திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

39. திருப்புலம்பல் சிவானந்த முதிர்வு திருவாரூரில் அருளிச்செய்யப்பட்டது திருவாதவூரடிகள் தமக்குள்ள குறையை நீக்கியருளும்படி இறை வன்பால் அழுது வேண்டிக்கொள்ளுதல். இதன் உள்ளுறைப்பொருள் சிவானந்த முதிர்வு என வந்துள்ளது அஃதாவது இறைவன் அருளும் பேரின்பம் நிறைவெய்துதல். அந்நிறைவுக்கு எதிராகவுள்ள குறைகளை நீக்குமாறு வேண்டிக்கொள்ளுதல் புலம்பலாகும். இதனைத் திருவா சகச் சிறப்புடையார், 'கரைந்துருகும் பேரன்புன் கழலிணைக்கே கற்றாவின் மனம்போ லென்றுத் திருந்தும்வகை யெனக்கருள் வெனக்கேட்ட றிருப்புலம்பல குமுள்ளம்" என்பர். இது திருவாரூரில் அருளப்ப ட தென்பதை 'ஓங்கெயில் சூழ் திருவாரூ ருடையானே' என முதற்கண் கூறியமை கொண்டு அறிய லாகும். இது கொச்சகக்கலிப்பா என்னும் செய்யுள் வகையால் அமைந் தது. இத்திருப்பதிகம் மூன்று திருப்பாடல்களையுடையது. கொச்சகக் கலிப்பா திருச்சிற்றம்பலம் 554. பூங்கமலத் தயனொடுமால் அறியாத நெறியானே கோங்கலர்சேர் குவிமுலையாள் கூறாவெண் ணீறாடி ஓங்கெயில்சூழ் திருவாரூ ருடையானே அடியேனின் பூங்கழல்க ளவையல்லா தெவையாதும் புகழேனே. ப-ரை. பூங்கமலத்து அயனொடு மால் அறியாத நெறியானே - அழகிய தாமரைமலரில் தங்கும் நான்முகனும் திருமாலும் அறிய முடி யாத உயர்ந்த ஞானநெறிக்கண் உள்ளவனே, கோங்கு அலர் சேர் குவிமுலையாள் கூறா - கோங்கின் அரும்பையொத்த தனங்களையுடைய உமையம்மையை இடப்பாகத்திலுடையவனே, வெண்ணீறு ஆடி திருவெண்ணீற்றைத் திருமேனி முழுதும் அணிந்தவனே, ஓங்கு எயில் சூழ் திருவாரூர் உடையானே - உயர்ந்த மதில் சூழ்ந்த திருவாரூ ரினை இடமாக உடையவனே, அடியேன் நின் பூங்கழல்கள் அல்லாது- அடியேன் நினது அழகிய வீரக்கழலணிந்த திருவடிகள் இரண்டினையு
39. திருப்புலம்பல் சிவானந்த முதிர்வு திருவாரூரில் அருளிச்செய்யப்பட்டது திருவாதவூரடிகள் தமக்குள்ள குறையை நீக்கியருளும்படி இறை வன்பால் அழுது வேண்டிக்கொள்ளுதல் . இதன் உள்ளுறைப்பொருள் சிவானந்த முதிர்வு என வந்துள்ளது அஃதாவது இறைவன் அருளும் பேரின்பம் நிறைவெய்துதல் . அந்நிறைவுக்கு எதிராகவுள்ள குறைகளை நீக்குமாறு வேண்டிக்கொள்ளுதல் புலம்பலாகும் . இதனைத் திருவா சகச் சிறப்புடையார் ' கரைந்துருகும் பேரன்புன் கழலிணைக்கே கற்றாவின் மனம்போ லென்றுத் திருந்தும்வகை யெனக்கருள் வெனக்கேட்ட றிருப்புலம்பல குமுள்ளம் என்பர் . இது திருவாரூரில் அருளப்ப தென்பதை ' ஓங்கெயில் சூழ் திருவாரூ ருடையானே ' என முதற்கண் கூறியமை கொண்டு அறிய லாகும் . இது கொச்சகக்கலிப்பா என்னும் செய்யுள் வகையால் அமைந் தது . இத்திருப்பதிகம் மூன்று திருப்பாடல்களையுடையது . கொச்சகக் கலிப்பா திருச்சிற்றம்பலம் 554 . பூங்கமலத் தயனொடுமால் அறியாத நெறியானே கோங்கலர்சேர் குவிமுலையாள் கூறாவெண் ணீறாடி ஓங்கெயில்சூழ் திருவாரூ ருடையானே அடியேனின் பூங்கழல்க ளவையல்லா தெவையாதும் புகழேனே . - ரை . பூங்கமலத்து அயனொடு மால் அறியாத நெறியானே - அழகிய தாமரைமலரில் தங்கும் நான்முகனும் திருமாலும் அறிய முடி யாத உயர்ந்த ஞானநெறிக்கண் உள்ளவனே கோங்கு அலர் சேர் குவிமுலையாள் கூறா - கோங்கின் அரும்பையொத்த தனங்களையுடைய உமையம்மையை இடப்பாகத்திலுடையவனே வெண்ணீறு ஆடி திருவெண்ணீற்றைத் திருமேனி முழுதும் அணிந்தவனே ஓங்கு எயில் சூழ் திருவாரூர் உடையானே - உயர்ந்த மதில் சூழ்ந்த திருவாரூ ரினை இடமாக உடையவனே அடியேன் நின் பூங்கழல்கள் அல்லாது அடியேன் நினது அழகிய வீரக்கழலணிந்த திருவடிகள் இரண்டினையு