருகிய என்னும் வினையி னால் கடலிற் படிவாமாறு என்பதற்குக் கடலிடத்துச் சென்று சேரும் படி எனப் பொருளுரைக்கப்பட்டது . பம 1179 இப்பதிகத்தில் இஃதொழிந் ஏனைய எல்லாத் திருப்பாடல்களி லும் தமக்கு இறைவன் செய்த அருட்டிறத்தினைச் சிறப்பித்துக் கூறிய அடிகள் இத் திருப்பாட்டில் ' மருவினிய மலர்ப்பாதம் ...... படிவாமாறு அருள் ' என வேண்டிக் கொள்ளுமாற்றால் ஆட்கொண்டு அருள் செய்த நீ வீடுபேற்றினைத் தந்தருள வேண்டுமென வேண்டிக் கொள்கின்றார் என்பதுபுலப்படுகின்றது . இதன்கண் மலர்ப்பாதம் மனத்தில் வளர்ந்து உள்ளம் உருகச் செய் யவும் தெருவுதொறும் மிக அலறி ஏத்திப் பருகவும் கருணைக் கட லிற் படிவாமாறு அருள் என்பதனால் கட்டறிவொழித்தல் என்னும் பதிகப்பொருள் புலப்படுமாறு காண்க . 9 553 நானேயோ தவஞ்செய்தேன் சிவாயநம எனப்பெற்றேன் தேனாயின் னமுதமுமாய்த் தித்திக்குஞ் சிவபெருமான் தானேவந் தெனதுள்ளம் புகுந்தடியேற் கருள்செய்தான் ஊனாரும் உயிர்வாழ்க்கை ஒறுத்தன்றே வெறுத்திடவே . - ரை . தேனாய் இன் அமுதமுமாய் தித்திக்கும் சிவபெருமான் தேன் போன்றும் இனிய அமுதம் போன்றும் இனிமை தருகின்ற சிவ பெருமான் தானே வந்து எனது உள்ளம் புகுந்து - தானாகவே வலிய எழுந்தருளி வந்து எனது உள்ளத்தில் நெளிப்பட்டருளி ஊன் ஆரும் உயிர் வாழ்க்கை வெறுத்திட ஒறுத்து - ஊன் நிறைந்த உடலில் உயிர் வாழ்தலை வெறுக்கும்படியாகக் கடிந்து கூறி அன்றே அடியேற்கு அருள்செய்தான் - அடியேனை ஆட்கொண்ட பொழுதிலேயே அருளுப தேசம் செய்தான் சிவாயநம என பெற்றேன் - அதனால் சிவாயநம என்னும் சூக்குமபஞ்சாக்கரத்தைச் செபிக்கப்பெற்றேன் நானேயோ தவஞ் செய்தேன் -நானுமோ பெரிய தவத்தைச் செய்தவனாயினேன் . தேனாய் இன்னமுதமுமாய்த் தித்திக்கின்ற சிவபெருமான் தானா கவே வலிய எழுந்தருளி வந்து என் உளம் புகுந்து இவ்வுடம்போடு கூடி வாழும் வாழ்க்கையை வெறுக்கும்படியாகக் கடிந்து கூறி அடி யேனை ஆட்கொண்ட பொழுதிலேயே அருளுபதேசம் செய்தான் ; அத னால் சிவாயநம எனப் பெற்றேன் . நானுமோ பெரிய தவஞ் செ.தவ னாயினேன் என்பதாம் .