திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருப்புலம்பல் 'மூவிலை யொருதாட் சூலமேந்துதல் மூவரும் யானென மொழிந்த வாறே" 556 11851 11-ந் திரு: ஒருபாவொருபஃது 6 என வருதலுங் காண்க இப்படையினை இறைவன் வலக்கரத்தில் தாங்கியிருத்தல் 'பொருதலை மூவிலை வேல் வல னேந்திப் பொலி பவனே' (நீத் 9) என அடிகள் பிறிதோரிடத்துக் கூறுதலினாலுமறிசு. பசுபதி - பசுக்களுக்குத் தலைவன்; பசு - உயிர். அது பந்தமுடைமை யால் பசு என்னும் பெயர்த்தாயிற்று. வெள்ளை விடை - தருமக் கடவுளாகிய வெள்ளை விடை"வீறார் தருமக் கடவுள் சின வெள் விடை" (காஞ்சி. தழுவக் குழைந்த 79) என வருதலுங் காண்க.. உறுதுணை - உற்றதுணை; சிறந்த துணை. மற்று - பிறிது பொருளில் வந்தது. உறுதுணை மற்றறியேன் எனக் கூறினும் அந்நிலைமை பேராதிருக்க அருள் செய்ய வேண்டும் என்பது குறிப்பெச்சமாகும். இதன்கண், 'உடையானே உன்னையல்லா தறுதுணை மற்றறி யேன்" அந்நிலைமை பேராதிருக்க அருள் செய்ய வேண்டும் என்ப தனால் சிவானந்த முதிர்வு என்னும் பதிகப் பொருள் போதருதல் காண்க. உற்றாரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் பே வேண்டேன் கற்றாரை யான்வேண்டேன் கற்பனவும் இனியகம்யும் குற்றாலத் தமர்ந்துறையுங் கூத்தாவுன் குரைகழற்கே கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே. 2 ப-ரை குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா - திருக்குற்றாலம் என்னும் தலத்தில் விரும்பி எழுந்தருளியிருக்கின்ற கூத்தப் பெரு மானே; உற்றாரை யான் வேண்டேன் -உறவினரை யான் விரும் பேன். ஊர் வேண்டேன் - ஊரை விரும்பேன், பேர் வேண்டேன் - புகழை விரும்பேன், சுற்றாரை யான் வேண்டேன் - திருவடி ஞான மின்றிக் கலைஞான முடையவரை யான் விரும்பேன், கற்பனவும் இனி அமையும் - கற்றற்குரியவையும் இனிப் போதுமானவையே. உன் குரை கழற்கே கன்று ஆவின் மனம் போல கசிந்து உருக வேண்டுவன்- நினது ஒலிக்கின்ற வீரக் கழலணிந்த திருவடிகளின் பொருட்டே கன்றையுடைய பசுவின் மனம் கசிந்துருகுதல் போலக் கசிந்து உருகுதலை யான் நின்பால் வேண்டுதல் செய்கின்றேன் என இரங்கிக் கேட்டுக் கொள்வாராயினர். குற்றாலத்தமர்ந்துறையும் கூத்தா, உற்றாரை யான் வேண்டேன்; ஊர்வேண் டன்; கற்றாரை யான்வேண்டேன்; கற்றற் குரியவையும் 105
திருப்புலம்பல் ' மூவிலை யொருதாட் சூலமேந்துதல் மூவரும் யானென மொழிந்த வாறே 556 11851 11 - ந் திரு : ஒருபாவொருபஃது 6 என வருதலுங் காண்க இப்படையினை இறைவன் வலக்கரத்தில் தாங்கியிருத்தல் ' பொருதலை மூவிலை வேல் வல னேந்திப் பொலி பவனே ' ( நீத் 9 ) என அடிகள் பிறிதோரிடத்துக் கூறுதலினாலுமறிசு . பசுபதி - பசுக்களுக்குத் தலைவன் ; பசு - உயிர் . அது பந்தமுடைமை யால் பசு என்னும் பெயர்த்தாயிற்று . வெள்ளை விடை - தருமக் கடவுளாகிய வெள்ளை விடை வீறார் தருமக் கடவுள் சின வெள் விடை ( காஞ்சி . தழுவக் குழைந்த 79 ) என வருதலுங் காண்க .. உறுதுணை - உற்றதுணை ; சிறந்த துணை . மற்று - பிறிது பொருளில் வந்தது . உறுதுணை மற்றறியேன் எனக் கூறினும் அந்நிலைமை பேராதிருக்க அருள் செய்ய வேண்டும் என்பது குறிப்பெச்சமாகும் . இதன்கண் ' உடையானே உன்னையல்லா தறுதுணை மற்றறி யேன் அந்நிலைமை பேராதிருக்க அருள் செய்ய வேண்டும் என்ப தனால் சிவானந்த முதிர்வு என்னும் பதிகப் பொருள் போதருதல் காண்க . உற்றாரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் பே வேண்டேன் கற்றாரை யான்வேண்டேன் கற்பனவும் இனியகம்யும் குற்றாலத் தமர்ந்துறையுங் கூத்தாவுன் குரைகழற்கே கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே . 2 - ரை குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா - திருக்குற்றாலம் என்னும் தலத்தில் விரும்பி எழுந்தருளியிருக்கின்ற கூத்தப் பெரு மானே ; உற்றாரை யான் வேண்டேன் -உறவினரை யான் விரும் பேன் . ஊர் வேண்டேன் - ஊரை விரும்பேன் பேர் வேண்டேன் - புகழை விரும்பேன் சுற்றாரை யான் வேண்டேன் - திருவடி ஞான மின்றிக் கலைஞான முடையவரை யான் விரும்பேன் கற்பனவும் இனி அமையும் - கற்றற்குரியவையும் இனிப் போதுமானவையே . உன் குரை கழற்கே கன்று ஆவின் மனம் போல கசிந்து உருக வேண்டுவன்- நினது ஒலிக்கின்ற வீரக் கழலணிந்த திருவடிகளின் பொருட்டே கன்றையுடைய பசுவின் மனம் கசிந்துருகுதல் போலக் கசிந்து உருகுதலை யான் நின்பால் வேண்டுதல் செய்கின்றேன் என இரங்கிக் கேட்டுக் கொள்வாராயினர் . குற்றாலத்தமர்ந்துறையும் கூத்தா உற்றாரை யான் வேண்டேன் ; ஊர்வேண் டன் ; கற்றாரை யான்வேண்டேன் ; கற்றற் குரியவையும் 105